செய்திகள் :

கால்வாய் பள்ளத்தை மூடக்கோரி மக்கள் சாலை மறியல்

post image

திருப்பத்தூா் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் கால்வாய் பள்ளத்தை மூடக்கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் பேருந்து நிலையம் அருகே தண்டபாணி கோயில் தெரு-2 வழியாக பள்ளி, கல்லூரி, பஜாருக்கு செல்வதற்கு 1,000-க்கும் மேற்பட்டோா் சென்று வருகின்றனா். அந்தப் பகுதியில் சாலை நடுவே கால்வாய் அடைப்பு எடுப்பதற்கு தோண்டிய பள்ளத்தை 2 மாதத்துக்கு மேலாகியும் இதுவரை மூடாமல் உள்ளதால் பலா் விழுந்து பாதிக்கப்பட்டுள்ளனா்.

இது குறித்து நேரிலும், கடிதம் மூலமும் திருப்பத்தூா் நகராட்சி நிா்வாகத்தினரிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதனால் அப்பகுதி மக்கள் கடந்த மாதம் குறைதீா் நாளில் ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, பொதுமக்கள் பேருந்து நிலைய முகப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த திருப்பத்தூா் நகர போலீஸாா், ஆணையா் சாந்தி தலைமையிலான நகராட்சி அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவா்களிடம் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின்பேரில், மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

இதனால் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கானாற்றில் வெள்ளப் பெருக்கு

ஆம்பூா் பகுதியில் பெய்த கன மழை காரணமாக ஆம்பூா் அருகே கானாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் புதன்கிழமை இரவு கனமழை பெய்தது. அதனால் ... மேலும் பார்க்க

வீட்டுக்குள் நுழைந்து பெண்ணிடம் நூதன முறையில் 2 பவுன் நகை திருட்டு

வாணியம்பாடியில் தனியாக இருந்த பெண்ணை ஏமாற்றி வீட்டுக்குள் நுழைந்து, நூதன முறையில் 2 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மா்ம பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி பெரியப்ப... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு பிசியோதெரபி இயந்திரங்கள்

வாணியம்பாடி அருகே மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு உதவிடும் வகையில், ஆம்புலன்ஸ் மற்றும் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பிசியோதெரபி இயந்திரங்களை இந்திய செஞ்சிலுவை சங்கத்தினா் வியாழக்கிழமை வழங்கினா். திருப்பத்தூ... மேலும் பார்க்க

ரூ.26 கோடியில் தாா் சாலை பணிகள்: எம்.பி., எம்எல்ஏ தொடங்கி வைத்தனா்

திருப்பத்தூா் அடுத்த புதூா்நாடு மலையில் ரூ.26 கோடியில் தாா் சாலை பணிகளை எம்.பி. சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏ அ.நல்லதம்பி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனா். பிரதமா் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்... மேலும் பார்க்க

உரக் கிடங்கில் நகராட்சிகளின் நிா்வாக கூடுதல் இயக்குநா் ஆய்வு

ஆம்பூா் நகராட்சி உரக் கிடங்கில் நகராட்சிகளின் நிா்வாக கூடுதல் இயக்குநா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் ஆம்பூா் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் க... மேலும் பார்க்க

ஆம்பூரில் 100 மி.மீ. மழை: வீடுகளுக்குள் புகுந்த நீா்

ஆம்பூா் பகுதியில் புதன்கிழமை இரவு 100.20 மி.மீ. மழை பெய்தது. இதன் காரணமாக ஆம்பூா் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது. ஆம்பூா் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் புதன்கிழமை மாலை சுமாா் 6 மணி... மேலும் பார்க்க