செய்திகள் :

விருதுநகர்: பிளவக்கல் பெரியாறு அணை நீர்மட்டம் 2 நாட்களில் 18 அடி உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி!

post image

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில தினங்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்தவரையிலும் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிளவக்கல் அணை
பிளவக்கல் அணை

இதன் ஒரு பகுதியாக வத்திராயிருப்பு சுற்றுவட்டாரப் பகுதிகளான கூமாபட்டி, கான்சாபுரம், தம்பிபட்டி, மகாராஜபுரம், கோட்டையூர், அத்திகோயில் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தது.

இந்த நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக பிளவக்கல் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 47 அடி முழு கொள்ளளவு கொண்ட பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 18 அடியாக இருந்தது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிளவக்கல் அணை
பிளவக்கல்

18 அடியாக இருந்த பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போது 36 அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து அணைக்கு வினாடிக்கு 649 கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருக்கிறது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் இரண்டு நாட்களில் 18 அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை: தீபாவளி பட்டாசுகளால் புகை மூட்டம்; 400-ஐ தாண்டிய காற்று மாசுபாடு குறியீடு

தீபாவளி முடிந்துவிட்டது. நேற்று வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் நம்மைச் சுற்றிலும் ஏற்பட்ட புகை மூட்டத்தை நாமே நம் கண்களில் பார்த்திருப்போம்.சென்னையில் காற்று மாசுபாடு குறியீடு 400-ஐயும், கோவையில் காற்று ம... மேலும் பார்க்க

குன்னூர்: சாலையில் வழிந்தோடும் காளான் கழிவுநீர்; நோய்த்தொற்று அபாயத்தில் கூலி தொழிலாளர்கள்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள அதிகரட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது கோலணி மட்டம் பகுதி.நூற்றுக்கணக்கான விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வசிக்கும் இந்தப் பகுதியில் முறையான சாலை, ... மேலும் பார்க்க

கோவை: பட்டாசுகளால் அதிகரித்த மாசு; 221 AQI-ஐ தொட்ட காற்றின் மாசின் அளவு | Photo Album

கோவையில் தீபாவளி கொண்டாட்டம்கோவையில் தீபாவளி கொண்டாட்டம்கோவையில் தீபாவளி கொண்டாட்டம்கோவையில் தீபாவளி கொண்டாட்டம்கோவையில் தீபாவளி கொண்டாட்டம்கோவையில் தீபாவளி கொண்டாட்டம்கோவையில் தீபாவளி கொண்டாட்டம்கோவை... மேலும் பார்க்க

Silent Diwali: பல ஆண்டுகளாக பட்டாசுகளே வெடிக்காத தமிழக கிராமங்கள் பற்றி தெரியுமா?

தீபாவளி பண்டிகை என்றால் பட்டாசுகள்தான் நினைவுக்கு வரும். ஆனால், தமிழ்நாட்டில் சில கிராமங்கள் பட்டாசுகளைத் தவிர்த்து, சத்தமின்றி தீபாவளியைக் கொண்டாடி வருகின்றன. இந்த 'அமைதியான தீபாவளி' மூலம் பறவைகள் மற... மேலும் பார்க்க

தேனியில் வரலாறு காணாத கனமழை; சாலைகளில் ஓடிய வெள்ளநீர் - முழு ரிப்போர்ட்

இடுக்கி, கம்பம் பகுதிகளில் நேற்று முன்தினம் மிக கனமழை பெய்ததால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக சுருளி ஆறு, கொட்டக்குடி ஆறு, மூல வைகை ஆறு, முல்லை பெரியாறில் வந்த வெள்ளநீர் ஆற்றின் கர... மேலும் பார்க்க

கனமழை எதிரொலி: தேனியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்; முல்லைப்பெரியாறு அணையில் உபரி நீர் திறப்பு!

கேரளா மாநிலம் இடுக்கி மற்றும் வருசநாட்டில் பலத்த மழை பெய்து வருவதால் தேனியில் உள்ள மூலவைகையாறு மற்றும் முல்லை பெரியாறில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.இதனால் தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள உத்தமபாளையம் ... மேலும் பார்க்க