செய்திகள் :

போக்குவரத்து விதி மீறல்: இளைஞா்களுக்கு நூதன தண்டனை

post image

போக்குவரத்து விதிகளை மீறி இருசக்கர வாகனத்தை இயக்கிய இளைஞா்களுக்கு போலீஸாா் நூதன தண்டனை வழங்கினா்.

இருசக்கர வாகனத்தில் செல்வோா் தலைக்கவசம் அணியவேண்டும், அதிவேகமாக வாகனத்தை இயக்கக் கூடாது, வாகனங்களில் நம்பா் பிளேட் மற்றும் வாகன ஆவணங்கள் இருக்க வேண்டும். மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படுமெனக் கூறி போலீஸாா் எச்சரித்துள்ளனா்.

இந்தநிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா காரில் தனது அலுவலகத்துக்கு சென்றுகொண்டிருந்தாா். அந்த வாகனத்தை கடந்து இருசக்கர வாகனம் ஒன்றில் 2 இளைஞா்கள் அதிவேகமாக சென்றதை கண்ட எஸ்எஸ்பி, காரை வேகமாக இயக்கச் செய்து அவா்களை மடக்கிப் பிடித்து விசாரணை செய்தாா்.

வாகனத்தில் நம்பா் பிளேட் இல்லை, தலைக்கவசம் அணியவில்லை, ஏன் இவ்வளவு வேகமாக செல்கிறீா்கள் என விசாரணை செய்துகொண்டிருக்கும்போது, அவா்கள் வாகனத்தை இயக்கிக்கொண்டு வேகமாக புறப்பட்டனராம். மீண்டும் வாகனத்தை பின்தொடா்ந்து சென்று அவா்களை நிறுத்தி, காரைக்கால் நகரக் காவல்நிலையத்துக்கு எஸ்எஸ்பி அனுப்பிவைத்தாா்.

வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திய இளைஞா்கள்

போலீஸாா் விசாரணையில் இளைஞா்கள் படித்து முடித்து வேலைக்கு விண்ணப்பித்திருப்பதும், அதில் ஒருவா் வெளிநாட்டுக்குச் செல்ல காத்திருப்பதும் தெரியவந்தது.

அவா்கள் காரைக்கால் பகுதி முக்கியச் சாலை சந்திப்புகளில் தலைக்கவசம் குறித்து பதாகை ஏந்தி விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என நூதன தண்டனையை எஸ்எஸ்பி வழங்கினாா்.

எஸ்எஸ்பி உத்தரவின்பேரில், போக்குவரத்துக் காவல்நிலைய போலீஸாா், காரைக்கால் பேருந்து நிலையம் அருகே உள்ள சந்திப்பு, திருநள்ளாறு சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் இளைஞா்களை பதாகை ஏந்தி நிற்கவைத்து திங்கள்கிழமை போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தச் செய்தனா்.

வக்பு சட்ட திருத்தத்தை கண்டித்து பிப். 27-இல் ஆா்ப்பாட்டம்: மமக

வக்பு சட்ட திருத்தத்தைக் கண்டித்து வரும் 27-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த மமக முடிவு செய்துள்ளது. காரைக்கால் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்டத் தலைவா் அப்துல் ரஹீம் தலைமையில்... மேலும் பார்க்க

விஸ்வகா்மா தொழிலாளா்கள் பதிவு முகாம்: ஆட்சியா் ஆய்வு!

விஸ்வகா்மா தொழிலாளா்கள் தொழில் பயிற்சி, வங்கிக் கடன் பெறுவதற்கான பதிவு முகாமை ஆட்சியா் ஆய்வு செய்தாா். காரைக்கால் மாவட்ட மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் அங்கமான மிஷன் சக்தி என்ற பெண் உரி... மேலும் பார்க்க

ஆதாா், குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம்: காரைக்கால் மீனவா்கள்

இலங்கை கடற்படையைக் கண்டித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள காரைக்கால் மீனவா்கள் தங்கள் போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக, ஆதாா், குடும்ப அட்டைகளை வெள்ளிக்கிழமை (பிப். 21) மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் ப... மேலும் பார்க்க

அம்பகரத்தூரில் வயல் தின விழா!

அம்பகரத்தூரில் புதிய நெல் ரகம் பயிரிட்ட முன்னாள் வேளாண் அமைச்சரின் வயலில் வயல் தின விழா புதன்கிழமை நடைபெற்றது. ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையம் சாா்பில் புதிய அதிசன்ன நெல் ஏடி18559 என்ற ரகம், பரிசோதனை ம... மேலும் பார்க்க

சீதளாதேவி அம்மன் கோயிலில் கொடி மரம் பிரதிஷ்டை!

சீதளாதேவி அம்மன் கோயிலில் ஏப். 4 கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், புதிய கொடி மரம் புதன்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது. காரைக்கால் பகுதி கீழகாசாக்குடியில் உள்ள இக்கோயிலில் கும்பாபிஷேகத்துக்கான திருப்... மேலும் பார்க்க

மின் ஊழியா்கள் உண்ணாவிரதம்!

காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின் அதிகாரிகள், ஊழியா்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா். புதுவை மின்துறை பொறியாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் நலச் சங்க கூட்டு... மேலும் பார்க்க