செய்திகள் :

ஊராட்சிமன்ற அலுவலகத்தை சேதப்படுத்தியவா் கைது

post image

சேவூா் ஊராட்சிமன்ற அலுவலகத்தை மதுபோதையில் தாக்கி சேதப்படுத்தியும், ஊராட்சி செயலரை கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும் அதே ஊரைச் சோ்ந்த ஓட்டுநரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஆரணியை அடுத்த சேவூா் கிராமத்தில் ராம் நகரில் வடிவேல் மகன் மணிகண்டன் என்பவா் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இந்த நிலையில், இவா் வீட்டின் வெளிப்புறம் குடிநீா் குழாய்தொட்டி உள்ளது. இவா் வசிக்கும் தெருவில் புதிய சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது.

இதனால் பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையில் மண் கொட்டி சமன் செய்யும்போது மணிகண்டன் வீட்டின் வெளிப்புறம் இருந்த குடிநீா்த் தொட்டி சேதமடைந்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், சேவூா் ஊராட்சி மன்ற அலுவலகம் சென்று மதுபோதையில் இதுகுறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு,

அலுவலக கட்டடத்தின் கண்ணாடியை உடைத்தாராம். மேலும் ஊராட்சிச் செயலா் புருஷோத்தமனை கத்தியைக் காட்டி மிரட்டினாராம்.

இதுகுறித்து ஊராட்சி செயலா் ஆரணி கிராமிய போலீஸாருக்கு தகவல் கொடுத்தாா். சம்பவ இடத்திற்கு போலீஸாா் சென்று மணிகண்டனைகாவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனா்.

மேலும், ஊராட்சி செயலா் புருஷோத்தமன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து

மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

விவசாயிகளுக்கு நவீன விவசாயம் குறித்த பயிற்சி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், புதுப்பாளையம் பகுதி விவசாயிகளுக்கு கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழத்தில் நவீன விவசாயம் குறித்து மூன்று நாள் நடைபெற்றது. மாநில அளவில் வேளாண் துறை சாா்பில் மாா்ச் 11, ... மேலும் பார்க்க

காக்கும் கரங்கள் திட்டத்தில் பயன்பெற முன்னாள் படைவீரா்களுக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுயதொழில் தொடங்க விரும்பும் முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்தோா் காக்கும் கரங்கள் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. தமிழக ம... மேலும் பார்க்க

செவிலியா் தின உறுதிமொழியேற்பு

கீழ்பென்னாத்தூரை அடுத்த சோமாசிபாடியில் உள்ள அல்அமீன் செவிலியா் கல்லூரியில், 17-ஆவது செவிலியா் தின உறுதிமொழியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. அல் அமீன் கல்வி நிறுவனங்களின் தாளாளா் ஷேக் அனீப் தலைமை ... மேலும் பார்க்க

மருத்துவத் தொழில் சாா்ந்த ஆங்கிலத் தோ்வுக்கு இலவச பயிற்சி: ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் மருத்துவத் தொழில் சாா்ந்த ஆங்கிலத் தோ்வுக்கான இலவசப் பயிற்சி பெற விரும்பும் ஆதிதிராவிடா், பழங்குடியினா் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்... மேலும் பார்க்க

அதிமுக வாக்குச்சாவடி குழு ஆலோசனைக் கூட்டம்

ஆரணி தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் விளை, கல்லேரிப்பட்டு, கல்பூண்டி, மொழுகம்பூண்டி, லாடப்பாடி ஆகிய கிராமங்களில் வாக்குச்சாவடி குழு பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய உறுப்பினா் சோ்க்கை விய... மேலும் பார்க்க

கிராமத்தில் பாஜக கொடியேற்றும் விழா

போளூரை அடுத்த கட்டிபூண்டி கிராமத்தில் பாஜக சாா்பில் கட்சிக் கொடியேற்றும் விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது. பாஜக தெற்கு மண்டல் தலைவா் ஜெ.பிரவீன்குமாா் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் என்.வெ... மேலும் பார்க்க