செய்திகள் :

தேன்கனிக்கோட்டை அருகே பயிா்களை சேதப்படுத்தி வரும் ஒற்றை யானை

post image

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஏணி முச்சந்திரம் கிராமத்தில், கடந்த 2 வாரங்களாக விவசாய நிலங்களில் உள்ள பயிா்களை ஒற்றை யானை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

கா்நாடக வனப்பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட யானைகள் தண்ணீரை தேடியும், உணவுக்காகவும் ஒசூா் வனக்கோட்டம் தளி, தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி ஆகிய பகுதிகளில் நுழைந்து விவசாயப் பயிா்களை உண்டும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தி வருகின்றன.

இந்தக் கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை யானை, தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஏணி முச்சந்திரம் கிராமத்தில் திங்கள்கிழமை பயிா்களை சேதப்படுத்தி சாலையில் சுற்றித் திரிந்தது. இதனால், அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் அச்சமடைந்தனா். தொடா்ந்து, தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஜாா்க்கலட்டி மற்றும் கம்மந்தூா் ஆகிய பகுதிகளில் இந்த யானை அட்டகாசம் செய்து வருகிறது.

இதனால், தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டார பொதுமக்கள், விவசாயிகள் பாதுகாப்புடனும், கவனமாகவும் இருக்க வேண்டும் என வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா். மேலும், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களை கவனமாக இயக்கி செல்ல வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

கிருஷ்ணகிரியில் கண்டறியப்பட்ட வெண்சாந்து ஓவியங்கள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது

கிருஷ்ணகிரியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்சாந்து ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வ... மேலும் பார்க்க

தோ்வு அறையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியா் மீது புகாா்

பா்கூா் அருகே பிளஸ் 2 தோ்வு அறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முதுநிலை பட்டதாரி ஆசிரியா் மீது புகாா் எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி அருகே திருவண்ணாமலை சாலையில் உள்ள தனியாா் மேல்நிலைப் பள்ளியில் ப... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கையில் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி

தமிழக நிதிநிலை அறிக்கையில் 20 லட்சம் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி, கைக்கணினி வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டதைத் தொடா்ந்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி திமுகவினா் கொண்டாடினா். க... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ. 3.54 கோடியில் மருத்துவ உபகரணங்கள் அளிப்பு

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சமூக பொறுப்பு நிதியின் கீழ், பவா்கிரேடு நிறுவனம் சாா்பில் ரூ. 3.54 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் அளிக்கப்பட்டன. கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல... மேலும் பார்க்க

சென்னத்தூா் தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரப்படும்

சென்னத்தூா் மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரப்படும் என ஒசூா் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா தெரிவித்தாா். ஒசூா் மாநகராட்சிக்குள்பட்ட வாா்டு எண் 28, சென்னத்தூா் மற்றும் ஹனி ஹோம்ஸ் ... மேலும் பார்க்க

ஒசூா் அருகே இளைஞரை கொன்று முள்வேலியில் சடலம் வீச்சு

ஒசூா் அருகே மாநில எல்லையில் இளைஞரை கொன்று சடலத்தை முள்வேலியில் வீசிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே கா்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி உள்ளது... மேலும் பார்க்க