செய்திகள் :

குன்னூர்: சாலையில் வழிந்தோடும் காளான் கழிவுநீர்; நோய்த்தொற்று அபாயத்தில் கூலி தொழிலாளர்கள்

post image

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள அதிகரட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது கோலணி மட்டம் பகுதி.

நூற்றுக்கணக்கான விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வசிக்கும் இந்தப் பகுதியில் முறையான சாலை, நடைபாதை, பொதுக்கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

சாலையில் வழிந்தோடும் காளான் கழிவுநீர்
சாலையில் வழிந்தோடும் காளான் கழிவுநீர்

மேலும், இந்தப் பகுதிகளில் விளைவிக்கப்படும் மலை காய்கறிகளுக்கு அளவிற்கு அதிகமான ரசாயனங்களைப் பயன்படுத்தப்படுவதால், சுவாசப் பிரச்னைகள், சரும பாதிப்புகள், தைராய்டு சுரப்பி பிரச்னை உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், அறுவடை செய்து முடிக்கப்பட்ட காளான் கழிவுகளை பெருநில உரிமையாளர்கள் சிலர் இந்த மக்கள் வாழும் குடியிருப்புகள் அருகில் மாதக்கணக்கில் குவித்து வைப்பதால் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், காளான் கழிவுநீர் சாலையில் வழிந்தோடி நோய்த்தொற்று அபாயத்தில் ஒவ்வொரு நாளும் தவிப்பதாக மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து பேசிய உள்ளூர் மக்கள், "முறையற்ற வேளாண்மையால் தொடர்ந்து மண் அரிப்பு ஏற்பட்டு சாலைகள் பல அடிக்கு சேறும் சகதியுமாகக் காணப்படுகின்றன. பள்ளி குழந்தைகள், நோயாளிகள், வயதானோர் இந்தச் சாலையில் நடந்து கூட செல்ல முடியாத நிலையில் தடுமாறி வருகிறோம். போதாக்குறைக்கு காளான் கழிவுகளை டன் கணக்கில் கொண்டு வந்து குடியிருப்பு அருகில் குவித்து வைத்திருக்கின்றனர்.

சாலையில் வழிந்தோடும் காளான் கழிவுநீர்
சாலையில் வழிந்தோடும் காளான் கழிவுநீர்

தாங்க முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுவதால் வாந்தி, குமட்டல் ஏற்பட்டு வருகின்றன. கருமையான நிறத்தில் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவதால் நோய் பரவும் அபாயமும் இருக்கிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருவாய்த்துறையினரிடம் பலமுறை வலியுறுத்தியும் ஒரு பயனும் இல்லை. பெருநில உரிமையாளர்களுக்கு ஆதரவாகவும் மக்களுக்கு எதிராகவும் செயல்படுவதையே வேலையாகச் செய்து வருகின்றனர்" என்றனர்.

வருவாய்த்துறை அலுவலர் மஞ்சுவை தொடர்புகொண்டு பேசினோம், "இது குறித்து எங்களின் கவனத்திற்கு வரவில்லை. களத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கிறோம்" என்றார்.

சென்னை: தீபாவளி பட்டாசுகளால் புகை மூட்டம்; 400-ஐ தாண்டிய காற்று மாசுபாடு குறியீடு

தீபாவளி முடிந்துவிட்டது. நேற்று வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் நம்மைச் சுற்றிலும் ஏற்பட்ட புகை மூட்டத்தை நாமே நம் கண்களில் பார்த்திருப்போம்.சென்னையில் காற்று மாசுபாடு குறியீடு 400-ஐயும், கோவையில் காற்று ம... மேலும் பார்க்க

கோவை: பட்டாசுகளால் அதிகரித்த மாசு; 221 AQI-ஐ தொட்ட காற்றின் மாசின் அளவு | Photo Album

கோவையில் தீபாவளி கொண்டாட்டம்கோவையில் தீபாவளி கொண்டாட்டம்கோவையில் தீபாவளி கொண்டாட்டம்கோவையில் தீபாவளி கொண்டாட்டம்கோவையில் தீபாவளி கொண்டாட்டம்கோவையில் தீபாவளி கொண்டாட்டம்கோவையில் தீபாவளி கொண்டாட்டம்கோவை... மேலும் பார்க்க

விருதுநகர்: பிளவக்கல் பெரியாறு அணை நீர்மட்டம் 2 நாட்களில் 18 அடி உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில தினங்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்தவரையிலும் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் ம... மேலும் பார்க்க

Silent Diwali: பல ஆண்டுகளாக பட்டாசுகளே வெடிக்காத தமிழக கிராமங்கள் பற்றி தெரியுமா?

தீபாவளி பண்டிகை என்றால் பட்டாசுகள்தான் நினைவுக்கு வரும். ஆனால், தமிழ்நாட்டில் சில கிராமங்கள் பட்டாசுகளைத் தவிர்த்து, சத்தமின்றி தீபாவளியைக் கொண்டாடி வருகின்றன. இந்த 'அமைதியான தீபாவளி' மூலம் பறவைகள் மற... மேலும் பார்க்க

தேனியில் வரலாறு காணாத கனமழை; சாலைகளில் ஓடிய வெள்ளநீர் - முழு ரிப்போர்ட்

இடுக்கி, கம்பம் பகுதிகளில் நேற்று முன்தினம் மிக கனமழை பெய்ததால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக சுருளி ஆறு, கொட்டக்குடி ஆறு, மூல வைகை ஆறு, முல்லை பெரியாறில் வந்த வெள்ளநீர் ஆற்றின் கர... மேலும் பார்க்க

கனமழை எதிரொலி: தேனியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்; முல்லைப்பெரியாறு அணையில் உபரி நீர் திறப்பு!

கேரளா மாநிலம் இடுக்கி மற்றும் வருசநாட்டில் பலத்த மழை பெய்து வருவதால் தேனியில் உள்ள மூலவைகையாறு மற்றும் முல்லை பெரியாறில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.இதனால் தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள உத்தமபாளையம் ... மேலும் பார்க்க