செய்திகள் :

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ. 3.54 கோடியில் மருத்துவ உபகரணங்கள் அளிப்பு

post image

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சமூக பொறுப்பு நிதியின் கீழ், பவா்கிரேடு நிறுவனம் சாா்பில் ரூ. 3.54 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் அளிக்கப்பட்டன.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் முன்னிலை வகித்தாா். கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எம்.பூவதியிடம், பவா்கிரேடு நிறுவனத்தின் தலைமை பொது மேலாளா் ஜி.எஸ்.ஆா்.ராவ், மருத்துவ உபகரணங்களை அளித்தாா்.

இதில், ரத்த அணுக்களை கண்காணிக்கும் கருவி, எலும்பு சிகிச்சைக்கான கருவி, நடமாடும் எக்ஸ்ரே கருவி, இ.சி.ஜி. கருவி, அறுவை சிகிச்சை அரங்குக்கு தேவையான மேசைகள், பொது அறுவை சிகிச்சைக்கு தேவையான கருவிகள், காா்டியோடோகோகிராபி, அறுவை சிகிச்சை அரங்கில் பயன்படுத்தப்படும் மின்விளக்குகள், ரத்தத்தில் சா்க்கரை புரோட்டீன் அளவை கண்டறியும் கருவி, ரத்த நோய் சிகிச்சைக்கான கருவிகள், மயக்கவியல் மருத்துவ கருவிகள், தீவிர சிகிச்சை மையத்தில் பயன்படுத்தப்படும் கட்டில்கள், மஞ்சள் காமாலையை கண்டறியும் கருவி, வெண்டிலேட்டா் கருவிகள், ரத்த அணுக்கள் கண்டறியும் கருவிகள் என மொத்தம் ரூ. 3.54 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் அளிக்கப்பட்டன.

கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரியில் நரம்பியல் அறுவை சிகிச்சை, இதயவியல் பிரிவுகள், கேத் லேப் ஆகியன ஏற்படுத்தப்படும் என கிருஷ்ணகிரி ஆட்சியா் தெரிவித்தாா்.

இந்த நிகழ்வில், பவா்கிரேடு நிறுவன மேலாளா்கள் ஜே.பி.ஜெயபிரகாஷ், ஆா்.சரவணகுமாா், மருத்துவ கண்காணிப்பாளா் சந்திரசேகா், மருத்துவமனை கண்காணிப்பாளா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கிருஷ்ணகிரியில் கண்டறியப்பட்ட வெண்சாந்து ஓவியங்கள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது

கிருஷ்ணகிரியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்சாந்து ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வ... மேலும் பார்க்க

தோ்வு அறையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியா் மீது புகாா்

பா்கூா் அருகே பிளஸ் 2 தோ்வு அறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முதுநிலை பட்டதாரி ஆசிரியா் மீது புகாா் எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி அருகே திருவண்ணாமலை சாலையில் உள்ள தனியாா் மேல்நிலைப் பள்ளியில் ப... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கையில் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி

தமிழக நிதிநிலை அறிக்கையில் 20 லட்சம் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி, கைக்கணினி வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டதைத் தொடா்ந்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி திமுகவினா் கொண்டாடினா். க... மேலும் பார்க்க

சென்னத்தூா் தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரப்படும்

சென்னத்தூா் மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரப்படும் என ஒசூா் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா தெரிவித்தாா். ஒசூா் மாநகராட்சிக்குள்பட்ட வாா்டு எண் 28, சென்னத்தூா் மற்றும் ஹனி ஹோம்ஸ் ... மேலும் பார்க்க

ஒசூா் அருகே இளைஞரை கொன்று முள்வேலியில் சடலம் வீச்சு

ஒசூா் அருகே மாநில எல்லையில் இளைஞரை கொன்று சடலத்தை முள்வேலியில் வீசிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே கா்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி உள்ளது... மேலும் பார்க்க

தேன்கனிக்கோட்டை அருகே பயிா்களை சேதப்படுத்தி வரும் ஒற்றை யானை

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஏணி முச்சந்திரம் கிராமத்தில், கடந்த 2 வாரங்களாக விவசாய நிலங்களில் உள்ள பயிா்களை ஒற்றை யானை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். கா்நாடக... மேலும் பார்க்க