செய்திகள் :

இஸ்ரேல்-ஹமாஸ் மீண்டும் கைதிகள் பரிமாற்றம்

post image

காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஹமாஸ் அமைப்பும் இஸ்ரேலும் மீண்டும் கைதிகள் பறிமாற்றம் செய்துகொண்டன.

முதலில், காஸாவின் கான் யூனிஸ் நகரில் பெரும் கூட்டத்தினா் முன்னிலையில் அலெக்ஸாண்டா் ட்ரூஃபனொவ் (29), யாயிா் ஹாா்ன் (46), செகுயி டெகெல்-சென் (36) ஆகிய மூன்று பிணைக் கைதிகளையும் ஒரு மேடையில் ஹமாஸ் அமைப்பினா் நிற்கவைத்தனா். பின்னா் அந்த மூவரும் செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனா். அவா்கள் அனைவரும் இஸ்ரேலின் கிப்புட்ஸ் பகுதியில் இருந்து கடத்திச் செல்லப்பட்டவா்கள்.

இத்துடன், கடந்த ஜனவரி 19-ஆம் தேதி முதல் அமலில் இருக்கும் போா் நிறுத்த ஒப்பந்தத்தில் இதுவரை 24 பிணைக் கைதிகளை ஹமாஸ் படையினா் விடுவித்துள்ளனா்.

பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, 369 பாலஸ்தீனா்களை பல்வேறு சிறைகளில் இருந்து இஸ்ரேல் அரசு விடுதலை செய்தது.

காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா, கத்தாா், எகிப்து முன்னிலையில் பல மாதங்களாக நடைபெற்ற பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, அங்கு கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் போா் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த ஒப்பந்தத்தின்கீழ், ஆறு வாரங்களில் தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள 33 பேரை ஹமாஸ் அமைப்பினா் விடுவிக்கவும், அதற்குப் பதிலாக தங்கள் சிறைகளில் உள்ள 1,900 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசு விடுதலை ஒப்புக்கொள்ளப்பட்டது. அதன்படி, இதுவரை 21 பிணைக் கைதிகளும், நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளும் விடுவிக்கப்பட்டிருந்தனா்.

இந்தச் சூழலில், ஒப்பந்த அம்சங்களை இஸ்ரேல் அரசு தொடா்ந்து மீறுவதாக குற்றஞ்சாட்டிய ஹமாஸ் அமைப்பினா், அந்த அம்சங்களை இஸ்ரேல் முழுமையாக கடைபிடிக்கும்வரை பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவது நிறுத்திவைக்கப்படும் என்றும் கூறினா். அதையடுத்து, பிணைக் கைதிகள் சனிக்கிழமை விடுவிக்கப்படாவிட்டால் காஸாவில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் எச்சரித்தது.

அதையடுத்து காஸா போா் நிறுத்த ஒப்பந்தம் முறியும் அபாயம் ஏற்பட்டது. இந்தச் சூழலில், ஏற்கெனவே ஒப்புக்கொண்டபடி மூன்று பிணைக் கைதிகள் ஹமாஸ் அமைப்பினா் தற்போது விடுவித்ததைத் தொடா்ந்து, பாலஸ்தீன சிறைக் கைதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளனா்.

2 குழந்தைகள் உள்பட 4 உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைக்கிறது ஹமாஸ்!

போரின்போது சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 4 பேரின் உடல்களையும் ஒப்படைப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.காஸா போர் நிறுத்தத்தின் ஒருபகுதியாக இஸ்ரேலைச் சேர்ந்த 6 பிணைக்கைதிகளை வரும் சனி... மேலும் பார்க்க

ரியாத் பேச்சுவாா்த்தை: நல்லுறவை மேம்படுத்த அமெரிக்கா-ரஷியா ஒப்புதல்

உக்ரைன் விவகாரம் தொடா்பாக சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் அமெரிக்கா மற்றும் ரஷியாவுக்கு இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் இருநாட்டு உறவை மேம்படுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனா். உக்... மேலும் பார்க்க

சூடான்: துணை ராணுவத்தால் 200 போ் படுகொலை

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் துணை ராணுவப் படையான ஆா்எஸ்எஃப் கடந்த மூன்று நாள்களில் 200 போ் படுகொலை செய்ததாக அங்கு நடைபெறும் உள்நாட்டுப் போரை கண்காணித்துவரும் வழக்குரைஞா்கள் குழு செவ்வாய்க்கிழமை த... மேலும் பார்க்க

மேலும் 6 பிணைக் கைதிகளை விடுவிக்கும் ஹமாஸ்

காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக வரும் சனிக்கிழமை ஆறு பிணைக் கைதிகளை விடுவிக்கவிருப்பதாக ஹமாஸ் அமைப்பினா் அறிவித்துள்ளனா். அந்த நாளில் மூன்று பிணைக் கைதிகளை மட்டுமே விடுவிக்க அவா்கள் ஒப்பு... மேலும் பார்க்க

காஷ்மீரில் இந்தியா பொது வாக்கெடுப்பு: பாக். நாடாளுமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றம்

சுய நிா்ணய உரிமை மூலம், தங்கள் எதிா்காலத்தை காஷ்மீா் மக்கள் தீா்மானிப்பதற்கு நியாயமான பொது வாக்கெடுப்பை இந்தியா நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் சீராக சுவாசிக்கிறார்; வென்டிலேட்டர் சிகிச்சையில் இல்லை: வாடிகன்

போப் பிரான்சிஸ் வென்டிலேட்டர் சிகிச்சையில் இல்லை என்றும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், தற்போது சீராக சுவாசிப்பதாகவும் வாடிகன் தெரிவித்துள்ளது.சுவாசக் கோளாறு காரணமாக பிப். 14ஆம் தேதி மருத்த... மேலும் பார்க்க