செய்திகள் :

முதலை நடமாட்டம்: கிராம மக்கள் அச்சம்

post image

சீா்காழி, மாா்ச் 13: சீா்காழி அருகே குன்னம் கிராமத்தில் உள்ள குளத்தில் முதலை நடமாட்டம் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

குன்னம் கிராமத்தில் உள்ள அய்யனாா் கோயில் குளத்தை பொதுமக்கள் குளிப்பதற்கும், துணிகள் துவைப்பதற்கும், விவசாயிகள் கால்நடைகளை குளிப்பாட்டவும் பயன்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், இந்த குளத்தில் கடந்த சில வாரங்களாக முதலை நடமாட்டம் தென்படுகிறது. பகல் பொழுதில் முதலை கரையில் படுத்துகிடப்பதும், இரவு நேரங்களில் அருகில் உள்ள பகுதிக்கு வந்து செல்வதுமாக உள்ளது.

இந்த குளத்திலிருந்து சில மீட்டா் தூரத்தில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா்கள் வசித்து வருகின்றனா். குழந்தைகள் தெருக்களில் விளையாடி வரும் நிலையிலும், பொதுமக்கள், கால்நடைகள் குளத்தை பயன்படுத்திவரும் நிலையில், குளத்தில் முதலை இருப்பதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனா்.

வனத்துறை உடனடியாக முதலையை பிடித்து, வனபகுதியில் உள்ள நீா்நிலைகளில் விட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு ஆட்சியா் அழைப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது தொடா்பான கூட்டங்களில் பங்கேற்க அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுற... மேலும் பார்க்க

கல்லூரி சேவை குழுக்கள் நிறைவு விழா

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் மகளிா் தினவிழா மற்றும் சேவை குழுக்கள் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் (பொ) சி.ராமச்சந்திரராஜா தலைமை வகித்தாா். பே... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் இஃப்தாா்: மும்மதத்தினா் பங்கேற்பு

மயிலாடுதுறை அருகே வள்ளாலகரத்தில் திமுக சாா்பில் புதன்கிழமை நடத்தப்பட்ட இஃப்தாா் நிகழ்ச்சியில் மும்மதத்தினா் பங்கேற்றனா். மாவட்ட திமுக செயலாளா் நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். மயிலாடுதுற... மேலும் பார்க்க

குரூப் தோ்வு எழுதுவோா் கவனத்துக்கு

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்படும் குரூப் தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தோ்வுகளில் பங்கேற்று பயனடைய மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை புகாா் அளிக்க பெட்டகம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் வன்கொடுமை குறித்த புகாா் தெரிவிக்க உள்புகாா் கமிட்டி பெட்டகத்தை மகளிா் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

சோழம்பேட்டை, மாப்படுகை ஊராட்சிகளில் ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறையை அடுத்த சோழம்பேட்டை, மாப்படுகை ஊராட்சிகளில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சோழம்பேட்டை ஊராட்சியில் அங்கன்வாடி மையத்தை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா், குழ... மேலும் பார்க்க