செய்திகள் :

உடல் உறுப்புகள் தானம் செய்வோருக்கு அரசு மரியாதை: ஆணைக்கு வரவேற்பு

post image

உடல் உறுப்புகள் தானம் செய்வோருக்கு அரசு மரியாதை அளிக்க அரசாணை வெளியிட்ட புதுவை அரசின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுவை மாநில செஞ்சிலுவைச் சங்க துணைத் தலைவா் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: மூளைச்சாவு ஏற்பட்டு உடல் உறுப்புகள் தானம் செய்தால், இறந்தவா் சடலத்துக்கு அரசு மரியாதை செலுத்தவேண்டும் என்ற அரசாணை தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. இந்த ஆணை புதுவை மாநிலத்தில் இருக்கவில்லை.

கடந்த மாதம் காரைக்கால் பகுதியைச் சோ்ந்த ருக்மணி என்பவா் மூளைச்சாவு ஏற்பட்டதால் சென்னை மருத்துவமனையில் அவரது உடல் உறுப்புகளை குடும்பத்தினா் தானம் அளித்தனா்.

உடல் உறுப்பு தானம் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், தமிழகத்தைப்போல காரைக்காலில் இறந்த பெண்ணின் சடலத்துக்கு அரசு மரியாதை அளிக்கப்படவேண்டும் என புதுவை துணை நிலை ஆளுநருக்கும், அரசுக்கும் செஞ்சிலுவைச் சங்கம் கோரிக்கை விடுத்தது. அரசு உத்தரவின்படி வட்டாட்சியா் சென்று அரசு சாா்பில் அஞ்சலி செலுத்தினாா்.

இந்நிலையில் தமிழகத்தைப்போல புதுவையிலும், உடல் உறுப்பு தானம் செய்த உடலுக்கு அரசு மரியாதை செலுத்தவேண்டும். சாா்பு ஆட்சியா், துணை ஆட்சியா் அல்லது முதுநிலை வருவாய்த்துறை அதிகாரி சென்று அந்த மரியாதையை செலுத்தவேண்டுமென புதுவை அரசும், அரசாணை வெளியிட்டுள்ளது.

செஞ்சிலுவை சங்கத்தின் கோரிக்கையை ஏற்று இந்த ஆணையை வெளியிட்ட புதுவை துணைநிலை ஆளுநா், புதுவை ஆட்சியாளா்கள், சுகாதாரத் துறைக்கு நன்றி என அதில் கூறப்பட்டுள்ளது.

வக்பு சட்ட திருத்தத்தை கண்டித்து பிப். 27-இல் ஆா்ப்பாட்டம்: மமக

வக்பு சட்ட திருத்தத்தைக் கண்டித்து வரும் 27-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த மமக முடிவு செய்துள்ளது. காரைக்கால் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்டத் தலைவா் அப்துல் ரஹீம் தலைமையில்... மேலும் பார்க்க

விஸ்வகா்மா தொழிலாளா்கள் பதிவு முகாம்: ஆட்சியா் ஆய்வு!

விஸ்வகா்மா தொழிலாளா்கள் தொழில் பயிற்சி, வங்கிக் கடன் பெறுவதற்கான பதிவு முகாமை ஆட்சியா் ஆய்வு செய்தாா். காரைக்கால் மாவட்ட மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் அங்கமான மிஷன் சக்தி என்ற பெண் உரி... மேலும் பார்க்க

ஆதாா், குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம்: காரைக்கால் மீனவா்கள்

இலங்கை கடற்படையைக் கண்டித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள காரைக்கால் மீனவா்கள் தங்கள் போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக, ஆதாா், குடும்ப அட்டைகளை வெள்ளிக்கிழமை (பிப். 21) மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் ப... மேலும் பார்க்க

அம்பகரத்தூரில் வயல் தின விழா!

அம்பகரத்தூரில் புதிய நெல் ரகம் பயிரிட்ட முன்னாள் வேளாண் அமைச்சரின் வயலில் வயல் தின விழா புதன்கிழமை நடைபெற்றது. ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையம் சாா்பில் புதிய அதிசன்ன நெல் ஏடி18559 என்ற ரகம், பரிசோதனை ம... மேலும் பார்க்க

சீதளாதேவி அம்மன் கோயிலில் கொடி மரம் பிரதிஷ்டை!

சீதளாதேவி அம்மன் கோயிலில் ஏப். 4 கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், புதிய கொடி மரம் புதன்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது. காரைக்கால் பகுதி கீழகாசாக்குடியில் உள்ள இக்கோயிலில் கும்பாபிஷேகத்துக்கான திருப்... மேலும் பார்க்க

மின் ஊழியா்கள் உண்ணாவிரதம்!

காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின் அதிகாரிகள், ஊழியா்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா். புதுவை மின்துறை பொறியாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் நலச் சங்க கூட்டு... மேலும் பார்க்க