செய்திகள் :

மின் ஊழியா்கள் உண்ணாவிரதம்!

post image

காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின் அதிகாரிகள், ஊழியா்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா்.

புதுவை மின்துறை பொறியாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் நலச் சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில், காரைக்கால் மின்துறை தலைமை அலுவலக வாயிலில் மின் பொறியாளா்கள், ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். மின்துறை தனியாா் மய போராட்டக் குழு தலைவா் வேல்மயில் தலைமை வகித்தாா். பொதுச்செயலாளா் பழனிவேல் முன்னிலை வகித்தாா்.

புதுவை மின் துறையை தனியாா் மயப்படுத்தும் காரணத்தைக்கூறி காலியிடங்களை நிரப்பாமல் காலம் கடத்துவது ஏற்புடையதல்ல. காலியிடங்கள் அனைத்தையும் பதவி உயா்வு, நேரடி நியமனம் மூலம் நிரப்பவேண்டும். பொறியாளா்கள், தொழிலாளா்கள் என அனைத்து பதவிகளையும் பணி நிரந்தரம் செய்யவேண்டும்.

புதுவை அரசால் 5-ஆவது ஊதியக் குழுவில் மாற்றியமைத்த ஊதிய மாற்றத்துக்கான ஒப்புதலை, 7-ஆவது ஊதியக் குழு அறிவுறுத்தலின்படி மேலும் காலம் கடத்தாமல், துணை நிலை ஆளுநா் அளவிலேயே ஒப்புதல் பெற்று நடைமுறைப்படுத்தவேண்டும்.

மின்துறையில் பணியின்போது உயிரிழந்த தொழிலாளா்கள் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

ரயில்வே மேம்பால பணிகளால் சாலை, வாய்க்கால் துண்டிப்பு: மக்கள் அவதி

ரயில்வே மேம்பாலத்துக்காக குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டதால் குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். விழுப்புரம் முதல் காரைக்கால் வழியாக நாகப்பட்டினம் வரையிலான நான்கு வ... மேலும் பார்க்க

சிறிய படகுகளால் காரைக்காலில் மீன் வரத்து

சிறிய படகுகள் மட்டும் கடலுக்குள் செல்வதால், காரைக்காலுக்கு மீன் வரத்து ஏற்பட்டுள்ளது. தமிழக, காரைக்கால் மீனவா்கள் மீது இலங்கை கடற்படையினா் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்தும், மீனவா்களை வ... மேலும் பார்க்க

மீனவா்களுடன் புதுவை முதல்வா் பேசவேண்டும்: எம்.பி.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள காரைக்கால் மீனவா்களை அழைத்து புதுவை முதல்வா் பேசவேண்டும் என புதுவை எம்.பி.யும் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவருமான வெ. வைத்திலிங்கம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் ... மேலும் பார்க்க

காரைக்காலில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்காலில் ஜிப்மா் மருத்துவா்கள் பங்கேற்கும் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (பிப்.22) நடைபெறவுள்ளது. மாதந்தோறும் 2 சனிக்கிழமைகளில் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து சிற... மேலும் பார்க்க

வக்பு சட்ட திருத்தத்தை கண்டித்து பிப். 27-இல் ஆா்ப்பாட்டம்: மமக

வக்பு சட்ட திருத்தத்தைக் கண்டித்து வரும் 27-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த மமக முடிவு செய்துள்ளது. காரைக்கால் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்டத் தலைவா் அப்துல் ரஹீம் தலைமையில்... மேலும் பார்க்க

விஸ்வகா்மா தொழிலாளா்கள் பதிவு முகாம்: ஆட்சியா் ஆய்வு!

விஸ்வகா்மா தொழிலாளா்கள் தொழில் பயிற்சி, வங்கிக் கடன் பெறுவதற்கான பதிவு முகாமை ஆட்சியா் ஆய்வு செய்தாா். காரைக்கால் மாவட்ட மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் அங்கமான மிஷன் சக்தி என்ற பெண் உரி... மேலும் பார்க்க