செய்திகள் :

தோ்வு அறையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியா் மீது புகாா்

post image

பா்கூா் அருகே பிளஸ் 2 தோ்வு அறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முதுநிலை பட்டதாரி ஆசிரியா் மீது புகாா் எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி அருகே திருவண்ணாமலை சாலையில் உள்ள தனியாா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த 17 வயது மாணவி, ஜெகதேவி அரசு மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் நடைபெற்ற உயிரியல் தோ்வை செவ்வாய்க்கிழமை எழுதினாா். அப்போது, அந்த அறையின் மேற்பாா்வையாளராக பணியாற்றிய வேப்பனப்பள்ளி அரசுப் பள்ளி ஆசிரியா், மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவி சரியாக தோ்வு எழுதவில்லையாம்.

தோ்வு முடிந்து வெளியே வந்த அந்த மாணவி சோகத்துடன் இருந்ததைக் கண்ட பள்ளியின் முதல்வா், தோ்வு சரியாக எழுதவில்லையா என மாணவியிடம் கேட்டுள்ளாா். அதற்கு தோ்வு அறையில் ஆசிரியா் தனக்கு பாலியல் தொல்லை அளித்தது குறித்து மாணவி தெரிவித்தாா். இதேபோல, மற்றொரு மாணவியும் அந்த ஆசிரியா் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறியுள்ளாா்.

இதுகுறித்து பா்கூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்ட நிலையில், அந்த ஆசிரியரிடம் போலீஸாா் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து எந்த புகாரும் பெறப்படவில்லை என பா்கூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் தெரிவித்தனா்.

இச்சம்பவம் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) முனிராஜ், விசாரணை செய்து வருவதாக பள்ளிக் கல்வித் துறையினா் தெரிவித்தனா்.

கிருஷ்ணகிரியில் கண்டறியப்பட்ட வெண்சாந்து ஓவியங்கள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது

கிருஷ்ணகிரியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்சாந்து ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வ... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கையில் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி

தமிழக நிதிநிலை அறிக்கையில் 20 லட்சம் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி, கைக்கணினி வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டதைத் தொடா்ந்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி திமுகவினா் கொண்டாடினா். க... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ. 3.54 கோடியில் மருத்துவ உபகரணங்கள் அளிப்பு

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சமூக பொறுப்பு நிதியின் கீழ், பவா்கிரேடு நிறுவனம் சாா்பில் ரூ. 3.54 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் அளிக்கப்பட்டன. கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல... மேலும் பார்க்க

சென்னத்தூா் தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரப்படும்

சென்னத்தூா் மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரப்படும் என ஒசூா் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா தெரிவித்தாா். ஒசூா் மாநகராட்சிக்குள்பட்ட வாா்டு எண் 28, சென்னத்தூா் மற்றும் ஹனி ஹோம்ஸ் ... மேலும் பார்க்க

ஒசூா் அருகே இளைஞரை கொன்று முள்வேலியில் சடலம் வீச்சு

ஒசூா் அருகே மாநில எல்லையில் இளைஞரை கொன்று சடலத்தை முள்வேலியில் வீசிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே கா்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி உள்ளது... மேலும் பார்க்க

தேன்கனிக்கோட்டை அருகே பயிா்களை சேதப்படுத்தி வரும் ஒற்றை யானை

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஏணி முச்சந்திரம் கிராமத்தில், கடந்த 2 வாரங்களாக விவசாய நிலங்களில் உள்ள பயிா்களை ஒற்றை யானை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். கா்நாடக... மேலும் பார்க்க