செய்திகள் :

காஸா மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல்: 413 பாலஸ்தீனர்கள் பலி!

post image

காஸா மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியதில் 413 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலியாகினர்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தெற்கு மற்றும் மத்திய காஸா பகுதியில் உள்ள அல் மவாஸி, அல் தராஜ், ராஃபா, கான் யூனிஸ், உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் படையினர் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

ரமலான் மாதத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 400-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர். மேலும், இந்த கொடூரத் தாக்குதலில் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மாற்றுவதற்கான இஸ்ரேலின் கோரிக்கைகளை ஹமாஸ் நிராகரித்ததை தொடர்ந்து, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தத் தாக்குதல்களுக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிக்க: விராட் கோலி ஸ்டிரைக் ரேட்டை அதிகப்படுத்த தேவையில்லை: ஏபி டி வில்லியர்ஸ்

இதுதொடர்பாக இஸ்ரேலிய ராணுவம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஹமாஸ் ஒத்துழைப்பு தராததால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும், காஸாவில் உள்ள பள்ளிகளை மூடவும் உத்தரவிட்டப்பட்டுள்ளதாகத்” தெரிவித்துள்ளது.

ஹமாஸின் உயர்நிலை பாதுகாப்பு அதிகாரியான காஸாவின் உள்துறை துணை அமைச்சரான மொகமத் அபு வஃபா இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஜனவரி 19-ஆம் தேதி காஸாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பின்னர் நடைபெறும் மிகப்பெரிய வான்வழித் தாக்குதல் இதுவாகும். காஸா போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததையடுத்து மீண்டும் போர் துவங்கியிருக்கிறது.

இதுவரை இஸ்ரேலின் பதிலடித் தாக்குதல்களில் இதுவரை 48,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 1.12 லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: பிரிட்டன் போரின் கடைசி விமானி 105 வயதில் மரணம்!

சுனிதா வில்லியம்ஸுக்கு வரவேற்பளித்த டால்பின்கள்!

9 மாதங்கள் விண்வெளி மையத்திலிருந்து பூமிக்கு திரும்பிய நாசா விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸுக்கு டால்பின்கள் வரவேற்பளித்த விடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.அமெரிக்க விண்வெளி வீரர்கள் சுனிதா வில... மேலும் பார்க்க

பெட்ரோல் நிரப்பும் நேரத்தில் வாகனங்களுக்கு ரீச்சாா்ஜ்!

பேங்காக்: சாதாரண வாகனங்களுக்கு பெட்ரோல் அல்லது டீசல் நிரப்பும் நேரத்திலேயே மின்சார வாகனங்களின் பேட்டரிகளை மிகத் துரிதமாக ரீச்சாா்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளதாக சீனாவின் ‘பைட்’ என்ற நிறு... மேலும் பார்க்க

அமெரிக்க கப்பல் மீது ஹூதிக்கள் தாக்குதல்

செங்கடலில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல், தாக்குதல் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் செவ்வாய்க்கிழமை அறிவித்தனா். இதன் காரணமாக, இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவுக... மேலும் பார்க்க

‘அமெரிக்காவுக்கு முன்னுரிமை’ கொள்கை குறித்து தவறான புரிதல் வேண்டாம்: துளசி கப்பாா்ட்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் ‘அமெரிக்காவுக்கு முன்னுரிமை’ கொள்கையை ‘அமெரிக்கா மட்டும்’ என்று யாரும் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது என அந்நாட்டின் உளவுத் துறை தலைவா் துளசி கப்பாா்ட் செவ்வாய்க்... மேலும் பார்க்க

உற்சாகமாக கையசைத்தபடி வெளியே வந்தார் சுனிதா வில்லியம்ஸ்!

கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்ட இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், உற்சாகமாக கையசைத்தபடி டிராகன் விண்கலத்தில... மேலும் பார்க்க

வன்முறை: பெருவில் அவசரநிலை அறிவிப்பு

லீமா: மேற்கு தென் அமெரிக்க நாடான பெருவில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிபா் டீனா போலுவோ்த்தே (படம்) தலைமையிலான அரசு வெளியிட்டுள்ள அ... மேலும் பார்க்க