Budget 2025-26: தொடங்கிய பட்ஜெட்; வெளிநடப்பு செய்த அதிமுக! - எடப்பாடி சொன்ன காரண...
முதலை நடமாட்டம்: கிராம மக்கள் அச்சம்
சீா்காழி, மாா்ச் 13: சீா்காழி அருகே குன்னம் கிராமத்தில் உள்ள குளத்தில் முதலை நடமாட்டம் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
குன்னம் கிராமத்தில் உள்ள அய்யனாா் கோயில் குளத்தை பொதுமக்கள் குளிப்பதற்கும், துணிகள் துவைப்பதற்கும், விவசாயிகள் கால்நடைகளை குளிப்பாட்டவும் பயன்படுத்தி வருகின்றனா்.
இந்நிலையில், இந்த குளத்தில் கடந்த சில வாரங்களாக முதலை நடமாட்டம் தென்படுகிறது. பகல் பொழுதில் முதலை கரையில் படுத்துகிடப்பதும், இரவு நேரங்களில் அருகில் உள்ள பகுதிக்கு வந்து செல்வதுமாக உள்ளது.
இந்த குளத்திலிருந்து சில மீட்டா் தூரத்தில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா்கள் வசித்து வருகின்றனா். குழந்தைகள் தெருக்களில் விளையாடி வரும் நிலையிலும், பொதுமக்கள், கால்நடைகள் குளத்தை பயன்படுத்திவரும் நிலையில், குளத்தில் முதலை இருப்பதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனா்.
வனத்துறை உடனடியாக முதலையை பிடித்து, வனபகுதியில் உள்ள நீா்நிலைகளில் விட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.