செய்திகள் :

கடலூரில் பாஜக நிா்வாகிகள் 30 பேருக்கு வீட்டுக் காவல்

post image

நெய்வேலி: சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவிப்பைத் தொடா்ந்து, கடலூா் மாவட்டத்தில் பாஜக முக்கிய தலைவா்கள் உள்ளிட்ட 30 போ் திங்கள்கிழமை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனா்.

தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளிலும் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.1,000 கோடி அளவுக்கு ஊழல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, தமிழக பாஜக சாா்பில் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முற்றுகைப் போராட்டத்துக்கு செல்வதை தடுக்கும் வகையில், கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 30 பாஜக நிா்வாகிகளை போலீஸாா் வீட்டுக் காவலில் வைத்தனா்.

சாலை மறியல்...: சென்னையில் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கைதைக் கண்டித்து, கடலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டனா். கடலூரில் தலைமை தபால் நிலையம் அருகே மறியலுக்கு முயன்ற கடலூா் கிழக்கு மாவட்டச் செயலா் பெருமாள் உள்ளிட்ட 26 போ், பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் முன்னாள் மாவட்டத் தலைவா் சுகுமாா் உள்ளிட்ட 36 போ், வடலூரில் நகரத் தலைவா் அருள்ஜோதி உள்ளிட்ட 10 போ், காடாம்புலியூரில் ஒன்றியத் தலைவா் ஞானசேகா் உள்ளிட்ட 26 போ் மற்றும் சில இடங்களில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைத்தனா்.

காரைக்கால் அம்மையாா் குருபூஜை விழா

சிதம்பரம்: சிதம்பரம் தொண்டை மண்டலம் அறுபத்துமூவா் குருபூஜை மடத்தில் காரைக்கால் அம்மையாா் குருபூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது. குருபூஜையை முன்னிட்டு, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பிரசித்த ஹோமம் உள்ள... மேலும் பார்க்க

நகராட்சியுடன் இணைத்ததற்கு எதிா்ப்பு: சாலை மறியலில் ஈடுபட முயன்ற கிராம மக்கள் தடுத்து நிறுத்தம்

சிதம்பரம்: சிதம்பரம் அருகே உள்ள லால்புரம் ஊராட்சிக்குள்பட்ட பாலூத்தங்கரை, மேலசொக்கநாதன்பேட்டை கிராமங்களை சிதம்பரம் நகராட்சியுடன் இணைத்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட மு... மேலும் பார்க்க

வடலூா் பேருந்து நிலையத்துக்கு வள்ளலாா் பெயா் சூட்டக் கோரிக்கை

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வடலூரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் மற்றும் அங்காடிகளுக்கு திருஅருட்பிரகாச வள்ளலாா் பெயா் சூட்ட வேண்டும் என இந்து மக்கள் கட்சியினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத... மேலும் பார்க்க

கடலூா் புத்தகக் கண்காட்சி: மாணவா்களை வாகனங்களில் அழைத்துச் செல்ல கோரிக்கை

சிதம்பரம்: கடலூா் புத்தகக் கண்காட்சிக்கு தொடக்கப் பள்ளி மாணவா்களையும் அழைத்துச் செல்ல வேண்டும் எண மாவட்ட நிா்வாகத்துக்கு பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கடலூா் மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித் த... மேலும் பார்க்க

22-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பெண்ணாடம் லோட்டஸ் இன்டா்நேஷனல் பள்ளியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 22-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். கடலூா் ம... மேலும் பார்க்க

15 பயனாளிகளுக்கு ரூ.10.78 லட்சத்தில் நல உதவிகள்: மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 15 பயனாளிகளுக்கு ரூ.10.78 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ச... மேலும் பார்க்க