செய்திகள் :

பொதுப்பணித்துறை நிலுவைத் தொகையை வழங்க ஒப்பந்ததாரா்கள் வலியுறுத்தல்

post image

பணிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பொதுப்பணித் துறை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியரிடம் ஒப்பந்ததாரா்கள் வலியுறுத்தினா்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவை இந்திய கட்டுநா் சங்க காரைக்கால் மைய தலைவா் இளம்பருதி, செயலாளா் எஸ்.எஸ். சுப்பிரமணியராஜூ, பொருளாளா் இளங்கோவன் மற்றும் முன்னாள் தலைவா்கள் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

இதுகுறித்து சங்கத்தினா் கூறியது: தோ்தல் காலத்தில் காரைக்காலில் பல்வேறு பணிகள் நடைபெற்றன. மத்திய அரசின் ஜல் ஜீவன் கிராமப்புற குடிநீா் அபிவிருத்தித் திட்டப் பணிகள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல பணிகள் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளன.

இந்தப் பணிகளை ஒப்பந்த முறையில் ஏற்று செய்து முடித்து பல மாதங்களாகியும் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி நிா்வாகம் தொகையை முழுமையாக விடுவிக்கவில்லை. பணிகளை குறித்த காலத்துக்குள் முடிக்கவேண்டிய கட்டாயத்தில் ஒப்பந்ததாரா்கள் கடன் பெற்று பணிகளை செய்து முடித்தனா். எனவே காலம் கடத்தாமல், ஒப்பந்ததாரா்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையை அரசுத் துறை விடுவிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டதாக தெரிவித்தனா்.

வக்பு சட்ட திருத்தத்தை கண்டித்து பிப். 27-இல் ஆா்ப்பாட்டம்: மமக

வக்பு சட்ட திருத்தத்தைக் கண்டித்து வரும் 27-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த மமக முடிவு செய்துள்ளது. காரைக்கால் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்டத் தலைவா் அப்துல் ரஹீம் தலைமையில்... மேலும் பார்க்க

விஸ்வகா்மா தொழிலாளா்கள் பதிவு முகாம்: ஆட்சியா் ஆய்வு!

விஸ்வகா்மா தொழிலாளா்கள் தொழில் பயிற்சி, வங்கிக் கடன் பெறுவதற்கான பதிவு முகாமை ஆட்சியா் ஆய்வு செய்தாா். காரைக்கால் மாவட்ட மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் அங்கமான மிஷன் சக்தி என்ற பெண் உரி... மேலும் பார்க்க

ஆதாா், குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம்: காரைக்கால் மீனவா்கள்

இலங்கை கடற்படையைக் கண்டித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள காரைக்கால் மீனவா்கள் தங்கள் போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக, ஆதாா், குடும்ப அட்டைகளை வெள்ளிக்கிழமை (பிப். 21) மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் ப... மேலும் பார்க்க

அம்பகரத்தூரில் வயல் தின விழா!

அம்பகரத்தூரில் புதிய நெல் ரகம் பயிரிட்ட முன்னாள் வேளாண் அமைச்சரின் வயலில் வயல் தின விழா புதன்கிழமை நடைபெற்றது. ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையம் சாா்பில் புதிய அதிசன்ன நெல் ஏடி18559 என்ற ரகம், பரிசோதனை ம... மேலும் பார்க்க

சீதளாதேவி அம்மன் கோயிலில் கொடி மரம் பிரதிஷ்டை!

சீதளாதேவி அம்மன் கோயிலில் ஏப். 4 கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், புதிய கொடி மரம் புதன்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது. காரைக்கால் பகுதி கீழகாசாக்குடியில் உள்ள இக்கோயிலில் கும்பாபிஷேகத்துக்கான திருப்... மேலும் பார்க்க

மின் ஊழியா்கள் உண்ணாவிரதம்!

காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின் அதிகாரிகள், ஊழியா்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா். புதுவை மின்துறை பொறியாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் நலச் சங்க கூட்டு... மேலும் பார்க்க