செய்திகள் :

இந்தியர்களை மீண்டும் நாடுகடத்தும் அமெரிக்கா!

post image

அமெரிக்காவில் மேற்கொண்டு வரும் நாடுகடத்தல் நடவடிக்கையில் இரண்டாவது முறையாக இந்தியர்கள் நாடுகடத்தப்படவுள்ளனர்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்கள் 104 பேரை பிப்ரவரி 5 ஆம் தேதியில் அமெரிக்கா நாடு கடத்தியது. இந்த நிலையில், இதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமையிலும் (பிப். 16) 119 இந்தியர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர். முன்னதாக மேற்கொள்ளப்பட்டதைப் போலவே, இந்த முறையும் அமெரிக்க ராணுவ விமானமான சி17, குளோப்மாஸ்டர் III ரக விமானங்கள் மூலம், பஞ்சாபில் அமிர்தசரஸ் சர்வதேச விமான நிலையத்தில் இந்தியர்கள் தரையிறக்கப்படுவர்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள், தங்கள் நாடு திரும்பும்வரையில் ஒவ்வொரு வாரமும் நாடுகடத்தல் நடவடிக்கை தொடரும் அமெரிக்க அரசு வட்டாரத்தில் கூறுகின்றனர்.

குடியேற்றம் உள்ளிட்ட முக்கிய இருதரப்பு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்த அடுத்த நாளே இந்த நாடுகடத்தல் நடவடிக்கை தகவல் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கடந்த முறை நாடுகடத்தப்பட்ட இந்தியர்களின் கைகள் கைவிலங்கால் கட்டப்பட்டு அழைத்து வரப்பட்டதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தியர்கள் மீதான அமெரிக்காவின் மனிதாபிமானமற்ற செயலுக்கு பிரதமர் மோடி மௌனம் காப்பது ஏன்? என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து, இந்தியர்கள் கண்ணியத்துடன் நடத்தப்படுவதை அமெரிக்க அதிகாரிகளிடம் உறுதி செய்வதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

அமெரிக்காவில் பெரியளவிலான நாடு கடத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அதிபர் தேர்தலின்போதே டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். இந்த நிலையில், கடந்த மாதம் அதிபரானவுடன், அதற்கான நடவடிக்கையில் அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. 

அமெரிக்காவில் குடிவரவுத் துறைதான் நாடு கடத்தல் பணியை மேற்கொள்ளும். ஆனால், தற்போதைய டிரம்ப் நிர்வாகத்தின் ராணுவ விமானம் மூலம் சட்டவிரோதக் குடியாளர்களை அனுப்பி வைக்கிறது.

கும்பமேளாவில் நீராடிய மத்திய அமைச்சா் சிராக் பஸ்வான்!

பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவில் மத்திய அமைச்சா் சிராக் பஸ்வான் தனது குடும்பத்தினருடன் நீராடினார். உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் மோதியதில் 2 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் ஆம்புலன்ஸ் மோதியதில் 2 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், லத்தூர் நகரில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் மோதியதில் இரண்டு பாதசாரிகள் பலியானதாக காவல்துறை அதிகாரி... மேலும் பார்க்க

திருவிழாவில் தலித் மக்களின் பங்களிப்பை நிராகரித்த கோவில் நிர்வாகம்!

குஜராத்தில் கோவில் திருவிழாவில் தலித் மக்கள் ஒதுக்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இதுகுறித்து விளக்கமளிக்குமாறு அதிகாரிகளுக்கு பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குஜராத்தின்... மேலும் பார்க்க

வாரணாசியில் ‘காசி தமிழ்ச் சங்கமம் 3.0’ நிகழ்ச்சி தொடங்கியது!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சி இன்று(சனிக்கிழமை) தொடங்கியது. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தார். கடந்த 2022-ஆம் ஆண்டு பிரதம... மேலும் பார்க்க

பாஜகவில் இணைந்த 3 ஆம் ஆத்மி கவுன்சிலர்கள்!

ஆம் ஆத்மி கட்சியின் தற்போதைய கவுன்சிலர்கள் 3 பேர் தில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர். ஆம் ஆத்மி கட்சியின் தில்லியின் தற்போதைய கவுன்சிலர்க... மேலும் பார்க்க

வைஷ்ணவி தேவி கோயிலில் குடியரசு துணைத் தலைவர் வழிபாடு!

ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தின் திரிகுடா மலைகளில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி ஆலயத்தில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் சனிக்கிழமை வழிபாடு மேற்கொண்டார். ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி பல்கலைக்கழகத்தின் 1... மேலும் பார்க்க