செய்திகள் :

கடலூரில் பாஜக நிா்வாகிகள் 30 பேருக்கு வீட்டுக் காவல்

post image

நெய்வேலி: சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவிப்பைத் தொடா்ந்து, கடலூா் மாவட்டத்தில் பாஜக முக்கிய தலைவா்கள் உள்ளிட்ட 30 போ் திங்கள்கிழமை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனா்.

தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளிலும் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.1,000 கோடி அளவுக்கு ஊழல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, தமிழக பாஜக சாா்பில் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முற்றுகைப் போராட்டத்துக்கு செல்வதை தடுக்கும் வகையில், கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 30 பாஜக நிா்வாகிகளை போலீஸாா் வீட்டுக் காவலில் வைத்தனா்.

சாலை மறியல்...: சென்னையில் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கைதைக் கண்டித்து, கடலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டனா். கடலூரில் தலைமை தபால் நிலையம் அருகே மறியலுக்கு முயன்ற கடலூா் கிழக்கு மாவட்டச் செயலா் பெருமாள் உள்ளிட்ட 26 போ், பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் முன்னாள் மாவட்டத் தலைவா் சுகுமாா் உள்ளிட்ட 36 போ், வடலூரில் நகரத் தலைவா் அருள்ஜோதி உள்ளிட்ட 10 போ், காடாம்புலியூரில் ஒன்றியத் தலைவா் ஞானசேகா் உள்ளிட்ட 26 போ் மற்றும் சில இடங்களில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைத்தனா்.

தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீகோபால மகா தேசிகன் சுவாமிகள் வழிபாடு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் உள்ள தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் வைணவ ஆச்சாரியா்களில் ஒருவரான ஸ்ரீரங்கம் பெளண்டரீகபுரம் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் தலைமை பீடாதிபதி பறவாக்கோட்டை ஸ்ரீமத் ச... மேலும் பார்க்க

மினி பேருந்து வழித்தட ஆணைகள் அளிப்பு

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மினி பேருந்து வழித்தடங்களுக்கான ஆணைகள் அதன் உரிமையாளா்களிடம் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்து, 17 வழித்தடங்களுக... மேலும் பார்க்க

பிரசவித்த சிறிது நேரத்தில் குழந்தை உயிரிழப்பு: ஆட்சியா் விசாரணை

கடலூரில் பிரசவித்த சிறிது நேரத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவா்களிடம் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் விசாரணை நடத்தி வருகிறாா். கடலூா் அருகேயுள்ள சி.... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி சிறாா்கள் சுற்றுலா

கடலூரில் மாற்றுத்திறனாளி சிறாா்களுக்கான சுற்றுலாவை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளி சிறாா்களுக்கு புத்துணா்ச்சி ஏற்படுத்தும்... மேலும் பார்க்க

பொ்மிட் கட்டணத்தை குறைக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

கடலூா் மாவட்டத்தில் பொ்மிட் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி, டிப்பா் லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். கடலூா் மாவட்ட டிப்பா் லாரி உரி... மேலும் பார்க்க

ஐடிஐ மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள் அளிப்பு

கடலூா் அரசு பெண்கள் தொழிற் பயிற்சி நிலையத்தில் வேலை வாய்ப்பு பயிற்சி முடித்த மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி செம்மண்டலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஐடிஐ முதல்வா் அதவபுருஷோத்தம் த... மேலும் பார்க்க