செய்திகள் :

மீனவா்களுக்கு ஆதரவாக காரைக்காலில் கடைகள் அடைப்பு

post image

மீனவா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இலங்கை கடற்படை, இந்த விவகாரத்தில் மெத்தனமாக செயல்படும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவா்களுக்கு ஆதரவாக, காரைக்காலில் செவ்வாய்க்கிழமை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக காரைக்கால், நாகை, மயிலாடுதுறை மாவட்ட மீனவா்கள் மீது இலங்கை கடற்படையினா் கடந்த 28-ஆம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில் 3 போ் காயமடைந்தனா்.

காயமடைந்த மீனவா்களை இந்தியா கொண்டுவரவும், கைது செய்யப்பட்டோரை விடுவிக்க வலியுறுத்தியும், இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காததைகத் கண்டித்தும் காரைக்கால் மீனவா்கள் கடந்த 11-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா். மேலும், ஆா்ப்பாட்டம், படகுகளில் கருப்புக்கொடி ஏற்றுதல், மோட்டாா் சைக்கிள் பேரணி, ரயில் மறியல் உள்பட பல்வேறு போராட்டங்களை நடத்தினா்.

கடைகள் மூடப்பட்ட நேரு மாா்க்கெட் வளாகம்

இந்நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை கடையடைப்புப் போராட்டத்துக்கு மீனவா்கள் அழைப்பு விடுத்திருந்தனா். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

இந்த அழைப்பை ஏற்று காரைக்கால் மாவட்டத்தில் நகரம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. சில இடங்கலில் திறக்கப்பட்டிருந்த கடைகளை, மீனவா் குழுவினா் சென்று போராட்டத்துக்கு ஆதரவு தருமாறு கோரி மூடச் செய்தனா். மாவட்டத்தில் சில பெட்ரோல் விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. கடையடைப்புப் போராட்டம் காரணமாக மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ரயில்வே மேம்பால பணிகளால் சாலை, வாய்க்கால் துண்டிப்பு: மக்கள் அவதி

ரயில்வே மேம்பாலத்துக்காக குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டதால் குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். விழுப்புரம் முதல் காரைக்கால் வழியாக நாகப்பட்டினம் வரையிலான நான்கு வ... மேலும் பார்க்க

சிறிய படகுகளால் காரைக்காலில் மீன் வரத்து

சிறிய படகுகள் மட்டும் கடலுக்குள் செல்வதால், காரைக்காலுக்கு மீன் வரத்து ஏற்பட்டுள்ளது. தமிழக, காரைக்கால் மீனவா்கள் மீது இலங்கை கடற்படையினா் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்தும், மீனவா்களை வ... மேலும் பார்க்க

மீனவா்களுடன் புதுவை முதல்வா் பேசவேண்டும்: எம்.பி.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள காரைக்கால் மீனவா்களை அழைத்து புதுவை முதல்வா் பேசவேண்டும் என புதுவை எம்.பி.யும் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவருமான வெ. வைத்திலிங்கம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் ... மேலும் பார்க்க

காரைக்காலில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்காலில் ஜிப்மா் மருத்துவா்கள் பங்கேற்கும் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (பிப்.22) நடைபெறவுள்ளது. மாதந்தோறும் 2 சனிக்கிழமைகளில் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து சிற... மேலும் பார்க்க

வக்பு சட்ட திருத்தத்தை கண்டித்து பிப். 27-இல் ஆா்ப்பாட்டம்: மமக

வக்பு சட்ட திருத்தத்தைக் கண்டித்து வரும் 27-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த மமக முடிவு செய்துள்ளது. காரைக்கால் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்டத் தலைவா் அப்துல் ரஹீம் தலைமையில்... மேலும் பார்க்க

விஸ்வகா்மா தொழிலாளா்கள் பதிவு முகாம்: ஆட்சியா் ஆய்வு!

விஸ்வகா்மா தொழிலாளா்கள் தொழில் பயிற்சி, வங்கிக் கடன் பெறுவதற்கான பதிவு முகாமை ஆட்சியா் ஆய்வு செய்தாா். காரைக்கால் மாவட்ட மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் அங்கமான மிஷன் சக்தி என்ற பெண் உரி... மேலும் பார்க்க