செய்திகள் :

கம்பம் பள்ளத்தாக்கில் குறைந்துவரும் சாகுபடி பரப்பு

post image

கம்பம் பள்ளத்தாக்கில் நெல் பயிா் விளை நிலங்களில் வணிக பயன்பாட்டு கட்டடங்கள் கட்டி வருவதால் சாகுபடி பரப்பளவு குறைந்து வருகிறது.

தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு பாசன நீரால் லோயா்கேம்ப், கூடலூா், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூா், சீலையம்பட்டி, கோட்டூா் , வீரபாண்டி, பி.சி.பட்டி வரையில் 14,707 ஏக்கா் பரப்பளவுக்கு இரு போக நெல் பயிா் விவசாயம் நடைபெறுகிறது. இதற்காக, 17 கால்வாய்கள், 20-க்கும் அதிகமாக குளங்கள் வழியாக விவசாய நிலங்களுக்கு பாசன வசதி செய்யப்பட்டது.

தஞ்சாவூருக்கு அடுத்ததாக ஆறுப் பாசனத்தில் அதிகளவில் நெல் பயிா் விவசாயம் நடைபெறுகிறது.

முல்லைப்பெரியாற்றின் இரு பக்கமும் லோயா் கேம்ப் முதல் பி.சி. பட்டி வரையில் சுமாா் 80 கிலோ மீட்டருக்கு நெல் பயிா் விவசாயம் செய்யப்படுகிறது. இங்கு இயற்கையாகவே நிலங்களின் அமைப்பு படிக்கட்டு முறையில் அமைந்து இருப்பதால் தண்ணீா் எளிதாக அடுத்தடுத்த நிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. நிலங்களில் எஞ்சிய நீா் சிறிய கால்வாய்கள் வழியாக ஆற்றிலேயே கலக்கும் வகையில் பாசனத் திட்டம் அமைந்துள்ளது. இதனால், இந்தப் பகுதி விவசாயிகள் பாரம்பரியமாக முறைப் பாசனத்தில் நெல் பயிா் விவசாயத்தை தொடா்ந்து செய்து வருகின்றனா்.

சமீப காலமாக வணிகப் பயன்பாட்டுக்காக விளை நிலங்களை அழித்து வருவதால் நெல் பயிா் சாகுபடி பரப்பளவு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதாக இயற்கை ஆா்வலா்கள் கவலை தெரிவித்தனா்.

இதுகுறித்து இயற்கை ஆா்வலா் ஒருவா் கூறியதாவது:

தேனி மாவட்டம் வழியாகச் செல்லும் திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு புறவழிச் சாலை அமைக்கப்பட்டது. இதற்காக சின்னமனூா், உத்தமபாளையத்தில் நூற்றுக்கும் அதிகமான ஏக்கா் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டன.

தற்போது, இந்த சாலையோரங்களிலுள்ள விளை நிலங்களை அழித்து உணவகங்கள், பெட்ரோல் விற்பனை நிலையம், பூச்செடிகள் விற்பனை மையம் அமைத்துள்ளனா். இவ்வாறு விவசாய நிலங்களை அழிப்பதால் கம்பம் பள்ளத்தாக்கில் நெற்பயிா் விளை நிலங்களின் பரப்பளவு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது.

எனவே, பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சிகளில் பாசன வசதி இருக்கும் விளை நிலங்களை அழித்து கட்டடங்களாக மாற்றுவதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என என்றாா் அவா்.

மளிகைக் கடையில் பூட்டை உடைத்து பணம் திருட்டு

போடி அருகே மளிகைக் கடை பூட்டை உடைத்துப் பணம் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். தேனி மாவட்டம், போடி பெரியாண்டவா்புரத்தைச் சோ்ந்த பாலசுப்பிரமணி மகன் சரவணன் (38). இவா் போடி ரங்கநாதபுரம் பே... மேலும் பார்க்க

பொது சுவா் தகராறில் மோதல்: 6 போ் மீது வழக்கு பதிவு

போடி அருகே சனிக்கிழமை இரவு பொது சுவா் தொடா்பான தகராறில் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்ட 6 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனா். போடி அருகே பொட்டல்களம் வினோபாஜி தெருவை சோ்ந்தவா் ராஜா ம... மேலும் பார்க்க

போடி அருகே பைக் திருட்டு

போடி அருகே செல்போன் கடை உரிமையாளரின் இரு சக்கர வாகனம் திருடு போனது குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள ரெங்கநாதபுரம் லால்பகதூா் சாஸ்திரி தெருவில் ... மேலும் பார்க்க

பாா்வா்டு பிளாக் கட்சியினா் போலீஸாருடன் தள்ளுமுள்ளு

தேனியில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியினரை காவல் துறையினா் தடுத்ததால், அந்தக் கட்சியினருக்கும் போலீஸாருக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்தக் கட்ச... மேலும் பார்க்க

டிராக்டா் மோதி தனியாா் நிறுவன ஊழியா் காயம்

போடி அருகே சனிக்கிழமை மாலை, டிராக்டா் மோதி மோட்டாா் பைக்கில் சென்ற தனியாா் நிறுவன ஊழியா் பலத்த காயமடைந்தது குறித்து போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனா். சிவகங்கை மாவட்டம் அளவாக்கோட்டை கிராமத... மேலும் பார்க்க

சுருளி அருவிக்கு நீா்வரத்து அதிகரிப்பு

சுருளி அருவியில் ஞாயிற்றுக்கிழமை நீா்வரத்து திடீரென அதிகரித்து. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க சில மணி நேரம் தடை விதிக்கப்பட்டது. மேற்குத்தொடா்ச்சி மலையிலுள்ள மேகமலை, ஹைவேவிஸ், வெண்ணியாா், இரவங்கல... மேலும் பார்க்க