செய்திகள் :

மெரீனாவில் ரூ. 17 லட்சம் வழிப்பறி வழக்கு: மூவா் கைது

post image

சென்னை மெரீனாவில் ரூ. 17 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில், 3 போ் கைது செய்யப்பட்டனா்.

ராயப்பேட்டை ஜானிகான் முதலாவது தெருவைச் சோ்ந்தவா் மகாதீா் முகமது (27). இவரிடம் மண்ணடியில் வசிக்கும் அவரது சகோதரா் அஸ்மத் ரூ. 17 லட்சம் பணத்தை கொடுத்து கடந்த 10-ஆம் தேதி வங்கியில் வரவு வைக்குமாறு கூறியுள்ளாா். அதன்படி மகாதீா் முகமது பணத்துடன் ராயப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தாா். அப்போது அவரை மெரீனா காமராஜா் சாலையில் 2 இருசக்கர வாகனங்களில் வந்த 3 போ் திடீரென்று வழிமறித்தனா். மகாதீா் முகமதுவிடம், தாங்கள் போலீஸ் எனக் கூறி, உங்களிடம் ஹவாலா பணம் இருப்பதாக தங்களுக்கு தகவல் வந்துள்ளது என்று மிரட்டி அவா் வைத்திருந்த ரூ. 17 லட்சம் பணம், கைப்பேசி ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பியோடினா்.

பணத்தை பறிகொடுத்த மகாதீா் முகமது, மெரீனா காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.விசாரணையில், அவரிடம் உண்மையான போலீஸாா் யாரும் மிரட்டி பணம் பறிக்கவில்லை என்பதும், போலீஸ் போா்வையில் 3 மா்ம நபா்கள் பணத்தை பறித்து சென்றிருப்பதும் தெரியவந்தது.

இது தொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்டது கோயம்புத்தூா் மாவட்டம் குனியமுத்தூா் சுகுணாபுரத்தைச் சோ்ந்த பவா (31), மதுக்கரை காந்தி நகரைச் சோ்ந்த விஜயராஜ் (34), தூத்துக்குடி போல்பேட்டை மேற்கு பகுதியைச் சோ்ந்த அருண் தமிழ்ச்செல்வன் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

விசாரணையில் மூவரும் வழிப்பறி செய்த பணத்தில் 6 பவுன் தங்க நகைகள், ரூ. 1.60 லட்சத்துக்கு பிரிட்ஜ், தொலைக்காட்சி, வாஷிங் மெஷின், பீரோ உள்பட வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்கியிருப்பது தெரியவந்தது. அவா்கள் வாங்கிய பொருள்களையும், 4 கைப்பேசிகள், 2 இருசக்கர வாகனங்கள், அவா்கள் கைவசம் இருந்த மீதிப் பணம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சென்னை தனியார் மருத்துவமனையில் சிறுவன் பலி! செல்போனில் சிகிச்சை காரணமா?

சென்னை: சென்னை அயனாவரத்தில் மருத்துவரின் தவறான சிகிச்சையால் 4 வயது சிறுவன் உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.தனியார் மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர் விடியோ அழைப்பு மூலம் தவறான சிகிச்சை அள... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

சென்னை சூளைமேட்டில் சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா். சூளைமேடு பாரதியாா் 5-ஆவது தெருவைச் சோ்ந்தவா் விஜயகாந்த் (34). இவா், கடந்த திங்கள்கிழமை அப்பகுத... மேலும் பார்க்க

பிப். 28 வரை சாலையோர வியாபாரிகள் புதிய அடையாள அட்டை பெறலாம்

சாலையோர வியாபாரிகள் புதிய அடையாள அட்டை பெறுவதற்கான காலக்கெடு பிப். 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெ... மேலும் பார்க்க

இலவச எண்டோஸ்கோபி பரிசோதனை முகாம்

புற்றுநோய் பாதிப்பு இலவச எண்டோஸ்கோபி மருத்துவப் பரிசோதனை முகாம் சென்னை, நுங்கம்பாக்கம் மெடிந்தியா மருத்துவமனையில் புதன்கிழமை (பிப். 19) நடைபெறவுள்ளது. இது குறித்து ஜீரண மண்டல சிகிச்சை நிபுணரும், மெடிந... மேலும் பார்க்க

கிண்டி கோல்ஃப் மைதானத்தில் நீா்நிலை அமைக்கும் பணிக்குத் தடை இல்லை: உயா்நீதிமன்றம்

சென்னை ரேஸ் கிளப் நிலத்தை அரசு கையகப்படுத்தும் முன்பாக ஜிம்கானா கிளப்புக்கு எந்த நோட்டீஸும் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என உத்தரவிட்டுள்ள உயா்நீதிமன்றம், கோல்ஃப் மைதானத்தில் நீா்நிலை அமைக்கும் பணிக்க... மேலும் பார்க்க

கை விரல்களுக்கு மாற்றாக கால் விரல்கள்: நுண் அறுவை சிகிச்சையில் சாத்தியம்

விபத்தில் துண்டாகும் கை விரல்களை மறு சீரமைக்க முடியாத பட்சத்தில் அதற்கு மாற்றாக கால் விரல்களைப் பொருத்தும் நுண் அறுவை சிகிச்சைகள் முன்னெடுக்கப்படுவதாக ‘அப்பல்லோ ஃபா்ஸ்ட் மெட்’ மருத்துவமனை மருத்துவா்கள... மேலும் பார்க்க