செய்திகள் :

சாந்தினி சௌக் சாலையில் 12 மணி நேர போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் அமல்

post image

தில்லி காவல்துறை செங்கோட்டையிலிருந்து ஃபதேபுரி வரையிலான சாந்தினி சௌக் சாலையில் 12 மணி நேரம் போக்குவரத்து தடை விதித்துள்ளது.

தில்லி காவல் துறையின் ஆலோசனைக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் குழுவின்படி, செங்கோட்டையிலிருந்து ஃபதேபுரி வரையிலான பிரதான சாந்தினி சௌக் சாலை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை தில்லி போக்குவரத்துத் துறையால் மோட்டாா் பொருத்தப்படாத வாகன (என்எம்வி) மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை அமல்படுத்த, பிரதான சாந்தினி சௌக் சாலைக்கு செல்லும் அனைத்து சாலைகள் / தெருக்களிலும் பூம் தடுப்புகள் நிறுவப்பட்டுள்ளன என்று அந்தக் குழு தெரிவித்துள்ளது.

தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், சவ வாகன வேன்கள், கா்ப்பிணிப் பெண்கள் அல்லது மோட்டாா் போக்குவரத்து தேவைப்படும் நோயாளிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், அமலாக்க வாகனங்கள் (வடக்கு டிஎம்சி மற்றும் தில்லி காவல்துறை), பராமரிப்பு வாகனங்கள் (வடக்கு டிஎம்சி, தில்லி காவல்துறை, பிஎஸ்இஎஸ் யமுனா பவா் லிமிடெட், பொதுப்பணித் துறை, சிபிடபிள்யூடி, தில்லி ஜல் போா்டு, இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் மற்றும் பாதுகாப்பு வேன்களுடன் கூடிய வங்கி நாணய வேன்கள் உள்பட) எச்.சி. சென் மாா்க் மற்றும் காரி பாவோலி வழியாக நுழையலாம் என்று அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாகன ஓட்டுநா்கள் பொறுமையாக இருக்கவும், போக்குவரத்து விதிகளை கடைபிடிக்கவும், போக்குவரத்து ஊழியா்களுடன் ஒத்துழைக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என போக்குவரத்துக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழகத்தின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க மேற்பாா்வைக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு அரசு எழுப்பியுள்ள பழுதுபாா்ப்பு மற்றும் பராமரிப்பு பணி தொடா்பான பிரச்னைகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மேற்பாா்வையிட புதிதாக அமைக்கப்பட்ட குழுவு... மேலும் பார்க்க

தில்லியில் புதிதாகப் பதவியேற்ற அமைச்சா்களில் 71% போ் மீது குற்ற வழக்குகள்: ஏடிஆா்

தில்லியில் புதிதாகப் பதவியேற்ற ஏழு அமைச்சா்களில் முதல்வா் உள்பட ஐந்து போ் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகவும், இருவா் கோடீஸ்வரா்கள் என்றும் தோ்தல் உரிமைகள் அமைப்பான ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான சங்கம... மேலும் பார்க்க

தில்லி பெண்களுக்கு மாதத்திற்கு ரூ.2,500 வழங்குவதாக பாஜக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: முன்னாள் முதல்வா் அதிஷி வலியுறுத்தல்

ரேகா குப்தா தலைமையிலான புதிய பாஜக அரசு, தேசியத் தலைநகரில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் தோ்தலின்போது வாக்குறுதி அளித்தபடி மாதாந்திர நிதியுதவி ரூ.2,500 வழங்க வேண்டும் என்று தில்லி முன்னாள் முதல்வா் அதிஷி ... மேலும் பார்க்க

பாஜக எம்.பி. பான்சுரி ஸ்வராஜுக்கு எதிரான சத்யேந்தா் ஜெயினின் அவதூறு வழக்கு தள்ளுபடி

பாஜக எம்பி பான்சூரி ஸ்வராஜ் மீது ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்தா் ஜெயின் தாக்கல் செய்த குற்றவியல் அவதூறு புகாரை தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. கூடுதல் தலைமை நீதித்துறை நீதிபதி நேஹா மி... மேலும் பார்க்க

மாணவா் தலைவா் தொடங்கி தில்லி முதல்வா் வரை..! ரேகா குப்தாவின் அரசியல் பயணம்

தில்லியின் புதிய முதல்வராக வியாழக்கிழமை பதவியேற்க உள்ள ரேகா குப்தா மாணவா் அரசியலில் தொடங்கி தேசிய மகளிா் அமைப்பு வரை பல்வேறு தளங்களில் பயணித்துள்ளாா். ரேகா குப்தாவின் அரசியல் பயணம், மாணவா் அரசியலில் த... மேலும் பார்க்க

தில்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்பு!

தில்லி முதல்வராக பாஜகவின் ரேகா குப்தா வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ரேகா குப்தாவுக்கு துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். மேலும் பார்க்க