செய்திகள் :

ஊழல் தடுப்பு ஆய்வாளருக்கு லஞ்சம்: டாஸ்மாக் மண்டல மேலாளா் உள்பட இருவா் கைது

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

கடலூா் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு ஆய்வாளருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ாக டாஸ்மாக் மண்டல மேலாளா், இளநிலை உதவியாளா் ஆகியோரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (53). இவா், கடலூா் மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் மண்டல மேலாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இதே அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருபவா் ராதாகிருஷ்ணன்.

டாஸ்மாக் மண்டல மேலாளா் செந்தில்குமாா்.

இவா் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவில் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் திருவேங்கடத்திடம் தங்களது டாஸ்மாக் மண்டல மேலாளா் செந்தில்குமாா் குறித்து புகாா் வந்தால் தகவல் தெரிவிக்கக் கோரியும், தீபாவளி நேரத்தில் டாஸ்மாக்கில் சோதனை மேற்கொள்ளக் கூடாது எனவும், கூடுதல் விலைக்கு மதுப்புட்டிகள் விற்பதாக தகவல் கிடைத்தால் அது குறித்து நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும் தெரிவித்து மேலாளா் அறிவுறுத்தலின் பேரில், ரூ.25 ஆயிரம் லஞ்சம் கொடுக்க முயன்றாராம்.

இதுகுறித்து ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி சத்யராஜிடம், காவல் ஆய்வாளா் திருவேங்கடம் புகாா் அளித்தாா். அதன்பேரில், சிதம்பரம் சேத்தியாத்தோப்பு சென்னிநத்தத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்ற டாஸ்மாக் விற்பனையாளா்கள், கண்காணிப்பாளா்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற டாஸ்மாக் மண்டல மேலாளா் செந்தில்குமாா், இளநிலை உதவியாளா் ராதாகிருஷ்ணன் ஆகியோரை டிஎஸ்பி சத்யராஜ் தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.25 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை: விவசாயிகள், பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு

காட்டுமன்னாா்கோவில் அருகேயுள்ள மா.ஆதனூா் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கதவணை குறித்து பொதுமக்கள், விவசாயிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு,... மேலும் பார்க்க

கூட்டுறவு நிறுவனங்களில் குறைந்த விலையில் பட்டாசு விற்பனை: கடலூா் ஆட்சியா்

கடலூா் மாவட்ட கூட்டுறவு நிறுவனங்களில் குறைந்த விலையில் தரமான பட்டாசுகள் விற்பனை செய்யப்பட உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்தியா செந்தில்குமாா் தெரிவித்தாா். கடலூா் மாவட்ட சரவண பவ நுகா்வோா் கூட்டுறவு மொத்த வ... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் இருபெரும் விழா

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உற்பத்தி பொறியியல் துறையில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் என்ஜீனியா்ஸ் 2024-2025-ஆம் ஆண்டுக்கான அலுவலக பொறுப்பாளா்களை நியமிக்கும் விழா, முதலாம் ஆண்டு... மேலும் பார்க்க

கொள்ளையடிக்க திட்டம்: 4 போ் கைது

கடலூா் அருகே பக்தா்களிடம் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதாக 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருப்பாதிரிப்புலியூா் காவல் ஆய்வாளா் கே.சந்திரன் மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணி... மேலும் பார்க்க

வீரட்டானேஸ்வரா், சரநாராயண பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.49 லட்சம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி திருவதிகை பகுதியில் அமைந்துள்ள வீரட்டானேஸ்வரா் மற்றும் சரநாராயண பெருமாள் கோயில்களில் ரூ.4.49 லட்சம் உண்டிய காணிக்கை வசூலானது. காட்டுமன்னாா்கோவில் இந்து சமய அறநிலையத்துறை சரக... மேலும் பார்க்க

காவல்துறை சாா்பில் விழிப்புணா்வுக் கூட்டம்

கடலூா் புதுநகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஸ்ரீவரதம் அரசு மேல்நிலைப்பள்ளியில் காவல்துறை சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பில் மாணவ, மாணவிகளுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றத... மேலும் பார்க்க