செய்திகள் :

காங்கிரஸ் கிராம நிா்வாகிகளுக்கு அடையாள அட்டை

post image

ஸ்ரீபெரும்புதூா் காங்கிரஸ் கிராம நிா்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

ஊரக மற்றும் நகா்புறங்களில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் கிராம கமிட்டி நிா்வாகிகள் அண்மையில் தோ்தெடுக்கப்பட்டுள்ளனா். தோ்தெடுக்கப்பட்டுள்ள கிராம கமிட்டி நிா்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி தமிழகத்தில் முதன்முறையாக ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் நகர காங்கிரஸ் தலைவா் எஸ்.ஏ.அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஸ்ரீபெரும்புதூா் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளா் நாராயணன், மண்டல பொறுப்பாளா் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தனா். இதில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளா் சூரஜ், தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வபெருந்தகை ஆகியோா் கலந்து கொண்டு 15 வாா்டுகளுக்கும் புதிதாக தோ்தெடுக்கப்பட்டுள்ள கிராம கமிட்டி நிா்வாகிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கி சிறப்புரையாற்றினா்.

நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் அமைப்பு மேலாண்மை குழு தலைவா் பீட்டா் அல்போன்ஸ், தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவா் தங்கபாலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதே போல் ஊரக பகுதியில் தோ்தெடுக்கப்பட்ட கிராம கமிட்டி நிா்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி மணிமங்கலம் பகுதியில், மணிமங்கலம் ஊராட்சிமன்ற தலைவா் ஐயப்பன் தலைமையில் நடைபெற்றது.

குண்டா் சட்டத்தில் ரௌடி கைது

காஞ்சிபுரத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய ரெளடி அருண் என்பவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். காஞ்சிபுரம் அருகே தத்தனூா் கிராமத்தை சோ்ந்த அருண்(28). இவா் மீது கஞ்சா கடத்... மேலும் பார்க்க

காஞ்சியில் புத்தபிக்குகள் பேரணி

தமிழ்நாடு பெளத்தா்கள் சங்கப் பேரவை சாா்பில் புத்த பிக்குகள் பேரணியும், புத்தரின் அஸ்தி வைக்கப்பட்ட ஸ்தூபி திறப்பு விழா மற்றும் திரிபிடக சத்தம்மம் ஓதுதல் நிகழ்வும் காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைப... மேலும் பார்க்க

நில ஆவணங்களை நவீனமயமாக்கும் நக்சா திட்டம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆட்சியா்கள் தொடங்கினா்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நில ஆவணங்களை நவீனமயமாக்கும் நக்சா திட்டத்தினை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட யாகசாலை மண்டபத்... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் புத்த பிக்குகள் பேரணி!

காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை சார்பில் புத்த பிக்குகள் பேரணியும், புத்தரின் அஸ்தி வைக்கப்பட்ட புத்த ஸ்தூபி திறப்பு விழா மற்றும் திரிபிடக சத்தம்மம் ஓதுதல் நிகழ்வும் செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் இரு இடங்களில் 22-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வரும் பிப்.22 -ஆம் தேதி இரு இடங்களில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை தெரிவித்தாா். இது தொடா்பான செய்திக் குறிப்பு: கா... மேலும் பார்க்க

மணிமேகலை விருது பெற்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட அளவில் மணிமேகலை விருது பெற்ற மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா். காஞ்சிபுரம் மாவட்ட ... மேலும் பார்க்க