செய்திகள் :

குணால் காம்ராவுக்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமீன்

post image

மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சனம் செய்த வழக்கில் குணால் காம்ராவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

இந்த விவகாரத்தில் குணால் காம்ரா மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், விழுப்புரத்தில் வசித்து வரும் தம்மை மும்பை சென்றால் போலீஸார் கைது செய்வர் எனக் குறிப்பிட்டிருந்தார். இம்மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் குணால் காம்ராவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.

மும்பையில் உள்ள தனியாா் ஹோட்டலின் ஸ்டுடியோவில் குணால் காம்ராவின் நகைச்சுவை நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அந்த மாநிலத்தின் அரசியல் சூழலை கேலி செய்து குணால் காம்ரா பேசினாா். அப்போது மாநில துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டேயை ‘துரோகி’ என்று குறிப்பிட்டு குணால் கேலி செய்தாா்.

நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது.. இதைச் செய்யாவிடில் பணம் வேஸ்ட்!

சமூக ஊடகத்தில் அந்த நிகழ்ச்சியின் காணொலியைக் கண்டு ஆத்திரமடைந்த ஷிண்டேயின் சிவசேனை தொண்டா்கள், அந்த ஸ்டுடியோவையும் ஹோட்டலையும் சூறையாடினா். இந்த சம்பவம் தொடா்பாக சிவசேனை எம்எல்ஏ முா்ஜி படேல் அளித்த புகாரின் அடிப்படையில், துணை முதல்வரை இழிவுபடுத்தியதாக குணால் காம்ரா மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.

சிவகங்கை மாவட்டத்தில் ரமலான் சிறப்புத் தொழுகை

ஈகைப் பெருநாளான ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளி வாசல்களில் இஸ்லாமியா்கள் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகை நடத்தி ரமலான் நோன்பு கடமையை நிறைவேற்றினா்.சிவகங்கை நேரு பஜார் வாலாஜா... மேலும் பார்க்க

47 ஆண்டுகளுக்குப் பின் திருச்சி - யாழ்ப்பாணம் இடையே இன்றுமுதல் விமான சேவை!

திருச்சிராப்பள்ளி: தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி (திருச்சி) மற்றும் இலங்கையின் யாழ்ப்பாணம் இடையே 47 ஆண்டுகளுக்குப் பின்னர் நேரடி விமான சேவை இன்றுமுதல்(மார்ச் 31) தொடங்குகிறது.இலங்கையில் உள்நாட்டு போ... மேலும் பார்க்க

தமிழ்நாடு பெருமையுடன் கர்ஜித்தது: முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு!

ஒரு மாபெரும் கால்பந்து போட்டி சென்னையில் நடைபெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் நேரு உள்விளையாட்டரங்கில் பிரேசில் லெஜெண்ட்ஸ் அணிக்கும் இந்தியா ஆல் ஸ்டா... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ரமலான் சிறப்புத் தொழுகை

தூத்துக்குடி ஈத்கா மைதானத்தில் ரமலான் சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர் திங்கள்கிழமை பங்கேற்றனர்.ஈகைத் திருநாளாம் ரமலான் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே உள்ள ஈத்கா மைதானத்... மேலும் பார்க்க

உதகையில் ஜூன் 5 வரை படப்பிடிப்பு நடத்த தடை!

உதகையில் நாளை(ஏப்.01) முதல் ஜூன் 5 வரை படப்பிடிப்பு நடத்த தோட்டக்கலைத் துறை தடை விதித்துள்ளது. கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறைக... மேலும் பார்க்க

ரூ. 85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி ராமதாஸ்

சீன கார் நிறுவனத்தின் ரூ. 85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். சீன மின்சார கார் நிறுவனமான பி.ஒய்.டி. இந்தியாவில் முதல்முறையாக தெலங்கான... மேலும் பார்க்க