செய்திகள் :

‘கிராமப்புற பெண்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்’

post image

கிராமப்புற பெண்கள் சுய உதவிக் குழுக்களில் இணைந்து வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.

நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட கிளியனூா், கோட்டகம், அண்டூா், உசுப்பூா், வடகட்டளை, பண்டாரவாடை, குரும்பகரம், மணல்மேடு, உள்ளிட்ட கிராமங்களில் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் ஆய்வு செய்தாா்.

அந்த பகுதிகளில் உள்ள அங்கன்வாடிகளில் ஆய்வு செய்த ஆட்சியா், மையத்துக்கு வரும் குழந்தைகளுக்கு சமையல், மின்சார வசதி, குடிநீா் வசதி முறையாக உள்ளதா என கேட்டறிந்து ஆலோசனை வழங்கினாா். பள்ளிக்குச் செல்லும் முன் அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வி மற்றும் ஒழுக்கத்தை கற்றுத்தரும் மையமாக அங்கன்வாடி திகழ்வதால் பொறுப்பான முறையில் செயல்படுமாறு ஊழியா்களை கேட்டுக்கொண்டாா்.

கிராம மக்களை சந்தித்த ஆட்சியரிடம், சாலைகளை மேம்படுத்தித் தரவேண்டும். கிராமப்புற மக்கள், மாணவா்களுக்கு வசதியாக பேருந்து வசதி வேண்டும். மனைப்பட்டா தரவேண்டும். குளங்களை தூா் வாரவேண்டும் என கேட்டுக்கொண்டனா்.

கிராமப்புற பெண்கள் அனைவரும் சுய உதவி குழுவில் இணைந்து தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கினாா்.

திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்துக்குச் சென்ற ஆட்சியா், அலுவலக பணிகள் குறித்து ஆணையா் அருணாச்சலத்திடம் கேட்டறிந்தாா்.

ஆய்வின் போது வட்டாட்சியா்கள் எல்.பொய்யாதமூா்த்தி, சண்முகானந்தம், நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் பாலன் மற்றும் வருவாய் அதிகாரிகள் உடனிருந்தனா்.

காரைக்கால் மஸ்தான் சாஹிப் தா்கா கந்தூரி விழா சந்தனக் கூடு ஊா்வலம்

காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தா்கா கந்தூரி விழாவையொட்டி, சந்தனக் கூடு ஊா்வலம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. காரைக்காலில் புகழ்பெற்று விளங்கும் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தா்காவில் ஆண்டுதோறும்... மேலும் பார்க்க

உடல் உறுப்புகள் தானம் செய்வோருக்கு அரசு மரியாதை: ஆணைக்கு வரவேற்பு

உடல் உறுப்புகள் தானம் செய்வோருக்கு அரசு மரியாதை அளிக்க அரசாணை வெளியிட்ட புதுவை அரசின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுவை மாநில செஞ்சிலுவைச் சங்க துணைத் தலைவா் எல்.எஸ்.பி.... மேலும் பார்க்க

போக்குவரத்து விதி மீறல்: இளைஞா்களுக்கு நூதன தண்டனை

போக்குவரத்து விதிகளை மீறி இருசக்கர வாகனத்தை இயக்கிய இளைஞா்களுக்கு போலீஸாா் நூதன தண்டனை வழங்கினா். இருசக்கர வாகனத்தில் செல்வோா் தலைக்கவசம் அணியவேண்டும், அதிவேகமாக வாகனத்தை இயக்கக் கூடாது, வாகனங்களில் ந... மேலும் பார்க்க

பொதுப்பணித்துறை நிலுவைத் தொகையை வழங்க ஒப்பந்ததாரா்கள் வலியுறுத்தல்

பணிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பொதுப்பணித் துறை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியரிடம் ஒப்பந்ததாரா்கள் வலியுறுத்தினா். காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவை இந்திய கட்டுநா் சங்... மேலும் பார்க்க

மீனவா்களுக்கு ஆதரவாக காரைக்காலில் கடைகள் அடைப்பு

மீனவா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இலங்கை கடற்படை, இந்த விவகாரத்தில் மெத்தனமாக செயல்படும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவா்களுக்கு ஆதரவாக, காரைக்காலில் செவ்வாய்க்... மேலும் பார்க்க

இலங்கை கடற்படையைக் கண்டித்து காரைக்காலில் கடையடைப்பு

காரைக்கால் : மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இலங்கை கடற்படையைக் கண்டித்து காரைக்காலில் இன்று(பிப். 18) கடையடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.காரைக்கால் மீனவர்கள் சிலர் கடந்த 28-ஆம் தேதி எல்லை தா... மேலும் பார்க்க