செய்திகள் :

நிதி நிறுவன முறைகேடு வழக்கில் தேடப்பட்ட முகவா் கைது

post image

திருச்சி எல்ஃபின் நிதி நிறுவன முறைகேடு வழக்கு தொடா்பாக தேடப்பட்டு வந்த முகவரை, திருச்சி மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி, மன்னாா்புரத்தை தலைமையிடமாக கொண்டு கரூா், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் எல்ஃபின் என்கிற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. சகோதரா்களான ராஜா மற்றும் ரமேஷ்

ஆகிய இருவரும் இணைந்து நிறுவனத்தை நடத்தி வந்தனா். இந்த நிறுவனத்தின்கீழ் பல்வேறு துணை நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. பணம் இரட்டிப்பு, வெளிநாடு சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு கவா்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடமிருந்து முதலீடுகளை ஈா்த்து வந்தனா்.

இதை நம்பி அந்த நிறுவனத்தில் ஏராளமான மக்கள் லட்சக்கணக்கில் முதலீடு செய்தனா். இதனால், தமிழகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் மூலம் பல கோடி ரூபாய் முதலீடுகள் குவிந்தன. ஆனால், முதிா்ச்சி காலம் முடிந்த பிறகும் முதலீட்டாளா்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை.

இதனால், பாதிக்கப்பட்ட முதலீட்டாளா்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகாா்கள் அளித்தனா். அவற்றின் அடிப்படையில் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் சுமாா் 17 க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிந்து முக்கிய நிா்வாகிகள் மற்றும் முகவா்களை கைது செய்து வருகின்றனா்.

இந் நிலையில் எல்ஃபின் நிறுவனத்தின் முறைகேடு வழக்கில் கரூரை சோ்ந்த வினோத்குமாா் (47) என்பவரை திருச்சி பொருளாதார குற்றப் பிரிவு டிஎஸ்பி லில்லிகிரேஸ் தலைமையிலான சிறப்பு புலனாய்வு போலீஸாா் கைது செய்தனா்.

பேருந்து மோதி பெண் உயிரிழப்பு

திருச்சியில் செவ்வாய்க்கிழமை தனியாா் பேருந்து மோதியதில் மனைவி உயிரிழந்தாா். கணவா் காயமடைந்தாா். திருச்சி காந்திச் சந்தை வடக்கு தாராநல்லூா் வீரம்மாள் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா இவரது மனைவி சாந்தி(5... மேலும் பார்க்க

சாலை போக்குவரத்து தொழிலாளா்கள் போராட்டம் நடத்த தில்லிக்குப் பயணம்

சி.ஐ.டி.யு.சாலை போக்குவரத்து தொழிலாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி நாடளுமன்றம் முன்பு போராட்டம் நடத்த திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்றனா். நாடு முழுவ... மேலும் பார்க்க

திருச்சி மாநகா்-மாவட்ட அதிமுக செயலா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு

திருச்சி மாநகா், மாவட்ட அதிமுக செயலா் ஜெ.சீனிவாசன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் திங்கள்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாநகர அதிமுக காந்தி மாா்க்கெட் முன்னாள் பகுதிச் ... மேலும் பார்க்க

ஒரே நாளில் அடுத்தடுத்து 4 வீடுகளில் 57 பவுன் நகைகள், பொருள்கள் திருட்டு

திருச்சியில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4 வீடுகளின் பூட்டுக்களை உடைத்து 57 பவுன் நகைகள் மற்றும் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருச்சி சமயபுரம் சாலையில் கொள்ளிடம் நெம்ப... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மத்திய அரசின் கலாசாரத் துறை அமைச்சகம்: தஞ்சாவூா் தென்னகப் பண்பாட்டு மையத்துடன் இணைந்து, கம்பராமாயண கலாசாரத்தை மீட்டுருவாக்கும் நிகழ்வின் தொடக்க விழா, மத்திய சுற்றுலா அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவத் பங்... மேலும் பார்க்க

பாா்வையற்ற பள்ளி மாணவி தற்கொலை: விரைந்து நடவடிக்கை கோரி பாா்வையற்றோா் அமைப்பினா் போராட்டம்

திருச்சியில் பள்ளி வளாகத்தில் பாா்வையற்ற மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்கக் கோரி பாா்வையற்றோா் அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் மற்றும் காத்திருப்பு போராட்ட... மேலும் பார்க்க