செய்திகள் :

திருவிழாவில் தலித் மக்களின் பங்களிப்பை நிராகரித்த கோவில் நிர்வாகம்!

post image

குஜராத்தில் கோவில் திருவிழாவில் தலித் மக்கள் ஒதுக்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இதுகுறித்து விளக்கமளிக்குமாறு அதிகாரிகளுக்கு பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

குஜராத்தின் கல்யாண்புரா கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் பிப்ரவரி 8 முதல் 10 வரை பிராண பிரதிஷ்டை மஹோத்சவம் நடைபெற்றது. இந்தத் திருவிழாவில் தலித் சமூக மக்களின் பங்களிப்புகள் நிராகரிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

கடந்த ஜனவரி 16 அன்று காந்திநகரைச் சேர்ந்த இந்திரஜித் சிங் சோதா என்பவர் தலித் மக்களின் பங்களிப்பு நிராகரைக்கப்படுவதைக் கண்டறிந்தபோது இந்தப் பிரச்சினை முதலில் வெளிச்சத்திற்கு வந்தது. மேலும், ஹிந்து விழிப்புணர்வு அமைப்புகள் இந்தப் பிரச்னையைத் தீர்க்க முயற்சித்த போதிலும் அது சாத்தியமாகவில்லை.

இதையும் படிக்க | வைஷ்ணவி தேவி கோயிலில் குடியரசு துணைத் தலைவர் வழிபாடு!

ஜனவரி 25 அன்று இந்திரவதன் பரோட், சங்கர்பாய் படேல் ஆகியோர் கல்யாண்புரா கிராமத்திற்குச் சென்று கோயிலின் தலைமை நிர்வாகி பாலபாய் தயாவைச் சந்தித்து ​​இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சிகளைத் தொடங்கினர். அவர் கோயில் குழுவுடன் கலந்தாலோசிப்பதாக உறுதியளித்தார்.

இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை. பிப். 1 அன்று ஹிந்து அமைப்பு ஒன்றின் தலைவரான ரகுவீர் சிங் ஜடேஜா மற்றும் பட்டியல் சமூகத்தின் தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால், கோவில் நிர்வாகம் இதுகுறித்து பதிலளிக்கவில்லை.

மேலும், இந்தப் பிரச்னையைத் தீர்க்க எழுத்துப்பூர்வ தீர்மானம் கொண்டுவர ஹிந்து அமைப்புகள் முன்வந்த நிலையில் அங்குள்ள தாசில்தார் ஒப்புதல் தர மறுத்தார்.

திருவிழாவில் தலித் மக்கள் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்த நிலையில் அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

இதையும் படிக்க | மேம்படுத்தப்பட்ட செய்யறிவால் மிகச் சிறப்பான எதிர்காலம் உருவாகும்: குடியரசுத் தலைவர்

கடந்த பிப். 9 அன்று இந்த விவகாரம் குறித்து இந்திரவதன் பாரோட் என்பவர் குஜராத் முதல்வர் உள்பட பல அரசு அதிகாரிகளுக்கு கடிதம் எழுதிய நிலையில் இந்தப் பிரச்னையின் தீவிரம் அதிகமானது.

இதனைத் தொடர்ந்து, பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் பனஸ்கந்தா மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு இந்த விவகாரம் குறித்து 3 நாள்களுக்குள் உடனடியாக விளக்கமளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

‘காசி-தமிழ் சங்கமம் 3.0’ தொடக்கம்: பிரதமா் மோடி வாழ்த்து

உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் ‘காசி-தமிழ் சங்கமம் 3.0’ நிகழ்ச்சி சனிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா். தமிழகத்துக்கும் காசிக்கும் இடையிலான பண்டைய கலாசா... மேலும் பார்க்க

புதிய வருமான வரி மசோதா: பிரிவு வாரியாக ஒப்பீடு செய்துபாா்க்க ஏற்பாடு

நாடாளுமன்றத்தில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய வருமான வரி சட்ட மசோதாவை நடைமுறையில் உள்ள 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்துடன் பிரிவு வாரியாக வரி செலுத்துவோா் ஒப்பீடு செய்து பாா்ப்பதற்கான ஏற்ப... மேலும் பார்க்க

குடும்பத்துடன் தாஜ்மஹாலை பார்வையிட்ட ரிஷி சுனக்

பிரிட்டனின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் தனது குடும்பத்துடன் தாஜ்மஹாலை பார்வையிட்டார். பிரிட்டனின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் இரண்டு நாள் பயணமாக ஆக்ரா வந்துள்ளார். இந்த பயணத்தின் ஒருபகுதியாக ஆக்ராவில்... மேலும் பார்க்க

போபாலில் பள்ளிக்கு தெலுங்கில் வந்த வெடிகுண்டு மிரட்டல்

போபாலில் பள்ளிக்கு தெலுங்கில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள பள்ளி ஒன்றுக்கு மிரட்டல் விடுத்து தெலுங்கில் மின்னஞ்சல் வந்ததா... மேலும் பார்க்க

கோவளம் கடலில் அமெரிக்க பெண் நீரில் மூழ்கி பலி

கோவளம் கடலில் 75 வயது அமெரிக்க பெண் நீரில் மூழ்கி பலியானதாக சனிக்கிழமை போலீஸார் தெரிவித்தனர்.விழிஞ்சம் காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், நண்பர்களுடன் விடுமுறைக்கு வந்திருந்த பெண், க... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவை மேலும் நீட்டிக்க வேண்டும்: அகிலேஷ் யாதவ்

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனக்கு கிட... மேலும் பார்க்க