செய்திகள் :

`அரசியலமைப்பு தான் அனைத்திற்கும் பிரதானம்..!' - துணை ஜனாதிபதிக்கு திருச்சி சிவா கண்டனம்

post image

"அரசியல் சாசனப் பிரிவு 142, ஜனநாயக சக்தியின் மீது நீதித்துறை தொடுக்கும் அணு ஏவுகணையாக மாறிவிட்டது. இது 24x7 செயல்பட்டு வருகிறது. ஒரு ஜனாதிபதியை உத்தரவிடும் சூழ்நிலையை நாம் ஏற்றுகொள்ள முடியாது.

அரசியலமைப்பின் பிரிவுகளில் என்ன சொல்லி இருக்கிறது என்பதை சொல்வது தான் உங்களுக்கு அரசியலமைப்பின் கீழ் கொடுக்கப்பட்ட ஒரே உரிமை" என்று உச்ச நீதிமன்றத்தை சாடி துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் பேசியிருந்தார்.

முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் ஆர்ட்டிக்கிள் 142 -ஐ பயன்படுத்தி கிடப்பில் இருந்த 10 மசோதக்களுக்கு ஒப்புதல் வழங்கி இருந்தது.

அதற்கு பதிலளிக்கு விதமாக, திமுக எம்.பி திருச்சி சிவா, "அரசியலமைப்பின் கீழ், நிர்வாகம், சட்டமன்றம், நீதி ஆகியவை தனித்தனி அதிகாரங்களை கொண்டுள்ளது. அதன் அடிப்படையில், இந்த மூன்றும் இயங்கினாலும், அரசியலமைப்பு தான் அனைத்தையும் விட மிக பிரதானம்.

சமீபத்தில், அரசியலமைப்பு பிரிவு 142-ன் கீழ் உச்ச நீதிமன்றம் கவர்னர்கள் மற்றும் ஜனாதிபதி குறித்து கொடுத்த தீர்ப்பில், 'அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் உட்பட யாரும் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதோவை தாமதப்படுத்தவோ, நிறுத்திய வைக்கவோ முடியாது' என்பது தெளிவாகிறது. அப்படி செய்தால், அது அரசியலமைப்பிற்கு எதிரானது.

இந்தத் தீர்ப்பு குறித்தான துணை ஜனாதிபதியின் விமர்சனம் நியாயமில்லாதது. இந்தியாவில் 'சட்டத்தின் ஆட்சி' தான் நடக்கிறது என்பதை ஒவ்வொரு குடிமகனும் அறிந்திருக்க வேண்டும்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இழுத்தடித்த ஹைகோர்ட்; இரவோடு இரவாகத் தர்காவை இடித்த மகா அரசு; சுப்ரீம்கோர்ட் போட்ட தடை;என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் ஹஸ்ரத் சாத்பீர் சயீத் பாபா என்ற தர்கா இருந்தது. இத்தர்கா சட்டவிரோதமானது என்று மும்பை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் 12ம் தேதி தெரிவித்து இருந்தது.இதையடுத்து தர்காவை இடிக்கக... மேலும் பார்க்க

Article 142 : `ஜக்தீப் தன்கரை நீக்க MP-க்கள் தீர்மானம் கொண்டுவர வேண்டும்’ - பிரின்ஸ் கஜேந்திர பாபு

ஆளுநர் ஆர்.என். ரவிக்கெதிராக தமிழக அரசு தொடுத்த வழக்கில், உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 8-ம் தேதி அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 142-ஐப் பயன்படுத்தி 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து தீர்ப்பு வழங்கியது.அத... மேலும் பார்க்க

TVK : 'இந்தியாவுலயே பெரிய படை நம்மளோடதுதான்!' - ஐ.டி விங் கூட்டத்தில் விஜய் பேச்சு

'தவெக ஐ.டி விங்!'தவெகவின் ஐ.டி விங் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மற்றும் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் மு... மேலும் பார்க்க

Waqf Bill: பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன 'போரா முஸ்லீம்கள்' - யார் இவர்கள்?

மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள வக்பு சட்ட திருத்த மசோதா நாடுமுழுவதும் பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்புகளைச் சந்தித்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமியர் அமைப்புகள் வக்... மேலும் பார்க்க

"என் தந்தைக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் ஒருவர்..." - மதிமுக பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகல்

மதிமுக நிர்வாக குழு கூட்டம் நாளை (ஏப்ரல் 20) சென்னையில் நடைபெறும் நிலையில், கட்சியின் முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக வைகோவின் மகனும், திருச்சி எம்.பி-யுமான துரை வைகோ அறிக்கை வெளியிட்டிர... மேலும் பார்க்க