செய்திகள் :

சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் விலகல்!

post image

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரிலிருந்து காயம் காரணமாக பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் ஃபகர் ஸமான் விலகியுள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நேற்று (பிப்ரவரி 19) தொடங்கியது. தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி பாகிஸ்தானை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியின்போது, பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஃபகர் ஸமானுக்கு காயம் ஏற்பட்டது.

தசைப்பகுதியில் ஏற்பட்ட வலியின் காரணமாக ஃபகர் ஸமான் கிட்டத்தட்ட ஒரு இன்னிங்ஸ் முழுவதும் ஃபீல்டிங்குக்கு வரவில்லை. தொடக்க ஆட்டக்காரராகவும் அவர் களமிறங்கவில்லை. அவருக்குப் பதிலாக சௌத் ஷகீல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். 4-வது வீரராக களமிறங்கிய ஃபகர் ஸமான் பேட்டிங்கின்போது, மிகுந்த சிரமப்பட்டார். அவர் 41 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார்.

இதையும் படிக்க: ரோஹித் தவறவிட்ட கேட்ச்..! ஹாட்ரிக் விக்கெட்டை இழந்த அக்‌ஷர் படேல்!

ஃபகர் ஸமான் விலகல்

காயம் காரணமாக போட்டியின்போது சிரமமடைந்த ஃபகர் ஸமான், சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால், சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து விலகுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபகர் ஸமானுக்குப் பதிலாக பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான இமாம் உல் ஹக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து விலகியுள்ள ஃபகர் ஸமானுக்குப் பதிலாக இமாம் உல் ஹக் மாற்று வீரராக பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!

சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து விலகியது குறித்து ஃபகர் ஸமான் அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: துரதிருஷ்டவசமாக, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து நான் விலகியுள்ளேன். ஆனால், அல்லா எனக்காக நல்ல திட்டங்களை கண்டிப்பாக வைத்திருப்பார். சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்ததற்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். வீட்டிலிருந்தபடியே பாகிஸ்தான் அணிக்கு எனது ஆதரவை அளிப்பேன் எனப் பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணி வருகிற பிப்ரவரி 23 ஆம் தேதி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் இல்லை: பாக். முன்னாள் வீரர்

பாகிஸ்தானைக் காட்டிலும் இந்திய அணியில் அதிக அளவிலான போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துப... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கான அழுத்தத்தில் இருக்கிறோமா? பாக். வீரர் பதில்!

மற்ற அணிகளுக்கு எதிரான போட்டியைப் போன்றே இந்தியாவுக்கு எதிரான போட்டியையும் பார்ப்பதாக பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப் தெரிவித்துள்ளார்.வழக்கமாக இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே ரசிகர்க... மேலும் பார்க்க

மனைவியைப் பிரிந்தார் சஹால்..! ரூ.60 கோடி ஜீவனாம்சம் கேட்டாரா தனஸ்ரீ வர்மா?

இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மா இருவரும் பரஸ்பர முறையில் விவகாரத்து பெற்று பிரிவதாக முடிவெடுத்துள்ளனர். இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர... மேலும் பார்க்க

ரியான் ரிக்கல்டான் சதம், மூவர் அரைசதம்; ஆப்கானிஸ்தானுக்கு 316 ரன்கள் இலக்கு!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்கள் குவித்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொட... மேலும் பார்க்க

மீண்டும் இந்திய அணியின் சீருடையில் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங்!

10 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட இடைவெளிக்குப் பிறகு சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங் இருவரும் இந்திய அணியின் சீருடையில் களமிறங்கவுள்ளனர்.சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் நாளை (பிப்ரவரி 22... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: மீண்டும் அணியில் இணைந்த இங்கிலாந்து இளம் விக்கெட் கீப்பர்!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து இளம்வீரர் ஜேமி ஸ்மித்துக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி தொ... மேலும் பார்க்க