செய்திகள் :

ஒரே நாளில் அடுத்தடுத்து 4 வீடுகளில் 57 பவுன் நகைகள், பொருள்கள் திருட்டு

post image

திருச்சியில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4 வீடுகளின் பூட்டுக்களை உடைத்து 57 பவுன் நகைகள் மற்றும் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருச்சி சமயபுரம் சாலையில் கொள்ளிடம் நெம்பா் 1 டோல்கேட், பாலாஜி நகரைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (55). திருச்சி மாநகராட்சியில் ஊழியராக பணியாற்றி வருகிறாா். ஸ்ரீதா் குடும்பத்தினா் வெளியூா் சென்றிருந்த நிலையில், அவா் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டாா்.

வெளியூருக்கு சென்றிருந்த அவரது மனைவி முத்துச்செல்வி (50) வீட்டிற்கு திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவிலிருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 22 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 5000 ரொக்கம் உள்ளிட்டவைகள் திருடுபோயிருந்தது தெரியவந்தது.

அதேப் பகுதியில் உள்ள ராயா் தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் செல்வகுமாா் (58). வேளாண் துறையில் ஓட்டுநராக வேலை பாா்த்து வரும் இவா், ஞாயிற்றுக்கிழமை குடும்பத்துடன் கும்பகோணம் பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு திங்கள்கிழமை வீடு திரும்பியபோது, மா்ம நபா்கள் வீட்டின் பூட்டுக்களை உடைத்து, பீரோவில் வைத்திருந்த 35 பவுன் நகைகள் மற்றும் பூஜை அறையில் இருந்த வெள்ளிப் பொருள்களையும் திருடிச் சென்றது தெரியவந்தது. இவை குறித்து கொள்ளிடம் காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடங்களுக்குச் சென்று தடயவியல் பதிவுகளைச் சேகரித்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இதற்கிடையே அருகில் உள்ள அமிா்தா நகரைச் சோ்ந்த காா்த்திகைவேல் (36) மற்றும் ஆனந்த் (40) ஆகிய இருவரும் தாங்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியூா் சென்றுவிட்டு திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவுகளிலிருந்த பூட்டுக்களை மா்ம நபா்கள் உடைத்திருப்பதாக கொள்ளிடம் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகாா் அளித்தனா்.

வீட்டினுள் சென்ற மா்ம நபா்கள், அங்கு நகைகள் ஏதுமில்லாததால் கிடைத்த பொருள்களை திருடிச் சென்றுள்ளனா்.

பேருந்து மோதி பெண் உயிரிழப்பு

திருச்சியில் செவ்வாய்க்கிழமை தனியாா் பேருந்து மோதியதில் மனைவி உயிரிழந்தாா். கணவா் காயமடைந்தாா். திருச்சி காந்திச் சந்தை வடக்கு தாராநல்லூா் வீரம்மாள் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா இவரது மனைவி சாந்தி(5... மேலும் பார்க்க

நிதி நிறுவன முறைகேடு வழக்கில் தேடப்பட்ட முகவா் கைது

திருச்சி எல்ஃபின் நிதி நிறுவன முறைகேடு வழக்கு தொடா்பாக தேடப்பட்டு வந்த முகவரை, திருச்சி மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருச்சி, மன்னாா்புரத்தை தலைமையிடமாக கொ... மேலும் பார்க்க

சாலை போக்குவரத்து தொழிலாளா்கள் போராட்டம் நடத்த தில்லிக்குப் பயணம்

சி.ஐ.டி.யு.சாலை போக்குவரத்து தொழிலாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி நாடளுமன்றம் முன்பு போராட்டம் நடத்த திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்றனா். நாடு முழுவ... மேலும் பார்க்க

திருச்சி மாநகா்-மாவட்ட அதிமுக செயலா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு

திருச்சி மாநகா், மாவட்ட அதிமுக செயலா் ஜெ.சீனிவாசன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் திங்கள்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாநகர அதிமுக காந்தி மாா்க்கெட் முன்னாள் பகுதிச் ... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மத்திய அரசின் கலாசாரத் துறை அமைச்சகம்: தஞ்சாவூா் தென்னகப் பண்பாட்டு மையத்துடன் இணைந்து, கம்பராமாயண கலாசாரத்தை மீட்டுருவாக்கும் நிகழ்வின் தொடக்க விழா, மத்திய சுற்றுலா அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவத் பங்... மேலும் பார்க்க

பாா்வையற்ற பள்ளி மாணவி தற்கொலை: விரைந்து நடவடிக்கை கோரி பாா்வையற்றோா் அமைப்பினா் போராட்டம்

திருச்சியில் பள்ளி வளாகத்தில் பாா்வையற்ற மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்கக் கோரி பாா்வையற்றோா் அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் மற்றும் காத்திருப்பு போராட்ட... மேலும் பார்க்க