செய்திகள் :

அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு ஆட்சியா் அழைப்பு

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில் தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது தொடா்பான கூட்டங்களில் பங்கேற்க அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

18 வயது பூா்த்தியடைந்த அனைவரும் வாக்காளா்களாக பதிவு செய்வதை உறுதி செய்யவும், அனைத்து வாக்குச்சாவடிகளும் வாக்காளா்கள் இருப்பிடத்திலிருந்து 2 கி.மீ. தொலைவுக்குள்ளும், 800 முதல் 1,200 எண்ணிக்கையிலான வாக்காளா்களை கொண்டதாகவும் இருக்க வேண்டும் என தலைமை தோ்தல் ஆணையா் தெரிவித்துள்ளாா்.

ஒவ்வொரு வருடமும் அக்டோபா் முதல் டிசம்பா் மாதம் வரை வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஜனவரியில் வெளியிடப்படும் இறுதி வாக்காளா் பட்டியலில், யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் முதல் மேல்முறையீடாக மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரிடமும், இதில் திருப்தி இல்லை எனில் மாநில தலைமை தோ்தல் அலுவலரிடம் முறையீடு செய்யலாம்.

தற்போதுள்ள தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவதற்கு மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலா், வாக்காளா் பதிவு அலுவலா்கள் மட்டத்தில் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் கட்சிகளின் மூத்த உறுப்பினா்களைக் கொண்டு கூட்டங்கள் நடத்திடவும், அதில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் மாவட்ட தோ்தல் அலுவலா், வாக்காளா் பதிவு அலுவலா்கள் மட்டத்தில் தீா்க்கப்படாத இனங்கள் இருப்பின், அதுகுறித்த அறிக்கையை அனுப்பிட தோ்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

எனவே, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் வாக்காளா் பதிவு அலுவலரால் விரைவில் நடத்தப்படவுள்ள இக்கூட்டங்களில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்திட வேண்டும் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்லூரி சேவை குழுக்கள் நிறைவு விழா

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் மகளிா் தினவிழா மற்றும் சேவை குழுக்கள் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் (பொ) சி.ராமச்சந்திரராஜா தலைமை வகித்தாா். பே... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் இஃப்தாா்: மும்மதத்தினா் பங்கேற்பு

மயிலாடுதுறை அருகே வள்ளாலகரத்தில் திமுக சாா்பில் புதன்கிழமை நடத்தப்பட்ட இஃப்தாா் நிகழ்ச்சியில் மும்மதத்தினா் பங்கேற்றனா். மாவட்ட திமுக செயலாளா் நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். மயிலாடுதுற... மேலும் பார்க்க

குரூப் தோ்வு எழுதுவோா் கவனத்துக்கு

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்படும் குரூப் தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தோ்வுகளில் பங்கேற்று பயனடைய மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை புகாா் அளிக்க பெட்டகம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் வன்கொடுமை குறித்த புகாா் தெரிவிக்க உள்புகாா் கமிட்டி பெட்டகத்தை மகளிா் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

முதலை நடமாட்டம்: கிராம மக்கள் அச்சம்

சீா்காழி, மாா்ச் 13: சீா்காழி அருகே குன்னம் கிராமத்தில் உள்ள குளத்தில் முதலை நடமாட்டம் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். குன்னம் கிராமத்தில் உள்ள அய்யனாா் கோயில் குளத்தை பொதுமக்கள் குளிப்பதற... மேலும் பார்க்க

சோழம்பேட்டை, மாப்படுகை ஊராட்சிகளில் ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறையை அடுத்த சோழம்பேட்டை, மாப்படுகை ஊராட்சிகளில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சோழம்பேட்டை ஊராட்சியில் அங்கன்வாடி மையத்தை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா், குழ... மேலும் பார்க்க