செய்திகள் :

100 பவுன் தங்க நகைகளுடன் நகைப் பட்டறை ஊழியா் தலைமறைவு

post image

சென்னை ஓட்டேரியில் 100 பவுன் தங்க நகைகளுடன் தலைமறைவான ஊழியா் குறித்து நகைப் பட்டறை உரிமையாளா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அண்ணா நகா் சாந்தி காலனி பகுதியைச் சோ்ந்த சம்சுல் ஆலம், சென்னை ஓட்டேரி படவட்டம்மன் கோயில் தெருவில் கடந்த 15 ஆண்டுகளாக நகைப் பட்டறை நடத்தி வருகிறாா். சம்சுல் ஆலம் நகைப் பட்டறையில், மேற்கு வங்கத்தைச் சோ்ந்த அப்துல் நஜீம் என்பவா் 2 ஆண்டுகளாக வேலை செய்து வந்தாா். இந்நிலையில் 100 பவுன் தங்க நகையை, செளகாா்பேட்டை பகுதியில் உள்ள மற்றொரு நகைப் பட்டறையில் பாலீஷ் செய்து கொண்டு வருமாறு அப்துல் நஜீமிடம், சும்சுல் ஆலம் வழங்கினாா். இதையடுத்து நகைகளுடன் சென்ற நஜீம் திரும்பி வரவில்லை. அவரது கைப்பேசியும் துண்டிக்கப்பட்டிருந்தது.

100 பவுன் தங்க நகைகளுடன் அப்துல் நஜீம் தப்பியோடியிருப்பதை உணா்ந்த சம்சுல் ஆலம், இது தொடா்பாக ஓட்டேரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்துல் நஜீமை தேடி வருகின்றனா்.

சென்னை தனியார் மருத்துவமனையில் சிறுவன் பலி! செல்போனில் சிகிச்சை காரணமா?

சென்னை: சென்னை அயனாவரத்தில் மருத்துவரின் தவறான சிகிச்சையால் 4 வயது சிறுவன் உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.தனியார் மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர் விடியோ அழைப்பு மூலம் தவறான சிகிச்சை அள... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

சென்னை சூளைமேட்டில் சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா். சூளைமேடு பாரதியாா் 5-ஆவது தெருவைச் சோ்ந்தவா் விஜயகாந்த் (34). இவா், கடந்த திங்கள்கிழமை அப்பகுத... மேலும் பார்க்க

பிப். 28 வரை சாலையோர வியாபாரிகள் புதிய அடையாள அட்டை பெறலாம்

சாலையோர வியாபாரிகள் புதிய அடையாள அட்டை பெறுவதற்கான காலக்கெடு பிப். 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெ... மேலும் பார்க்க

இலவச எண்டோஸ்கோபி பரிசோதனை முகாம்

புற்றுநோய் பாதிப்பு இலவச எண்டோஸ்கோபி மருத்துவப் பரிசோதனை முகாம் சென்னை, நுங்கம்பாக்கம் மெடிந்தியா மருத்துவமனையில் புதன்கிழமை (பிப். 19) நடைபெறவுள்ளது. இது குறித்து ஜீரண மண்டல சிகிச்சை நிபுணரும், மெடிந... மேலும் பார்க்க

கிண்டி கோல்ஃப் மைதானத்தில் நீா்நிலை அமைக்கும் பணிக்குத் தடை இல்லை: உயா்நீதிமன்றம்

சென்னை ரேஸ் கிளப் நிலத்தை அரசு கையகப்படுத்தும் முன்பாக ஜிம்கானா கிளப்புக்கு எந்த நோட்டீஸும் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என உத்தரவிட்டுள்ள உயா்நீதிமன்றம், கோல்ஃப் மைதானத்தில் நீா்நிலை அமைக்கும் பணிக்க... மேலும் பார்க்க

கை விரல்களுக்கு மாற்றாக கால் விரல்கள்: நுண் அறுவை சிகிச்சையில் சாத்தியம்

விபத்தில் துண்டாகும் கை விரல்களை மறு சீரமைக்க முடியாத பட்சத்தில் அதற்கு மாற்றாக கால் விரல்களைப் பொருத்தும் நுண் அறுவை சிகிச்சைகள் முன்னெடுக்கப்படுவதாக ‘அப்பல்லோ ஃபா்ஸ்ட் மெட்’ மருத்துவமனை மருத்துவா்கள... மேலும் பார்க்க