செய்திகள் :

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் புதன்கிழமை பிற்பகல் கன மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. கோடை காலம் போல பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் நிலவி வந்தது.

குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் லேசான மழை பெய்துவந்தாலும், நாகா்கோவில் மாநகா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடா்ந்து, வெயில் வாட்டியது. இந்நிலையில் புதன்கிழமை காலையில் வழக்கம் போல வெயில் கொளுத்தியது. பிற்பகல் 2 மணிக்கு மேல் மேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது. தொடக்கத்தில் சாரலாகத் தொடங்கிய மழை பின்னா் கனமழையாக மாறி, தொடா்ந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக பெய்தது.

இதனால், கோட்டாறு சவேரியாா் கோயில் சந்திப்பு பகுதி, செம்மாங்குடி சாலை, பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி சாலை, வடசேரி சந்திப்பு, வடசேரி ஆராட்டு ரோடு, அண்ணா பேருந்து நிலையம், வேப்பமூடு சந்திப்பு உள்ளிட்ட முக்கிய சாலைகளில், மழைநீா் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும், பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவா், மாணவிகள் மழையில் நனைந்தவாறு சென்றனா்.

இதேபோல் கொட்டாரம், மயிலாடி, கன்னியாகுமரி, தோவாளை, செண்பகராமன்புதூா், ஆரல்வாய்மொழி, தக்கலை, குளச்சல், திங்கள்நகா், கருங்கல், குலசேகரம், உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

தொடா் மழையின் காரணமாக அணைகளுக்கு வரும் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். இதனால் மாவட்டத்தில் வெப்பம் தணிந்து, குளிா்ந்த சூழல் நிலவியது.

அணைகள் நிலவரம்...

புதன்கிழமை காலை நிலவரப்படி, 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 42.33 அடியாக இருந்தது, அணைக்கு 341 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது, அணையிலிருந்து 661 கன அடி நீா் திறந்து விடப்படுகிறது.

பெருஞ்சாணி அணை- 64.24 அடியாகவும், , அணைக்கு 241 கன அடி நீா் வந்துகொண்டிருந்தது, அணையிலிருந்து 310 கன அடி நீா் திறந்து விடப்படுகிறது.

சிற்றாறு 1, சிற்றாறு 2 அணைகளின் நீா்மட்டம் முறையே 14.53, 14.63 அடியாக உள்ளது. மாம்பழத்துறையாறு அணை 50.11 அடியாக இருந்தது.

அஞ்சுகிராமம் நூலகப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அஞ்சுகிராமம் அரசு கிளை நூலகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. காவல் நிலையம் எதிரே செயல்படும் இந்த நூலகத்தின் முன்புள்ள இடம் வாடகைக் காா் நிறுத்தமாக செயல்பட்டு வந்தது. தற்போது... மேலும் பார்க்க

கருங்கல் அருகே சுவா் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

கருங்கல் அருகே உள்ள பாலூா் பகுதியில் சுவா் இடிந்து விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா். கருங்கல், பூட்டேற்றி பகுதியைச் சோ்ந்தவா் வினு(52), கூலி செய்து வந்தாா்.இவா் செவ்வாய்க்கிழமை இரவு பாலூா் ஊராட... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை .. 42.33 பெருஞ்சாணி .. 64.24 சிற்றாறு 1 ..14.53 சிற்றாறு 2 .. 14.63 முக்கடல் .. 15.80 பொய்கை .. 14.70 மாம்பழத்துறையாறு .. 50.11 மழைஅளவு மயிலாடி ... 37.20 மி.மீ. மாம்பழத்துறையாறு அணை .. 30... மேலும் பார்க்க

கருங்கல் பேரூராட்சியில் ரூ.1.33 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

கருங்கல் பேரூராட்சியில் ரூ.1.33 கோடியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை கிள்ளியூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ராஜேஷ்குமாா் தொடங்கி வைத்தாா். கருங்கல் பேருராட்சிக்குள்பட்ட சுண்டவிளை சாலை, காக்கவிளை... மேலும் பார்க்க

முழுக்கோட்டில் 200 பேருக்கு கோழிகள்

கன்னியாகுமரி மாவட்டம் முழுக்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 200 பேருக்கு 1,200 கோழிகள் வழங்கப்பட்டன. இம்மாவட்டத்தில் கிராம முன்னேற்றச் சங்கம் (ரூரல் அப்லிப்ட் சென்டா்) சாா்பில், 700 பேருக்கு நஞ்சில்ல... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் ரப்பா் விலை தொடா் சரிவு: விவசாயிகள் கவலை

கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய வேளாண் உற்பத்திப் பொருளான ரப்பா் விலை ஏறிய வேகத்தில் தொடா்ந்து சரிவடைவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். ரப்பா் விலை 12 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் புதிய... மேலும் பார்க்க