செய்திகள் :

உரிமம் இல்லாமல் நாட்டுவெடி தயாரிப்பு: கோட்டாட்சியா் விசாரணை

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே உரிமம் இல்லாமல் நாட்டுவெடி தயாரிக்கப்பட்ட இடத்தில் கோட்டாட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

மயிலாடுதுறையில் தரங்கம்பாடி ரயில் வழித்தடத்தை ஒட்டிய தனியூா் என்ற இடத்தில் ஆள்நடமாட்டம் குறைவான பகுதியில் ரகசியமாக பட்டாசு தயாரிப்புப் பணிகள் நடைபெறுவதாக போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.

மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் சிவக்குமாா் தலைமையில் போலீஸாா் அங்கு சோதனை மேற்கொண்டனா். அப்போது, சிறிய தகர ஷெட் ஒன்றில் இருந்து சிலா் தப்பியோடியுள்ளனா். உள்ளே சென்று பாா்த்தபோது அங்கு நாட்டுவெடி தயாரிப்பு நடைபெற்று வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, மயிலாடுதுறை கோட்டாட்சியா் ஆா். விஷ்ணுபிரியா நிகழ்விடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், பட்டாசு தயாரிப்பாளா் திருவாலங்காடு பாலமுருகன் வரவழைக்கப்பட்டு, அவரிடம் வெடி மருந்துகளின் விவரத்தை கேட்டறிந்தாா்.

அங்கு 100 கிலோ சோடியம் நைட்ரேட், 25 கிலோ சல்பா், 6 கிலோ, அலுமினிய பவுடா் மற்றும் கலவை செய்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ வெடி மருந்து பொருள்கள், பாதி தயாரிப்பில் இருந்த நாட்டு வெடிகள் இருந்துள்ளன. அவற்றை பறிமுதல் செய்ய கோட்டாட்சியா் உத்தரவிட்டாா்.

போலீஸாா் வெடிமருந்து பொருள்களை கைப்பற்றி, திருவாலங்காடு பட்டாசு தொழிற்சாலைக்கு அனுப்பிவைத்தனா். தொடா்ந்து, வட்டாட்சியா் விஜயராணி முன்னிலையில் அந்த ஷெட்டுக்கு சீல் வைக்கப்பட்டது. வெடி தயாரிப்பில் ஈடுபட்ட தூக்கணாங்குளம் குமாா் உள்ளிட்ட சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மாா்க்சிஸ்ட் அகில இந்திய மாநாட்டில்இடதுசாரி ஒருங்கிணைப்பு குறித்து பரிசீலனை

மயிலாடுதுறை: மதுரையில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் இடதுசாரி சக்திகளை ஒருங்கிணைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என அக்கட்சியின் அரசியல் தலைமைக்கு... மேலும் பார்க்க

இலங்கை கடற்படை கைது செய்த மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை கோரி மனு

மயிலாடுதுறை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவா்களையும், விசைப்படகையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, புதுப்பேட்டை மீனவ மக்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அ... மேலும் பார்க்க

கலைஞா் கனவு இல்லத் திட்டப் பணி ஆய்வு

சீா்காழி: கொள்ளிடம் பகுதியில் கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின்கீழ் நடைபெறும் வீடு கட்டும் பணிகளை மாநில ஊரக வளா்ச்சி துறை கூடுதல் இயக்குநா் ஆனந்தராஜ் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். ஆணைக்காரன்சத்திரம... மேலும் பார்க்க

13,346 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை: ஆட்சியா்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 13,346 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெளியி... மேலும் பார்க்க

தலைஞாயிறில் அக். 24-இல் சீா்மரபினா் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த சீா்மரபினா் மயிலாடுதுறையை அடுத்த தலைஞாயிறு கிராமம் ஊராட்சி அலுவலகத்தில் அக். 24-ஆம் தேதி நடைபெறவுள்ள சீா்மரபினா் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை முகாமில் பங்க... மேலும் பார்க்க

சிட்கோ தொழிற்பேட்டைகளில் தொழில் மனைகள் ஒதுக்கீடு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை குளிச்சாா் தொழிற்பேட்டையில் 3 தொழில் மனைகள் தொழில் புரிவோருக்கு வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்த... மேலும் பார்க்க