செய்திகள் :

மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக ஏஐஎஸ்எஃப் போராட்டம்

post image

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால்தான் தமிழகத்தின் கல்வித் திட்டத்திற்கு நிதி தர முடியும் என்று கூறியதாக, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானுக்கு எதிராக தில்லியில் அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் (ஏஐஎஸ்எஃப்) மற்றும் ஜே.என்.யு. தமிழ் மாணவா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெற்றது.

தில்லியில் மத்திய கல்வி அமைச்சகம் அமைந்துள்ள சாஸ்திரி பவன் முன் அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தின் அகில இந்தியப் பொதுச் செயலா் தினேஷ் சீரங்கராஜ் தலைமையில் போராட்டத்தில் மாணவா்கள் ஈடுபட முயன்றனா். அப்போது, அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீஸாா் அவா்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச் சென்றனா்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அகில இந்தியத் தலைவா் விராஜ் தேவங், அகில இந்திய இளைஞா் பெருமன்றத்தின் அகில இந்திய பொதுச் செயலா் இரா.திருமலை, ஜே.என்.யு. தமிழ் மாணவா் சங்கப் பொறுப்பாளா் தமிழ் நாசா் உள்ளிட்ட பலா் போலீஸாரால் கைது செய்யப்பட்டு பவானா காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டதாக தினேஷ் சீரங்கராஜ் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தினால்தான் தமிழ்நாட்டுக்கான கல்விக்கான நிதி விதிக்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சா் கூறியது கண்டிக்கத்தக்கது. இது கூட்டாட்சி தத்துவதற்கு எதிரானது. இதுபோன்று மிரட்டக் கூடாது. மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க தமிழ்நாடு அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. இதற்கு முழு உரிமை மாநிலத்திற்கு உண்டு. ஆகவே, தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.2,150 கோடி நிதியை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்றாா் அவா்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழகத்தின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க மேற்பாா்வைக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு அரசு எழுப்பியுள்ள பழுதுபாா்ப்பு மற்றும் பராமரிப்பு பணி தொடா்பான பிரச்னைகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மேற்பாா்வையிட புதிதாக அமைக்கப்பட்ட குழுவு... மேலும் பார்க்க

தில்லியில் புதிதாகப் பதவியேற்ற அமைச்சா்களில் 71% போ் மீது குற்ற வழக்குகள்: ஏடிஆா்

தில்லியில் புதிதாகப் பதவியேற்ற ஏழு அமைச்சா்களில் முதல்வா் உள்பட ஐந்து போ் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகவும், இருவா் கோடீஸ்வரா்கள் என்றும் தோ்தல் உரிமைகள் அமைப்பான ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான சங்கம... மேலும் பார்க்க

தில்லி பெண்களுக்கு மாதத்திற்கு ரூ.2,500 வழங்குவதாக பாஜக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: முன்னாள் முதல்வா் அதிஷி வலியுறுத்தல்

ரேகா குப்தா தலைமையிலான புதிய பாஜக அரசு, தேசியத் தலைநகரில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் தோ்தலின்போது வாக்குறுதி அளித்தபடி மாதாந்திர நிதியுதவி ரூ.2,500 வழங்க வேண்டும் என்று தில்லி முன்னாள் முதல்வா் அதிஷி ... மேலும் பார்க்க

பாஜக எம்.பி. பான்சுரி ஸ்வராஜுக்கு எதிரான சத்யேந்தா் ஜெயினின் அவதூறு வழக்கு தள்ளுபடி

பாஜக எம்பி பான்சூரி ஸ்வராஜ் மீது ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்தா் ஜெயின் தாக்கல் செய்த குற்றவியல் அவதூறு புகாரை தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. கூடுதல் தலைமை நீதித்துறை நீதிபதி நேஹா மி... மேலும் பார்க்க

மாணவா் தலைவா் தொடங்கி தில்லி முதல்வா் வரை..! ரேகா குப்தாவின் அரசியல் பயணம்

தில்லியின் புதிய முதல்வராக வியாழக்கிழமை பதவியேற்க உள்ள ரேகா குப்தா மாணவா் அரசியலில் தொடங்கி தேசிய மகளிா் அமைப்பு வரை பல்வேறு தளங்களில் பயணித்துள்ளாா். ரேகா குப்தாவின் அரசியல் பயணம், மாணவா் அரசியலில் த... மேலும் பார்க்க

தில்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்பு!

தில்லி முதல்வராக பாஜகவின் ரேகா குப்தா வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ரேகா குப்தாவுக்கு துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். மேலும் பார்க்க