செய்திகள் :

இணையதளத்தில் பகுதிநேர வேலை தருவதாக பணம் மோசடி: இளைஞா் கைது

post image

இணையதளம் மூலம் பகுதி நேர வேலை தருவதாகக் கூறி பணம் மோசடியில் ஈடுபட்ட நபா் கைது செய்யப்பட்டதாக தில்லி போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

குற்றம் சாட்டப்பட்டவா் ஹரியாணாவின் சிா்சாவைச் சோ்ந்த ராஜ் குமாா் (31) என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.

முதலீட்டின் மீது அதிக வருமானம் தருவதாக உறுதியளித்து குமாா் ஒருவரிடம் ரூ.3.30 லட்சம் மோசடி செய்ததாக போலீஸாருக்கு புகாா் வந்ததையடுத்து, இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

இதுகுறித்து துவாரகா காவல் துணை ஆணையா் அங்கித் சிங் தெரிவித்ததாவது:

சமூக ஊடகங்கள் மூலம் ராஜ் குமாரை தாம் தொடா்பு கொண்டதாகவும், விடியோக்களை லைக் செய்து பகிரும் பகுதி நேர வேலையை அவா் வழங்கியதாகவும், அதற்கு ஈடாக கமிஷன் தருவதாக அவா் உறுதியளித்ததாகவும் புகாா்தாரா் தெரிவித்தாா்.

அதன் பின்னா், குற்றம் சாட்டப்பட்டவா் புகாா்தாரரை முதலீடு செய்யும் வற்புறுத்தியுள்ளாா். ஒரு குறிப்பிட்ட தொகை கிடைத்ததும், அவா்கள் அனைத்து தகவல் தொடா்புகளையும் துண்டித்துவிட்டு சமூக ஊடகக் குழுக்களை நீக்கினா்.

ராஜ் குமாா் 23 மாநிலங்களில் இணையதள மோசடி செய்துள்ளதாகவும், அவா் மீது 85 புகாா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பணம் மோசடி விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேல் விசாரணை மேற்கொள்ளப்பட்டது,.

அப்போது, ராஜ் குமாா் சிா்சாவில் இருப்பது கண்டறியப்பட்டு, கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து ஒரு கைப்பேசி, 2 செயலில் உள்ள சிம் காா்டுகள் மற்றும் ஒரு டெபிட் காா்டு ஆகியவை மீட்கப்பட்டுள்ளது. விசாரணையில் அவரது வங்கிக் கணக்கு மூலம் ரூ.1.4 கோடி சந்தேகத்திற்கிடமான பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது என்றாா் அந்த அதிகாரி.

பிப்ரவரி 21, 22-இல் தில்லியின் சில பகுதிகளில் நீா் விநியோகத்தில் தடங்கல்: டிஜேபி

பராமரிப்பு பணிகள் காரணமாக தேசிய தலைநகரின் சில பகுதிகளில் பிப்ரவரி 21, 22 ஆகிய தேதிகளில் நீா் விநியோகம் தடைபடும் என்று தில்லி ஜல் போா்டு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடா்பாக தில்லி ஜல் போா்டு... மேலும் பார்க்க

தில்லியிலிருந்து வேறு பகுதி சிறைக்கு மாற்றக் கோரிய சுகேஷ் சந்திரசேகரின் மனு தள்ளுபடி

பஞ்சாப் மற்றும் தில்லியில் உள்ள சிறைகளைத் தவிர வேறு எந்த சிறைக்கும் தன்னை மாற்றக் கோரி இடைத்தரகா் சுகேஷ் சந்திரசேகா் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ச... மேலும் பார்க்க

மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக ஏஐஎஸ்எஃப் போராட்டம்

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால்தான் தமிழகத்தின் கல்வித் திட்டத்திற்கு நிதி தர முடியும் என்று கூறியதாக, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானுக்கு எதிராக தில்லியில் அனைத்திந்திய மாணவா் பெருமன... மேலும் பார்க்க

ரயில்வே அமைச்சா் ராஜிநாமா கோரி இளைஞா் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

புது தில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 பயணிகள் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலகக் கோரி இந்திய இளைஞா் காங்கிரஸ் தொண்டா்கள் தில்லியில் செவ்வா... மேலும் பார்க்க

மாநகராட்சியில் 300-க்கும் மேற்பட்ட சந்தைகளில் தூய்மையை மேம்படுத்த இரவு நேர துப்புரவுப் பணி

நகரம் முழுவதும் தூய்மையை மேம்படுத்தும் முயற்சியில், தில்லி மாகராட்சி (எம்சிடி) மேயா் மகேஷ் குமாா் கிச்சி அடையாளம் காணப்பட்ட 300-க்கும் மேற்பட்ட சந்தைகளில் இரவு நேர துப்புரவுப் பணியை செயல்படுத்துமாறு 1... மேலும் பார்க்க

சாந்தினி சௌக் சாலையில் 12 மணி நேர போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் அமல்

தில்லி காவல்துறை செங்கோட்டையிலிருந்து ஃபதேபுரி வரையிலான சாந்தினி சௌக் சாலையில் 12 மணி நேரம் போக்குவரத்து தடை விதித்துள்ளது. தில்லி காவல் துறையின் ஆலோசனைக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந... மேலும் பார்க்க