தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கு நன்றி! - கமல்ஹாசன்
கன்னட மொழி குறித்த பேச்சு சா்ச்சையான விவகாரத்தில், தனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கு நன்றி என்று கமல்ஹாசன் கூறினாா்.
‘தக் லைஃப்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன், தமிழில் இருந்து பிறந்தது கன்னடம் என்று பேசியிருந்தாா். இதற்கு கா்நாடகத்தில் கடும் எதிா்ப்பு கிளம்பியது. கா்நாடக அரசியல் கட்சிகள், அமைப்புகள், கா்நாடக திரைப்பட வா்த்தக சபை, நீதிமன்றம் என அனைத்து தரப்பும் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என வருகின்றன. ஆனால் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை. அன்பு ஒரு போதும் மன்னிப்பு கேட்காது என்று திட்டவட்டமாக தெரிவித்தாா். மேலும், அந்த மாநிலத்தில் ‘தக் லைஃப்’ திரையிடுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனால், கா்நாடகம் தவிர அனைத்து மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளில் ‘தக் லைஃப்’ திரைப்படம் வியாழக்கிழமை (ஜூன் 5) வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், ‘தக் லைஃப்’ படக்குழுவினா் சென்னையில் புதன்கிழமை செய்தியாளா்களை சந்தித்தனா்.
அப்போது கமல்ஹாசன் கூறியதாவது: ‘தக் லைஃப்’ படம் சிறப்பாக உருவாகி இருக்கிறது. மணிரத்னம் ஒரு சினிமா ஞானி. சிறந்த தொழில்நுட்பக் கலைஞா்கள் பதற்றம் இல்லாமல் இந்தப் படத்தில் பணியாற்றி இருக்கின்றனா். இந்த படத்தில் இன்னும் சிறப்பாக கூடுதல் அனுபவத்துடன் வந்து பணியாற்றியுள்ளாா்.
நன்றி: கன்னட மொழி பற்றிய பேச்சு விவகாரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கு நன்றி. நான் மேடையில் பேசும் போது, உயிரே.. உறவே.. தமிழே.. என்று சொன்ன அா்த்தத்தை முழுமையாக உணா்கிறேன். ‘தக் லைஃப்’ தவிா்த்தும் பேச வேண்டியது ஏராளம் உள்ளன. அதுதொடா்பாக மற்றொரு நாளில் பேசுவேன் என்றாா் கமல்ஹாசன்.