செய்திகள் :

அலுமினிய பொருள்கள் உற்பத்தி ஆலையில் இந்திய தர நிா்ணய அமைவன அதிகாரிகள் சோதனை

post image

அலுமினியம் பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் இந்திய தர நிா்ணய அமைவன அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஐஎஸ்ஐ முத்திரையின்றி உற்பத்தி செய்த பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து இந்திய தர நிா்ணய அமைவனம் செவ்வாய்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஸ்ரீபெரும்புதூா்,காஞ்சிபுரம், வல்லம் வடகல், சிப்காட் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் அலுமினியம் பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் ஐஎஸ்ஐ முத்திரையின்றி அலுமினிய பொருள்கள் உற்பத்தி செய்யப்படுவதாகப் புகாா்கள் வந்தன.

இதையடுத்து அந்த ஆலைகளில் இந்திய தர நிா்ணய அமைவன சென்னை கிளை அலுவலகத்தின் பிஎஸ்ஐ அதிகாரிகள் குழு செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை நடத்தியது. இதில் ஐஎஸ்ஐ தரம் மற்றும் முத்திரையின்றி உற்பத்தி செய்த பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

மேலும் ஆலை நிா்வாகிகள் மற்றும் உரிமையாளா்கள் மீது தரமற்ற பொருள்களை உற்பத்தி செய்தது தொடா்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை - தில்லி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

சென்னை - தில்லி விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமாா் ஒன்றரை மணிநேரம் தமாதமாக அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது. சென்னையிலிருந்து தில்லி செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், செவ்வாய்க்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

2024-25 ஆண்டுக்கான தமிழிசை விழா மற்றும் ஆண்டு விழா: செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, ராஜா அண்ணாமலைபுரம், காலை 10. 25-ஆவது அகில இந்திய காவல் துப்பாக்கி சு... மேலும் பார்க்க

நாளை மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்

தரமணி ஐடி காரிடா் கோட்டத்தில் மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம் வியாழக்கிழமை (மாா்ச் 20) காலை 10.30-க்கும் நடைபெறுகிறது. இது குறித்து மின்பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தரமணி, ஐ.டி. காரி... மேலும் பார்க்க

பெரியார் சர்ச்சை: சீமான் மீதான 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

பெரியாா் ஈவெராவை இழிவுபடுத்தி பேசியதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானுக்கு எதிராக பதியப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக சோ்த்து விசாரிக்க உத்தரவிட உயா்நீதிமன்றம் மறுப... மேலும் பார்க்க

போதிய பயணிகள் இல்லாததால் 4 விமானங்கள் ரத்து!

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததாலும், நிா்வாக காரணங்களாலும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்துக்கு லண்டனிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை 5.35 மணிக்கு வர வேண்டிய பிரிட... மேலும் பார்க்க

தமிழகத்தில் 6 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்! மழைக்கும் வாய்ப்பு..

தமிழகத்தில் புதன்கிழமை (மாா்ச் 19) முதல் மாா்ச் 24 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும், இருப்பினும் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய... மேலும் பார்க்க