செய்திகள் :

ஊட்டி: 80 அரசு தொடக்கப்பள்ளிகளை ரகசியமாக மூடும் திட்டத்தில் அதிகாரிகள்?! - நடப்பது என்ன?

post image

மலை மாவட்டமான நீலகிரி, பழங்குடிகள், பட்டியலின மக்கள், தோட்ட தொழிலாளர்கள், மலை காய்கறி விவசாய கூலிகள் என விளிம்பு நிலை மக்கள் நிறைந்த மாவட்டமாக இருக்கிறது. முதல் தலைமுறையாக கல்வி கற்கும் இந்த மக்களின் கல்வித் தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரே நம்பிக்கையாக அரசு பள்ளிகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.

போக்குவரத்து வசதிகளற்ற மலை கிராமங்களிலும், வனங்கள் அடர்ந்த பகுதிகளிலும் அரசு பள்ளிகள் மட்டுமே தொடர்ந்து கல்வி சேவையாற்றி வருகின்றன. அதிகரிக்கும் தனியார் பள்ளிகள், குறைந்த மக்கள் அடர்த்தி போன்ற காரணங்களால் கிராம பகுதிகளில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இந்நிலையில், 15 மாணவர்களுக்கும் குறைவாக இருக்கும் பள்ளிகளை மூடும் விதமாக அந்த மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுத்து அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வித்துறை தொடர்பான ஆய்வு கூட்டத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லக்ஷ்மி பவ்யா தன்னீரு உத்தரவிட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அரசு தொடக்கப் பள்ளி

இதன் அடிப்படையில் 15 மாணவர்களுக்கும் குறைவாக இருக்கும் பள்ளிகளின் விவரங்கள் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் தலைமையில் சேகரிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 80 பள்ளிகளை மார்ச் மாதத்திற்குள் மூடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் விளிம்பு நிலை மக்களின் கல்வி தடைபடும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. அரசு தொடக்கப் பள்ளிகளை மூடும் நடவடிக்கைகளை மிகவும் ரகசியமாக மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இதன் பின்னணி குறித்து நம்மிடம் தெரிவித்த ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் , " 15 மாணவர்களுக்கும் குறைவாக இருப்பதாக குன்னூர் வட்டாரத்தில் 19 அரசு தொடக்கப் பள்ளிகள், கூடலூர் வட்டாரத்தில் 18 தொடக்கப் பள்ளிகள், கோத்தகிரி வட்டாரத்தில் 11 தொடக்கப் பள்ளிகள், ஊட்டி வட்டாரத்தில் 37 தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 85 அரசு தொடக்கப் பள்ளிகளை மூடுவதற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், பெற்றோரை தனித்தனியாக அழைத்து குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்க்குமாறு தொிவிக்க வேண்டும்.

இது குறித்து பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட யாருக்கும் தெரிவிக்க கூடாது. எந்தவித பிரச்சனையும் எழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த பணிகளை முறையாக முடிக்கும் தலைமையாசிரியர்களுக்கு அவர்கள் கேட்கும் பள்ளிக்கு பணியிட மாறுதல் தரப்படும். உாிய நடவடிக்கை எடுக்காத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது" என்றார்.

அரசு தொடக்கப் பள்ளி

இந்த விவகாரம் குறித்து நீலகிரி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சந்தோஷிடம்‌ பேசினோம், " குறைவான மாணவர் எண்ணிக்கை உள்ள பள்ளிகளை மட்டுமே கணக்கு எடுத்து பட்டியல் தயார் செய்திருக்கிறோம். மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். பள்ளிகளை மூடுவதாக சொல்வது போன்ற திட்டம் எதுவும் இல்லை " என்றார்.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

OPS: 'அமித் ஷா எவ்வளவோ சொன்னாரே, ஆனால் இபிஎஸ்...' - ஓ.பன்னீர் செல்வம் ஓப்பன் டாக்

அதிமுக உட்கட்சி வழக்கில் தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (பிப்ரவரி 12)உத்தரவிட்டது.இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஓ.பன்னீர் செல்வம், “ இந்த இயக்க... மேலும் பார்க்க

Kamal: நேற்று அமைச்சர், இன்று துணை முதல்வர்... கமல்ஹாசனை நேரில் சந்தித்த உதயநிதி!

முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் மறைவுக்குப் பின்னர், `மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சி தொடங்கிய கமல்ஹாசன், 2021 சட்டமன்றத் தேர்தலில் தனித்துக் களமிறங்கித் தோல்வியடைந்தார். அதி... மேலும் பார்க்க

மலக்குழி மரணங்கள்: சுத்தம் செய்ய வேண்டியது பாதங்களை அல்ல; உங்கள் மண்டையை!

"இனி ஒரு போதும் உங்கள் குப்பைகளில் ஒரு துரும்பைக் கூட நாங்கள் எடுக்க மாட்டோம்", "நாங்களும் மனிதர்கள்தான்" - அமெரிக்காவிலுள்ள மெம்பிஸ் நகரம் ஆப்ரோ அமெரிக்கத் தூய்மை பணியாளர்களால் ஸ்தம்பித்தது. எங்குப் ... மேலும் பார்க்க

``அறிவாலயத்தை தொட்டுக் கூடப் பார்க்க முடியாது..."- அண்ணாமலையின் பேச்சுக்கு அமைச்சர் சேகர் பாபு பதில்

சென்னை திருவான்மியூரில் பா.ஜ.க-வின் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அண்ணாமலை, ``தமிழ்நாட்டு பா.ஜ.க-வின் தலைவர் பதவியில் நான் தொடர முடியாது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் ... மேலும் பார்க்க

கழுகார்: 'கோட்டை' சீனியருக்கு 'கீ' கொடுத்தாரா தங்கமான மாஜி? டு சிக்கலில் மாட்டிய 'சக்கர'ப் புள்ளி!

செம கடுப்பில் அதிகாரிகள், நிர்வாகிகள்!கப்பத்தை உயர்த்திய ஆளுங்கட்சிப் பிரமுகர்...'ஜில்' மாவட்டத்தில், மாநில அரசுத் திட்டம் முதல் மத்திய அரசுத் திட்டம் வரை எல்லாவற்றுக்கும் கப்பம் வசூலித்துவந்தார் அந்த... மேலும் பார்க்க

`திருப்பரங்குன்றம் மலை பிரச்னைக்காக சென்னையில் பேரணி நடத்துவதா?' - உயர் நீதிமன்றம் கேள்வி!

"திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி மதுரை மாவட்டத்திலுள்ள அழகர்கோயில் 18 ஆம் படி கருப்பசாமிக்கும், பாண்டி கோயில் உள்ளிட்ட கோயில்களில் பிராணிகளை பலியிடுவது வழக்கமாக உள்ளது...." என்று தமிழக அரசு சார்பில் ... மேலும் பார்க்க