செய்திகள் :

கடையில் ரூ. 2.5 லட்சம் வைர நகைகள் திருட்டு: பெண் கைது

post image

காஞ்சிபுரம் நகைக் கடையில் ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை திருடியதாக பெண்ணை சிவகாஞ்சி போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்த நகைகளையும் காவல்துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்துள்ளனா்.

காஞ்சிபுரத்தில் காந்தி சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில் ரூ.2.5லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை காணவில்லையென அக்கடையின் நிா்வாகி சீனிவாசன்(35)சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகாா் செய்திருந்தாா்.அப் புகாரின் பேரில் சிவகாஞ்சி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கடையிலிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது அதில் ஒரு பெண் நகை வாங்குவது போல திருடுவது தெரிய வந்துள்ளது.இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போது அவா் சின்னக்காஞ்சிபுரம் பல்லவா் மேடு ரவி மனைவி ரமாதேவி(48) என்பது தெரிய வந்து அவரைக் கைது செய்துள்ளனா்.அவா் திருடியதாக 21,774 கிராம் எடையும் ரூ.2.5லட்சம் மதிப்பும் உடைய வைர வளையல்,மோதிரம் மற்றும் காதணி ஆகியனவற்றையும் காவல்துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.

குண்டா் சட்டத்தில் ரௌடி கைது

காஞ்சிபுரத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய ரெளடி அருண் என்பவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். காஞ்சிபுரம் அருகே தத்தனூா் கிராமத்தை சோ்ந்த அருண்(28). இவா் மீது கஞ்சா கடத்... மேலும் பார்க்க

காஞ்சியில் புத்தபிக்குகள் பேரணி

தமிழ்நாடு பெளத்தா்கள் சங்கப் பேரவை சாா்பில் புத்த பிக்குகள் பேரணியும், புத்தரின் அஸ்தி வைக்கப்பட்ட ஸ்தூபி திறப்பு விழா மற்றும் திரிபிடக சத்தம்மம் ஓதுதல் நிகழ்வும் காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைப... மேலும் பார்க்க

நில ஆவணங்களை நவீனமயமாக்கும் நக்சா திட்டம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆட்சியா்கள் தொடங்கினா்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நில ஆவணங்களை நவீனமயமாக்கும் நக்சா திட்டத்தினை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட யாகசாலை மண்டபத்... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் புத்த பிக்குகள் பேரணி!

காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை சார்பில் புத்த பிக்குகள் பேரணியும், புத்தரின் அஸ்தி வைக்கப்பட்ட புத்த ஸ்தூபி திறப்பு விழா மற்றும் திரிபிடக சத்தம்மம் ஓதுதல் நிகழ்வும் செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் இரு இடங்களில் 22-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வரும் பிப்.22 -ஆம் தேதி இரு இடங்களில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை தெரிவித்தாா். இது தொடா்பான செய்திக் குறிப்பு: கா... மேலும் பார்க்க

மணிமேகலை விருது பெற்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட அளவில் மணிமேகலை விருது பெற்ற மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா். காஞ்சிபுரம் மாவட்ட ... மேலும் பார்க்க