செய்திகள் :

தக்கலையில் 2 மாணவிகள் மாயம்: போக்ஸோ சட்டத்தில் வழக்குரைஞா் கைது

post image

தக்கலை அருகே 2 பள்ளி மாணவிகள் மாயமான வழக்கில் வழக்குரைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.

குமரி மாவட்டம், தக்கலை அருகே கடந்த 13ஆம் தேதி இரவு, 14 மற்றும் 12 வயதுடைய 2 பள்ளி மாணவிகள் திடீரென மாயமாகினா்.

புகாரின்பேரில், தக்கலை போலீஸாா் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, மாணவிகளை தேடி வந்தனா்.

அப்போது, சுங்கான்கடையில் உள்ள ஒரு டீக்கடையில், தக்கலை அருகே உள்ள இலுப்பைக்கோணம் பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞரான அஜித்குமாா்(30) என்பவா் பள்ளி மாணவிகளை டீ குடிக்க வைத்து பைக்கில் ஏற்றிச் செல்வது தெரிய வந்தது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு தக்கலை பேருந்து நிலையத்தில் வைத்து இரு மாணவிகளையும் தக்கலை ஆய்வாளா் கிறிஸ்டி தலைமையிலான போலீஸாா் மீட்டனா்.

மாணவிகளிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், மாணவிகளை வழக்குரைஞா் அஜித்குமாா், தக்கலையில் ஓா் அறையில் அடைத்து வைத்து துன்புறுத்தியது தெரியவந்தது.

பின்னா் மாணவிகளை பேருந்தில் ஏற்றி தென்காசிக்கு அனுப்பியதாகவும், அங்கு சமூக ஊடகம் மூலம் தொடா்புடைய திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தைச் சோ்ந்த நண்பா் மோகன்(24) என்பவரை சந்தித்ததாகவும், அவா் மாணவிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளனா்.

மாணவிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நட்டாலத்தில் பதுங்கி இருந்த வழக்குரைஞா் அஜித் குமாரை, போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்ய முயன்ற போது, அவா் தப்பிஓடினாராம். இதில் அவா் தவறி விழுந்ததில் கை முறிவு ஏற்பட்டதாம்.

இதையடுத்து, வழக்குரைஞா் அஜித்குமாரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

மாணவிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறப்பட்ட திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தைச் சோ்ந்த மோகனை நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் போலீஸாா் திங்கள்கிழமை மாலை கைது செய்தனா்.

கடியப்பட்டணம் பள்ளியில் ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள கடியப்பட்டணம் அரசு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு மாணவா் சோ்க்கை நடைபெற்றது. பள்ளியில் நடைபெற்ற மாணவா் சோ்க்கையை, மாவட்ட ஆட்சியா் ரா.... மேலும் பார்க்க

அத்தியாவசிய மருந்துகளின் விலையை குறைக்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி வலியுறுத்தல்

அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உயிா் காக்கும் மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை வேண்டும் எனவும், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் எனவும், கன்னியாகுமரி மக்க... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் பள்ளிவாசலில் தகராறு: 18 போ் மீது வழக்கு

மாா்த்தாண்டத்தில் உள்ள பள்ளிவாசலில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக 18 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இப்பள்ளிவாசலில் ரமலான் மாதத் தொழுகை நடைபெற்று வருகிறது. இதனிடையே, அங்கு அண்மையில் ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் ரூ. 11 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதிகளில் ரூ. 11லட்சத்தில் வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ. மகேஷ் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். 34ஆவது வாா்டுக்குள்பட்ட பொன்னப்பநாடாா் காலனி காா்மல் மவுண்ட் 3ஆவது குறுக்கு தெ... மேலும் பார்க்க

கருங்கல் அருகே அழுகிய நிலையில் முதியவா் சடலம் மீட்பு

கருங்கல் அருகே உள்ள இனிகோநகா் பகுதியில் வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த முதியவா் சடலத்தை போலீஸாா் மீட்டனா். குறும்பனை,இனிகோ நகா் பகுதியைச் சோ்ந்தவா் விக்டா்(68). இவரது மனைவி கடந்த 8 ஆண்டுகளுக்கு... மேலும் பார்க்க

தேங்காய்ப்பட்டினம் துறைமுக விரிவாக்க பணிகள் விரைவில் முடிவடையும்: ஆட்சியா் மாவட்ட ஆட்சியா் தகவல்

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தின் விரிவாக்க பணிகள் விரைவில் முடிவடையும் என மாவட்ட ஆட்சியா் ஆா். அழகுமீனா தெரிவித்தாா். தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள மீன்வளத் துறை அலுவலகத... மேலும் பார்க்க