செய்திகள் :

திருச்சியில் பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்கள் வழங்கல்

post image

திருச்சியில் புத்தகம் படிக்கும் பழக்கம் மற்றும் சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்துவதற்காக 40 பள்ளி மாணவ மற்றும் மாணவியர்களுக்கு உண்டியல்கள் வழங்கப்பட்டன.

திருச்சி மாவட்டம், சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனி மற்றும் காவேரி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் ஞாயிறு மாலை சுந்தர்ராஜ் நகர் மாநகராட்சி பூங்காவில் நடத்திய செய்தித்தாள் வாசிப்பு இயக்கம் கூட்டத்தில் உண்டியல்கள் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டன. நகர் நல சங்கத் தலைவர் கி. ஜெயபாலன் மற்றும் ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி விக்டர் பொன்னுதுரை மாணவர்களுக்கு உண்டியல்களை வழங்கினார்கள். மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கும் சிறுதொகையினை உண்டியலில் சேமிக்க வேண்டும்.

சேமித்த பணத்தை கொண்டு முக்கிய நாள்களில் நடத்தப்படும் புத்தகக் கண்காட்சிகளில் புத்தகங்கள் வாங்க வேண்டும். பங்கேற்ற மாணவர்கள் உண்டியலில் பணத்தை சேமித்து புத்தகங்கள் வாங்குவதாக உறுதி அளித்தனர். தலைமை ஏற்று பேசிய ஜெயபாலன், மாணவர்கள் பள்ளி பருவத்திலேயே புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். படிக்கும் பழக்கம் நிச்சயமாக இளைஞர்களின் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கும் என்று கூறினார்.

இலுப்பூர் அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்: கல்லூரி மாணவர் பலி

தமிழ் புத்தாண்டு தினத்தன்று புத்தகக் கண்காட்சி நடத்தப்படும் என்றும் அன்று மாணவர்கள் உண்டியலில் சேமித்த பணத்தை கொண்டு புத்தகங்கள் வாங்க முன்வர வேண்டும் என்று நக நல சங்கம் செயல் து. செந்தில் குமார் கூறினார். தமிழ்செல்வி இளங்கோ, மூத்த சமூக ஆர்வலர் 'சுத்தம் - சுகாதாரம்' உறுதி மொழியை மாணவர்களை ஏற்க வைத்தார். இறுதியாக யோகா துணை பேராசிரியர் சுமதி தர்மன் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அறிமுக யோகா பயிற்சி அளித்தார்.

மறைந்த சங்கத்தின் மூத்த உறுப்பினர் S. R. சத்தியவாகீஸ்வனின் மறைவிற்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

காவிரி -வைகை-குண்டாறு இணைப்பு உறுதி: நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் அறிவிப்பு

காவிரி -வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தை உறுதியாகச் செயல்படுத்துவோம் என்று சட்டப் பேரவையில் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிற... மேலும் பார்க்க

கட்சிப் பாகுபாடின்றி ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டம்: மு.க.ஸ்டாலின் விளக்கம்

‘உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டம்’ கட்சிப் பாகுபாடின்றி நிறைவேற்றப்படுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மானியக் கோரிக்கை மீது சட்டப்பேரவையில் செவ்வாய்க்... மேலும் பார்க்க

மொழிக் கொள்கை செயல்பாடு: ஸ்டாலினுக்கு டி.ராஜா பாராட்டு

மொழிக் கொள்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மாதிரியாகச் செயல்படுகிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலர் டி.ராஜா பாராட்டு தெரிவித்தார்.மதுரையில் நடைபெறவுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ... மேலும் பார்க்க

சமூக ஊடகங்களை ஆக்கிரமிக்கும் ஜிப்லி காா்ட்டூன்!

சமூக ஊடகங்களில் திரும்பிய பக்கமெல்லாம் ஜிப்லி காா்ட்டூன் படங்களே நிறைந்திருக்கின்றன. மக்கள் அனைவரும் தங்களின் புகைப்படங்களை ஜிப்லி காா்ட்டூன் பாணியிலான அனிமேஷன் (வரைகலை) படங்களாக மாற்றி, தங்கள் சமூக ஊ... மேலும் பார்க்க

‘நடந்தாய் வாழி காவிரி’ திட்ட அறிக்கை தயாரிப்பு தீவிரம்: அமைச்சா் துரைமுருகன்

‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டத்தைச் செயல்படுத்த திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின்போது இது... மேலும் பார்க்க

தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீடு முறை விரைவில் அமல்

தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யும் முறை 6 மாதங்களுக்குள் அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா். தமிழகத்தில் மொத்தம் 3.04 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன.... மேலும் பார்க்க