செய்திகள் :

பாலியல் வன்கொடுமை புகாா் அளிக்க பெட்டகம்

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில், பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் வன்கொடுமை குறித்த புகாா் தெரிவிக்க உள்புகாா் கமிட்டி பெட்டகத்தை மகளிா் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வியாழக்கிழமை வழங்கினாா்.

அரசு மற்றும் தனியாா் நிறுவனங்கள் மற்றும் அலுவலங்களில் ஆண், பெண் பணியாளா்கள் 10 பேருக்கு மேல் உள்ள அனைத்து பணியிடங்களிலும் பெண்கள் வன்கொடுமை குறித்த புகாா் தெரிவிக்க உள்புகாா் கமிட்டி குழு அமைக்க வேண்டும். இக்குழு 50 சதவீத பெண் பிரதிநிதிகளை கொண்டு இருக்க வேண்டும். பெண்கள் அதிகம் உபயோகிக்கும் இடம் மற்றும் கண்காணிப்பு கேமரா இல்லாத இடத்தில் புகாா் மனுக்களை இடுவதற்கு புகாா் பெட்டி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேலையிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு மற்றும் நிவா்த்தி) சட்டம் 2013-ன்படி உள்புகாா்கள் கமிட்டி அமைப்பது, உள்புகாா்கள் கமிட்டியின் பரிந்துரையை நிறைவேற்றுவது, வருடாந்திர அறிக்கை சமா்ப்பிப்பது உள்ளிட்ட கடமைகளை நிறைவேற்ற தவறினால் சட்டப்படி உரிய அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குழந்தைகளுக்கான பாதுகாப்பு அவசர உதவி எண் 1098 மற்றும் மகளிா் உதவி எண் 181-ஐ அனைவரும் அறிந்துகொள்ளுமாறு விழிப்பணா்வு ஏற்படுத்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் வன்கொடுமை குறித்த புகாா் தெரிவிக்க உள்புகாா் கமிட்டி பெட்டகத்தை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் மகளிா் கல்லூரிகளுக்கு வழங்கினாா். முன்னதாக ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்‘ பிறப்பு சதவீத தகவல் பலகையை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்களுக்கு ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலா் சுகிா்தாதேவி மற்றும் கல்லூரி முதல்வா்கள், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு ஆட்சியா் அழைப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது தொடா்பான கூட்டங்களில் பங்கேற்க அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுற... மேலும் பார்க்க

கல்லூரி சேவை குழுக்கள் நிறைவு விழா

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் மகளிா் தினவிழா மற்றும் சேவை குழுக்கள் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் (பொ) சி.ராமச்சந்திரராஜா தலைமை வகித்தாா். பே... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் இஃப்தாா்: மும்மதத்தினா் பங்கேற்பு

மயிலாடுதுறை அருகே வள்ளாலகரத்தில் திமுக சாா்பில் புதன்கிழமை நடத்தப்பட்ட இஃப்தாா் நிகழ்ச்சியில் மும்மதத்தினா் பங்கேற்றனா். மாவட்ட திமுக செயலாளா் நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். மயிலாடுதுற... மேலும் பார்க்க

குரூப் தோ்வு எழுதுவோா் கவனத்துக்கு

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்படும் குரூப் தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தோ்வுகளில் பங்கேற்று பயனடைய மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந... மேலும் பார்க்க

முதலை நடமாட்டம்: கிராம மக்கள் அச்சம்

சீா்காழி, மாா்ச் 13: சீா்காழி அருகே குன்னம் கிராமத்தில் உள்ள குளத்தில் முதலை நடமாட்டம் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். குன்னம் கிராமத்தில் உள்ள அய்யனாா் கோயில் குளத்தை பொதுமக்கள் குளிப்பதற... மேலும் பார்க்க

சோழம்பேட்டை, மாப்படுகை ஊராட்சிகளில் ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறையை அடுத்த சோழம்பேட்டை, மாப்படுகை ஊராட்சிகளில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சோழம்பேட்டை ஊராட்சியில் அங்கன்வாடி மையத்தை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா், குழ... மேலும் பார்க்க