செய்திகள் :

'சம்பளமே வேண்டாம்; மக்களுக்காக வேலை செய்றோம்!' - போராடிய தூய்மைப் பணியாளர்கள்; கைது செய்த காவல்துறை!

post image

சென்னையில் மண்டலங்கள் 5 மற்றும் 6 அலுவலங்களின் அருகே சாலைகளை சுத்தம் செய்து போராடிய தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

தூய்மைப் பணியாளர்களை கைது செய்யும் காவல்துறையினர்
தூய்மைப் பணியாளர்களை கைது செய்யும் காவல்துறையினர்

கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை ரிப்பன் பில்டிங்குக்கு வெளியே பணி நிரந்தரம் வேண்டியும் தனியார்மயமாக்கலை எதிர்த்தும் 13 நாட்களாக போராடிய தூய்மைப் பணியாளர்களை நள்ளிரவில் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரம் சம்பந்தமான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில், தூய்மைப் பணியாளர்கள் வெவ்வேறு வழிகளில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களின் வீடுகளில் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போதும் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அல்லிக்குளம், உழைப்பாளர் சிலை, எக்மோர் மணியம்மை சிலை ஆகியவற்றின் அருகேயும் தொடர் போராட்டங்களை நடத்தி கைதாகி வந்தனர். இந்நிலையில், இன்று மண்டலங்கள் 5,6 ஆகியவற்றின் அலுவலகங்கள் அருகே சாலைகளை சுத்தம் செய்து தங்களை பணியில் சேர்த்துக் கொள்ளுமாறு கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மண்டபத்தில் அடைக்கப்பட்டிருக்கும் தூய்மைப் பணியாளர்கள்
மண்டபத்தில் அடைக்கப்பட்டிருக்கும் தூய்மைப் பணியாளர்கள்

மழைக்காலம் வருவதால் மக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு 31.07.2025 தேதிய நிலையிலேயே தங்களை பணியில் எடுக்குமாறு கோரினர். சம்பளம் கூடல் இல்லாமல் மக்களுக்காக பணியாற்ற தயாராக இருக்கிறோம் என்றும் கூறினர்.

சாலைகளை சுத்தம் செய்து போராடிய பெண் தூய்மைப் பணியாளர்களை கைது செய்து அரும்பாக்கம், மதுரவாயில் ஆகிய இடங்களில் உள்ள திருமண மண்டபங்களிலும் சமூக நலக்கூடங்களிலும் அடைத்து வைத்திருக்கின்றனர்.

SIR Row : 'கொளத்தூரில்19476 வாக்காளர்கள் சந்தேகத்துக்குரியவர்கள்’ - BJP ஏ.என்.எஸ் பிரசாத் | களம் 03

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)செய்தி தொடர்பாளர்: தமிழக பாஜககட்டுரையாளர்: ஏ.... மேலும் பார்க்க

Bihar: ``இன்னொரு வாய்ப்பு கொடுங்கள்; என் குடும்பத்துக்காக எதையும் செய்ததில்லை" - நிதிஷ் கோரிக்கை

பீகார் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. இதில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க-வும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் தலா 101 இடங்களில் போட்... மேலும் பார்க்க

நீக்கிய EPS, பயம்காட்டும் Sengottaiyan-ன் Next Move! ADMK War! | Elangovan Explains

செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கி உள்ளார் எடப்பாடி. இதையொட்டி, 'எடப்பாடி முதலமைச்சராக காரணமே நான்தான் என்றும், கொடநாடு ஏ1 எடப்பாடி' என்றும் கடுமையான அட்டாக். இதற்கு, அம்மா ஜெ-வால் பதவி பறிக்கப்பட்ட... மேலும் பார்க்க

``திமுக ஆட்சி முடிய இன்னும் 140 நாள்கள் தான், கவுண்டவுன் ஸ்டார்ட்'' - நயினார் நாகேந்திரன் விமர்சனம்

தஞ்சாவூர் பெரியகோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா நடைபெற்று வருகிறது. கோயிலுக்கு அருகாமையில் உள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது சதய விழாவின் முக்கிய நிகழ்வா... மேலும் பார்க்க

10 பேர் பலி: ``இது முதல்முறையல்ல, அரசின் அலட்சியமே'' - ஆந்திரா நெரிசல் குறித்து ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் காசிபுகா பகுதியில் வெங்கடேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. ஏகாதசியை முன்னிட்டு இன்று கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடினர். அதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சுமார் 10 ப... மேலும் பார்க்க