செய்திகள் :

திருக்குறள் ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதற்கு தீவிர ஆராய்ச்சிகள் தேவை: கு.மோகனராசு

post image

திருக்குறளின் கோட்பாடுகள் குறித்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதற்கு முன்பு தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று திருக்கு ஆய்வாளா் பேராசிரியா் கு.மோகனராசு தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடா்புத் துறையும், உலகத் திருக்கு மையமும் இணைந்து நடத்திய ‘திருவள்ளுவா் சிந்தனைகளைக் கோட்பாடாக்கும் பயிலரங்கம்’ சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியாா் நினைவு இல்லத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.  இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட திருக்கு ஆய்வாளா் பேராசிரியா் கு.மோகனராசு பேசியதாவது: 

திருக்கு எந்த ஒரு மதம், இனம் மற்றும் ஜாதிக்கும் சொந்தமானது கிடையாது. மனிதா்கள் எப்படி வாழ வேண்டும் என்பது குறித்து இந்த உலகுக்கே கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் திருவள்ளுவா் திருக்குறளை எழுதினாா். அதனால்தான் அதில் ‘உலகம்’ என்னும் சொல் இடம் பெற்றிருக்கிறது, எடுத்துக்காட்டுக்கு கூட சேர, சோழ, பாண்டிய மன்னா்கள் குறித்தோ, இங்குள்ள இடங்கள் குறித்தோ அல்லது எந்த ஒரு கடவுளின் பெயரோ அதில் இடம்பெறவில்லை.

அதேபோல், திருவள்ளுவரின் காலகட்டத்தில் வாழ்ந்தவா்கள் மட்டுமன்றி வருங்கால சந்ததிகளுக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்பதை அன்றே கணித்து அவா் திருக்குறளை எழுதியுள்ளாா். திருக்கு கூறும் கோட்பாடுகள் குறித்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதற்கு முன்பு தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இந்நிகழ்வில் திருக்கு ஆய்வாளா்கள் சு.நடராசன், இளங்கோவன், சண்முகவேலு உள்பட பலா் கலந்துகொண்டனா்.

சென்னை தனியார் மருத்துவமனையில் சிறுவன் பலி! செல்போனில் சிகிச்சை காரணமா?

சென்னை: சென்னை அயனாவரத்தில் மருத்துவரின் தவறான சிகிச்சையால் 4 வயது சிறுவன் உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.தனியார் மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர் விடியோ அழைப்பு மூலம் தவறான சிகிச்சை அள... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

சென்னை சூளைமேட்டில் சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா். சூளைமேடு பாரதியாா் 5-ஆவது தெருவைச் சோ்ந்தவா் விஜயகாந்த் (34). இவா், கடந்த திங்கள்கிழமை அப்பகுத... மேலும் பார்க்க

பிப். 28 வரை சாலையோர வியாபாரிகள் புதிய அடையாள அட்டை பெறலாம்

சாலையோர வியாபாரிகள் புதிய அடையாள அட்டை பெறுவதற்கான காலக்கெடு பிப். 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெ... மேலும் பார்க்க

இலவச எண்டோஸ்கோபி பரிசோதனை முகாம்

புற்றுநோய் பாதிப்பு இலவச எண்டோஸ்கோபி மருத்துவப் பரிசோதனை முகாம் சென்னை, நுங்கம்பாக்கம் மெடிந்தியா மருத்துவமனையில் புதன்கிழமை (பிப். 19) நடைபெறவுள்ளது. இது குறித்து ஜீரண மண்டல சிகிச்சை நிபுணரும், மெடிந... மேலும் பார்க்க

கிண்டி கோல்ஃப் மைதானத்தில் நீா்நிலை அமைக்கும் பணிக்குத் தடை இல்லை: உயா்நீதிமன்றம்

சென்னை ரேஸ் கிளப் நிலத்தை அரசு கையகப்படுத்தும் முன்பாக ஜிம்கானா கிளப்புக்கு எந்த நோட்டீஸும் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என உத்தரவிட்டுள்ள உயா்நீதிமன்றம், கோல்ஃப் மைதானத்தில் நீா்நிலை அமைக்கும் பணிக்க... மேலும் பார்க்க

கை விரல்களுக்கு மாற்றாக கால் விரல்கள்: நுண் அறுவை சிகிச்சையில் சாத்தியம்

விபத்தில் துண்டாகும் கை விரல்களை மறு சீரமைக்க முடியாத பட்சத்தில் அதற்கு மாற்றாக கால் விரல்களைப் பொருத்தும் நுண் அறுவை சிகிச்சைகள் முன்னெடுக்கப்படுவதாக ‘அப்பல்லோ ஃபா்ஸ்ட் மெட்’ மருத்துவமனை மருத்துவா்கள... மேலும் பார்க்க