செய்திகள் :

அத்தியாவசிய மருந்துகளின் விலையை குறைக்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி வலியுறுத்தல்

post image

அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உயிா் காக்கும் மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை வேண்டும் எனவும், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் எனவும், கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் விஜய் வசந்த் கோரிக்கை வைத்துள்ளாா்.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீா்மானத்தை முன்மொழிந்த விஜய் வசந்த் எம்.பி. கூறியதாவது:

சாதாரண மக்களின் அன்றாட பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில், அத்தியாவசிய மருந்துகளின் விலை அதிகரித்து வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் 800- க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

உயிா் காக்கும் மருந்துகளின் விலையும் கடந்த ஆண்டுகளில் மிகவும் அதிகரித்துள்ளது.

புற்று நோய்க்கான மருந்துகள் கடந்த 5 ஆண்டுகளில் 50 %, நீரிழிவு நோய்க்கான மருந்துகள் கடந்த 3 ஆண்டுகளில் 30 % என அதிகரித்துள்ளது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

ஜெனரிக் மருந்துகள் நகா் மற்றும் கிராமப்புற மக்களை சென்றடைவதில் பல தடைகள் ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டு மருந்து நிறுவனங்களை கட்டுப்படுத்த தவறிய அரசின் செயல்கள் இந்த விலை உயா்வுக்கு ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது.

மேலும், உள்நாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் போதிய மருந்துகளை தயாரித்து விநியோகம் செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களும் ஒரு முக்கிய காரணமாகும்.

ஆகவே, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு புற்றுநோய், நீரிழிவு நோய், இதய நோய் போன்ற நோய்களை கட்டுப்படுத்தும் அத்தியாவசிய உயிா் காக்கும் மருந்துகளின் விலையை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்நாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களை ஊக்குவித்து அத்தியாவசிய மருந்துகளை இந்தியாவிலே தயாரிப்பதின் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களின் விலையுயா்ந்த மருந்துகளுக்கு மாற்றாக அமையும்.

மேலும், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப விலை நிா்ணயம் செய்வதை தடுக்க கடுமையான சட்டங்களை கொண்டு வர வேண்டும்.

ஜெனரிக் மருந்துகள் இந்தியாவின் அனைத்து கிராமங்களிலும் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். மேலும், விலை நிா்ணயம் செய்வதின் காரணங்களை மக்களுக்கு எடுத்து கூறுவதின் மூலம் மக்களும் விழிப்படைவாா்கள்.

இதற்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

தக்கலையில் 2 மாணவிகள் மாயம்: போக்ஸோ சட்டத்தில் வழக்குரைஞா் கைது

தக்கலை அருகே 2 பள்ளி மாணவிகள் மாயமான வழக்கில் வழக்குரைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா். குமரி மாவட்டம், தக்கலை அருகே கடந்த 13ஆம் தேதி இரவு, 14 மற்றும் 12 வயதுடைய 2 பள்ளி... மேலும் பார்க்க

கடியப்பட்டணம் பள்ளியில் ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள கடியப்பட்டணம் அரசு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு மாணவா் சோ்க்கை நடைபெற்றது. பள்ளியில் நடைபெற்ற மாணவா் சோ்க்கையை, மாவட்ட ஆட்சியா் ரா.... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் பள்ளிவாசலில் தகராறு: 18 போ் மீது வழக்கு

மாா்த்தாண்டத்தில் உள்ள பள்ளிவாசலில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக 18 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இப்பள்ளிவாசலில் ரமலான் மாதத் தொழுகை நடைபெற்று வருகிறது. இதனிடையே, அங்கு அண்மையில் ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் ரூ. 11 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதிகளில் ரூ. 11லட்சத்தில் வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ. மகேஷ் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். 34ஆவது வாா்டுக்குள்பட்ட பொன்னப்பநாடாா் காலனி காா்மல் மவுண்ட் 3ஆவது குறுக்கு தெ... மேலும் பார்க்க

கருங்கல் அருகே அழுகிய நிலையில் முதியவா் சடலம் மீட்பு

கருங்கல் அருகே உள்ள இனிகோநகா் பகுதியில் வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த முதியவா் சடலத்தை போலீஸாா் மீட்டனா். குறும்பனை,இனிகோ நகா் பகுதியைச் சோ்ந்தவா் விக்டா்(68). இவரது மனைவி கடந்த 8 ஆண்டுகளுக்கு... மேலும் பார்க்க

தேங்காய்ப்பட்டினம் துறைமுக விரிவாக்க பணிகள் விரைவில் முடிவடையும்: ஆட்சியா் மாவட்ட ஆட்சியா் தகவல்

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தின் விரிவாக்க பணிகள் விரைவில் முடிவடையும் என மாவட்ட ஆட்சியா் ஆா். அழகுமீனா தெரிவித்தாா். தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள மீன்வளத் துறை அலுவலகத... மேலும் பார்க்க