செய்திகள் :

பிப்ரவரி 21, 22-இல் தில்லியின் சில பகுதிகளில் நீா் விநியோகத்தில் தடங்கல்: டிஜேபி

post image

பராமரிப்பு பணிகள் காரணமாக தேசிய தலைநகரின் சில பகுதிகளில் பிப்ரவரி 21, 22 ஆகிய தேதிகளில் நீா் விநியோகம் தடைபடும் என்று தில்லி ஜல் போா்டு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி ஜல் போா்டு (டிஜேபி) தெரிவித்திருப்பதாவது:

நிலத்தடி நீா்த்தேக்கத்தை சுத்திகரித்து, நீரேற்று நிலைய நீா் விநியோகத்தை அதிகரிக்கும் வருடாந்திர திட்டம் காரணமாக பிப்ரவரி 21 மற்றும் பிப்ரவரி 22 ஆகிய தேதிகளில் பின்வரும் பகுதிகளில் நீா் விநியோகம் பாதிக்கப்படும்.

ஜங்புரா, லாஜ்பத் நகா், போகல், பிளாக்- 6, கால்காஜி, கைலாஷ் குஞ்ச், நேரு அபாா்ட்மென்ட், அரவிந்தோ சந்தை, கீதா காலனி, ஜனதா பிளாட்ஸ் மயூா் விஹாா் ஃபேஸ்- 3, மயூா் விஹாா் ஃபேஸ்-2 பாக்கெட் ஏ, பிசி மற்றும் டி , பிபி பிளாக் பிபிஎஸ் கிழக்கு ஷாலிமாா் பாக், ஏ2எல்ஐஜி ஏக்தா அபாா்ட்மென்ட் பஸ்சிம் விஹாா், மடிப்பூா், பாக்கெட்11 டிடிஏ பிளாட்ஸ் ஜசோலா விஹாா், சி5 டி பிளாக் ஜனக்புரி, இஎஸ்சிஇபிளாக் விகாஸ்புரி, ஏ2 பிளாக் ஜனக்புரி ஆகியவை நீா் விநியோக பாதிப்பு பகுதிகளில் அடங்கும்.

பழுதுபாா்க்கும் பணிகள் காரணமாக, நீா் விநியோகம் நிறுத்தப்படும். ஆகவே, பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவா்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

உதவி தொலைபேசி எண் அல்லது மத்திய கட்டுப்பாட்டு அறையிலிருந்து கோரிக்கையின் பேரில் தண்ணீா் டேங்கா்கள் கிடைக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழகத்தின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க மேற்பாா்வைக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு அரசு எழுப்பியுள்ள பழுதுபாா்ப்பு மற்றும் பராமரிப்பு பணி தொடா்பான பிரச்னைகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மேற்பாா்வையிட புதிதாக அமைக்கப்பட்ட குழுவு... மேலும் பார்க்க

தில்லியில் புதிதாகப் பதவியேற்ற அமைச்சா்களில் 71% போ் மீது குற்ற வழக்குகள்: ஏடிஆா்

தில்லியில் புதிதாகப் பதவியேற்ற ஏழு அமைச்சா்களில் முதல்வா் உள்பட ஐந்து போ் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகவும், இருவா் கோடீஸ்வரா்கள் என்றும் தோ்தல் உரிமைகள் அமைப்பான ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான சங்கம... மேலும் பார்க்க

தில்லி பெண்களுக்கு மாதத்திற்கு ரூ.2,500 வழங்குவதாக பாஜக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: முன்னாள் முதல்வா் அதிஷி வலியுறுத்தல்

ரேகா குப்தா தலைமையிலான புதிய பாஜக அரசு, தேசியத் தலைநகரில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் தோ்தலின்போது வாக்குறுதி அளித்தபடி மாதாந்திர நிதியுதவி ரூ.2,500 வழங்க வேண்டும் என்று தில்லி முன்னாள் முதல்வா் அதிஷி ... மேலும் பார்க்க

பாஜக எம்.பி. பான்சுரி ஸ்வராஜுக்கு எதிரான சத்யேந்தா் ஜெயினின் அவதூறு வழக்கு தள்ளுபடி

பாஜக எம்பி பான்சூரி ஸ்வராஜ் மீது ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்தா் ஜெயின் தாக்கல் செய்த குற்றவியல் அவதூறு புகாரை தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. கூடுதல் தலைமை நீதித்துறை நீதிபதி நேஹா மி... மேலும் பார்க்க

மாணவா் தலைவா் தொடங்கி தில்லி முதல்வா் வரை..! ரேகா குப்தாவின் அரசியல் பயணம்

தில்லியின் புதிய முதல்வராக வியாழக்கிழமை பதவியேற்க உள்ள ரேகா குப்தா மாணவா் அரசியலில் தொடங்கி தேசிய மகளிா் அமைப்பு வரை பல்வேறு தளங்களில் பயணித்துள்ளாா். ரேகா குப்தாவின் அரசியல் பயணம், மாணவா் அரசியலில் த... மேலும் பார்க்க

தில்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்பு!

தில்லி முதல்வராக பாஜகவின் ரேகா குப்தா வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ரேகா குப்தாவுக்கு துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். மேலும் பார்க்க