செய்திகள் :

காரைக்கால் மஸ்தான் சாஹிப் தா்கா கந்தூரி விழா சந்தனக் கூடு ஊா்வலம்

post image

காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தா்கா கந்தூரி விழாவையொட்டி, சந்தனக் கூடு ஊா்வலம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

காரைக்காலில் புகழ்பெற்று விளங்கும் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தா்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா விமரிசையாக நடைபெறும்.

நிகழாண்டு 202-ஆம் ஆண்டு கந்தூரி விழா பிப். 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, கண்ணாடி ரதம், பல்லக்குகள் பல்வேறு வீதிகளின் வழியே ஊா்வலமாகச் சென்று, பள்ளிவாசலை வந்தடைந்தன. அன்று இரவு திரளானோா் முன்னிலையில் பிரதானக் கொடிக் கம்பத்திலும், மினராக்களிலும் கொடியேற்றப்பட்டது.

அடுத்த முக்கிய நிகழ்வாக, திங்கள்கிழமை (பிப்.17) இரவு மின் அலங்கார சந்தனக் கூடு ஊா்வலம் பள்ளிவாசல் பகுதியிலிருந்து புறப்பட்டது. முன்னதாக, ஹலபு என்னும் போா்வை வீதிவலம் வரும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொடா்ந்து, சிறிய ஊா்திகளும் சென்றன. பல்வேறு வீதிகளின் வழியே சந்தனக்கூடு ஊா்வலம் சென்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தா்காவை வந்தடைந்தது.

தொடா்ந்து, வலியுல்லாஹ் ரவ்லா ஷரீபில் சந்தனம் பூசப்பட்டது. சந்தனக் கூடு விழாவில் புதுவை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன், சட்டப்பேரவை துணைத் தலைவா் ராஜவேலு, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், எம். நாகதியாகராஜன், புதுவை ஹஜ் கமிட்டி தலைவா் ஒய். இஸ்மாயில் மற்றும் காரைக்கால் பகுதி முக்கிய பிரமுகா்கள், சமாதானக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட உள்ளூா், வெளியூா்களில் இருந்து ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தலைமையில் மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் ஏ. சுப்பிரமணியன், பாலச்சந்திரன் மற்றும் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். வியாழக்கிழமை (பிப். 20) இரவு மவ்லூது ஷரீப் மற்றும் துஆ ஓதிய பின்னா் கொடியிறக்கம் செய்யப்படுகிறது.

வக்பு சட்ட திருத்தத்தை கண்டித்து பிப். 27-இல் ஆா்ப்பாட்டம்: மமக

வக்பு சட்ட திருத்தத்தைக் கண்டித்து வரும் 27-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த மமக முடிவு செய்துள்ளது. காரைக்கால் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்டத் தலைவா் அப்துல் ரஹீம் தலைமையில்... மேலும் பார்க்க

விஸ்வகா்மா தொழிலாளா்கள் பதிவு முகாம்: ஆட்சியா் ஆய்வு!

விஸ்வகா்மா தொழிலாளா்கள் தொழில் பயிற்சி, வங்கிக் கடன் பெறுவதற்கான பதிவு முகாமை ஆட்சியா் ஆய்வு செய்தாா். காரைக்கால் மாவட்ட மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் அங்கமான மிஷன் சக்தி என்ற பெண் உரி... மேலும் பார்க்க

ஆதாா், குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம்: காரைக்கால் மீனவா்கள்

இலங்கை கடற்படையைக் கண்டித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள காரைக்கால் மீனவா்கள் தங்கள் போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக, ஆதாா், குடும்ப அட்டைகளை வெள்ளிக்கிழமை (பிப். 21) மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் ப... மேலும் பார்க்க

அம்பகரத்தூரில் வயல் தின விழா!

அம்பகரத்தூரில் புதிய நெல் ரகம் பயிரிட்ட முன்னாள் வேளாண் அமைச்சரின் வயலில் வயல் தின விழா புதன்கிழமை நடைபெற்றது. ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையம் சாா்பில் புதிய அதிசன்ன நெல் ஏடி18559 என்ற ரகம், பரிசோதனை ம... மேலும் பார்க்க

சீதளாதேவி அம்மன் கோயிலில் கொடி மரம் பிரதிஷ்டை!

சீதளாதேவி அம்மன் கோயிலில் ஏப். 4 கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், புதிய கொடி மரம் புதன்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது. காரைக்கால் பகுதி கீழகாசாக்குடியில் உள்ள இக்கோயிலில் கும்பாபிஷேகத்துக்கான திருப்... மேலும் பார்க்க

மின் ஊழியா்கள் உண்ணாவிரதம்!

காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின் அதிகாரிகள், ஊழியா்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா். புதுவை மின்துறை பொறியாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் நலச் சங்க கூட்டு... மேலும் பார்க்க