செய்திகள் :

உங்களது வாகனத்தில் ஃபாஸ்ட் டேக் இல்லையா? பிரச்னையே இல்லை; மத்திய அரசு அறிவித்த புதிய நடைமுறை

post image

பணமாக அல்லாமல், டிஜிட்டல் முறையில் சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் வசூலிக்கப்பட வேண்டும் என்று தான் ஃபாஸ்ட் டேக் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நடைமுறை 2021-ம் ஆண்டு முதல், தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்களுக்கு கட்டாயமாக்கப்பட்டது.

இப்போதிருக்கும் நடைமுறை

அதன் பின், ஃபாஸ்ட் டேக் இல்லாமலோ அல்லது எக்ஸ்பைரி ஆன ஃபாஸ்ட் டேக்குகளுடன் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணித்தால், பொதுவான சுங்கச்சாவடி கட்டணத்தைவிட, இரண்டு மடங்கு அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

உதாரணத்திற்கு, ஒரு சுங்கச்சாவடியில் ஃபாஸ்ட் டேக் இருக்கும் காருக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்பட்டால், அது இல்லாத கார் ரூ.200 செலுத்த வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலை
தேசிய நெடுஞ்சாலை

புதிய நடைமுறை

இதை மாற்றி தற்போது புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம்.

அதன் படி, ஃபாஸ்ட் டேக் இல்லாத வாகனங்கள் அல்லது செல்லாத ஃபாஸ்ட் டேக் வைத்திருக்கும் வாகனங்கள் நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் யு.பி.ஐ மூலம் கட்டணம் செலுத்தினால் இனி 1.25 மடங்கு தொகை மட்டுமே வசூலிக்கப்படும்.

அதாவது, (மேலே குறிப்பிட்டுள்ள உதாரணத்தின் படி) இந்த வாகனங்கள் சுங்கச்சாவடி கட்டணத்தை யு.பி.ஐ மூலம் செலுத்தினால் 1.25 மடங்கு ரூ.125 மட்டுமே செலுத்தினால் போதும்.

இந்த நடைமுறை வருகிற நவம்பர் மாதம் 15-ம் தேதி முதல் அமலாக உள்ளது.

சனே தகைச்சி: ஜப்பானின் முதல் பெண் பிரதமர் - பெண்ணியவாதிகளுக்கு மகிழ்ச்சி அளிக்காதது ஏன்?

ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக பதவியேற்கவிருக்கிறார் 64 வயதாகும் சனே தகைச்சி. மேலும் அமைச்சரவையில் பெண்களின் பங்களிப்பை அதிகப்படுத்துவதாகவும் உறுதியளித்திருக்கிறார்.ஜப்பான் சர்வதேச அளவில் பாலின ... மேலும் பார்க்க

கரந்தை: `நாங்களும் கொடுக்காத மனு இல்ல பாக்காத ஆள் இல்ல' சிதைந்த படித்துறையை சீரமைக்க கோரும் மக்கள்!

தஞ்சாவூர் மாவட்டம் கரந்தையில் உள்ள வடவாறு படித்துறை கடந்த எட்டு வருடமாக சிதைந்து கிடக்கிறது. அதனை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதுகுறித்து அப்பகுதி மக்... மேலும் பார்க்க

பால் தாக்கரே இறந்தபிறகு அவரது கைரேகையை எடுத்தாரா உத்தவ்? - ஷிண்டே கட்சித் தலைவரின் பேச்சால் சர்ச்சை

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி 2023ம் ஆண்டு இரண்டாக உடைந்தது. தற்போது துணை முதல்வராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணி உருவாகி ஒட்டுமொத்த கட்சியையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறது... மேலும் பார்க்க

இஸ்ரேல்-காசா போர் நிறுத்தம்? ஒப்புக்கொண்ட ஹமாஸ்; இஸ்ரேலுக்கு ட்ரம்ப் உத்தரவு என்ன?

கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 29), அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இஸ்ரேல் - பாலஸ்தீன போர் நிறுத்தத்திற்காக 20 பரிந்துரைகளைப் பரிந்துரைத்திருந்தார். ஹமாஸின் ஒப்புதல் ஐ.நா பொதுசபைக்காக, அப்போது அமெரிக்கா சென்... மேலும் பார்க்க

TVK என்ன மாதிரி கட்சி? - கொந்தளித்த High Court | Vijay | Karur Stampede case |

Karur stampede சம்பவத்தில், தவெக, அதன் தலைவர் விஜய் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது. நீதிமன்றத்தில் நடந்த வாதங்கள் குறித்து விளக்குகிறது இந்த வீடியோ மேலும் பார்க்க