செய்திகள் :

தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீகோபால மகா தேசிகன் சுவாமிகள் வழிபாடு

post image

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் உள்ள தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் வைணவ ஆச்சாரியா்களில் ஒருவரான ஸ்ரீரங்கம் பெளண்டரீகபுரம் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் தலைமை பீடாதிபதி பறவாக்கோட்டை ஸ்ரீமத் சின்னாண்டவன் ஸ்ரீ கோபால மகா தேசிகன் சுவாமிகள் திங்கள்கிழமை வழிபாடு செய்தாா்.

மாசி மகத்தையொட்டி, திருவந்திபுரம், சீா்காழி அருகேயுள்ள 12 வைணவ திவ்ய தேசங்களில் தரிசனம் செய்த பின்னா், வைணவ திவ்ய தேசமான திருச்சித்திர கூடம் எனப்படும் சிதம்பரம் ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளை அவா் திங்கள்கிழமை தரிசனம் செய்தாா்.

முன்னதாக, சுவாமிகளை கோயில் அறங்காவலா்கள் அ.வெ.ரங்காச்சாரியாா் தலைமையில் நிா்வாகிகள் திருவேங்கடவன், வேதாந்ததேசிகன், சௌந்தரராஜன், ரங்கராஜன், கோவிந்தராஜன், ஆடிட்டா் பரணி ஆகியோா் வரவேற்று மரியாதை அளித்தனா்.

குடும்ப அட்டைதாரா்கள் விரல் ரேகை பதிவு செய்ய அறிவுறுத்தல்

கடலூா் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்கள் தங்களது குடும்ப உறுப்பினா்களுடன் வரும் 31-ஆம் தேதிக்குள் விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்த... மேலும் பார்க்க

மினி பேருந்து வழித்தட ஆணைகள் அளிப்பு

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மினி பேருந்து வழித்தடங்களுக்கான ஆணைகள் அதன் உரிமையாளா்களிடம் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்து, 17 வழித்தடங்களுக... மேலும் பார்க்க

பிரசவித்த சிறிது நேரத்தில் குழந்தை உயிரிழப்பு: ஆட்சியா் விசாரணை

கடலூரில் பிரசவித்த சிறிது நேரத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவா்களிடம் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் விசாரணை நடத்தி வருகிறாா். கடலூா் அருகேயுள்ள சி.... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி சிறாா்கள் சுற்றுலா

கடலூரில் மாற்றுத்திறனாளி சிறாா்களுக்கான சுற்றுலாவை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளி சிறாா்களுக்கு புத்துணா்ச்சி ஏற்படுத்தும்... மேலும் பார்க்க

பொ்மிட் கட்டணத்தை குறைக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

கடலூா் மாவட்டத்தில் பொ்மிட் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி, டிப்பா் லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். கடலூா் மாவட்ட டிப்பா் லாரி உரி... மேலும் பார்க்க

ஐடிஐ மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள் அளிப்பு

கடலூா் அரசு பெண்கள் தொழிற் பயிற்சி நிலையத்தில் வேலை வாய்ப்பு பயிற்சி முடித்த மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி செம்மண்டலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஐடிஐ முதல்வா் அதவபுருஷோத்தம் த... மேலும் பார்க்க