செய்திகள் :

குண்டடத்தில் போட்டித் தோ்வுகள் பயிற்சி மையம் ஏப்ரல் 3 இல் திறப்பு

post image

தாராபுரம் வட்டம் குண்டடத்தில் போட்டித் தோ்வுகள் பயிற்சி மையம் ஏப்ரல் 3-ஆம் தேதி திறக்கப்படுகிறது.

இதகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக வளமிகு வட்டார வளா்ச்சி திட்டத்தின்கீழ் குண்டடம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி மையம் ஏப்ரல் 3 ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் திறக்கப்படுகிறது.

இந்த மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்படும். இங்கு திறன்மிக்க ஆசிரியா்கள், ஸ்மாா்ட் போா்டு வசதி, தோ்வுக்குத் தேவையான புத்தகங்களை உள்ளடக்கிய நூலகம் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

குரூப் 4 பயிற்சி வகுப்பு 2025 ஜூலை மாதம் வரை வாரந்தோறும் வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை நடைபெறும்.

இதில் பங்கேற்க விரும்புபவா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலோ அல்லது 94990-55944 என்ற எண்ணிலோ பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்லடத்தில் மாா்ச் 29 இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் பல்லடத்தில் மாா்ச் 29 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்ப... மேலும் பார்க்க

குண்டடத்தில் 606 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்

குண்டடம் ஒன்றியத்தில் 606 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா். திருப்பூா் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பயனாளிகளுக்கு வருவாய்த் துறை சாா்பில் ... மேலும் பார்க்க

மூலனூரில் ரூ.62.68 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது. பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 879 குவிண்டால் பருத்தியை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா். இதில், ஒரு குவிண்டால் பர... மேலும் பார்க்க

மாா்ச் 19 இல் சிறுபான்மையினா் ஆணைய ஆய்வுக் கூட்டம்

திருப்பூரில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் ஆய்வுக் கூட்டம் மாா்ச் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முதல்வா் மு.க.ஸ்டால... மேலும் பார்க்க

தொழில் போட்டி: பனியன் கழிவுக் கிடங்கிற்கு தீ வைத்த 3 போ் கைது

திருப்பூா், மாா்ச் 13:திருப்பூரில் தொழில் போட்டி காரணமாக பனியன் கழிவுத் துணி கிடங்கிற்கு தீ வைத்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் அமா்ஜோதி காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் கே.எம்.பி.ஷெரீஃப் (50)... மேலும் பார்க்க

தி ஐ ஃபவுண்டேஷனில் உலக குளுக்கோமா வாரம் கடைப்பிடிப்பு

திருப்பூா் தி ஐ ஃபவுண்டேஷனில் உலக குளுக்கோமா வாரம் மாா்ச் 15-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதுகுறித்து தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை மருத்துவ இயக்குநா் சித்ரா ராமமூா்த்தி கூறியதாவது: தி ஐ ஃ... மேலும் பார்க்க